Book of ஆமோஸ் in Tamil Bible

  1. ஆமோஸ் - "சமூக நீதிக்கான அழைப்பு; ஏழைகளுக்கான நீதி"

    1. அமைப்பு:

    ஆமோஸின் புத்தகம், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இன்றைய உலகிற்குத் தேவையான அநேக நடைமுறைக் காரியங்களை உடையதாக இருக்கிறது. இப்புத்தகத்தில் சொல்லப் பட்டிருப்பதுபோன்ற அநேக காரியங்களில், அநேகர் இப்பொழுதும் சிக்கியிருப்பதை நாம் பார்க்கிறோம். ஆமோஸில் சொல்லப்பட்டிருக்கும் அநேககாரியங்கள் வடராஜ்யமாகிய இஸ்ரவேல் தேசத்தில் நடைபெற்றவைகளாகும். இது கி.மு.767 முதல் 753ன் காலங்களுக்கு உட்பட்டதாக இருக்கிறது. யூதாவின் ராஜாவாகிய உசியா, மற்றும் இஸ்ரவேலின் ராஜாவாகிய 2ஆம் யெரொபெயாமின் நாட்களின்போது, தாம் ஊழியம்செய்ததாக ஆமோஸே சொல்வதால், இந்தக்காலத்தை நாம் அறிந்துகொள்கிறோம். உசியா ராஜாவின் ஆட்சிக்காலம் கி.மு.767 முதல் 739 ஆகும். 2ஆம் ரெகொபெயாமின் ஆட்சிக்காலம் கி.மு.782 முதல் 753 ஆகும்.

    எலிசாவின் ஊழியத்திற்கு 50 ஆண்டுகள் கழித்து, யோவேல், யோனா தீர்க்கதரிசிகளுக்குச் சற்று பிறகு, ஓசியா தீர்க்கதரிசனம் உரைக்க ஆரம்பிக்கத் துவங்கின நாட்களில், மீகா, மற்றும் ஏசாயாவுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆமோஸ் ஊழியம் செய்தார். இஸ்ரவேல் தேசம் மிகுந்த செழிப்பையும், ஆசீர்வாதத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்த காலத்தில், மக்கள் சுகபோகத்தோடு வாழ்ந்து உலகப்பிரகாரமாக, சொத்துக்களைச் சேர்த்தல், பொருட்களை வாங்குதல் என்பவைகளில் அதிகமாக மூழ்கிக் கொண்டிருந்தார்கள்.

    ஆமோஸ் 3: 15 மாரிகாலத்து வீட்டையும், கோடைகாலத்து வீட்டையும் அழிப்பேன், அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும், பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

    மற்றொரு பக்கத்தில் இஸ்ரவேலின் இராணுவம் மிகவும் வலிமைவாய்ந்த நிலையில் இருந்துகொண்டிருந்தது, இந்த நாட்களில் அசீரியா, பாபிலோன், சீரியா மற்றும் எகிப்தின் இராணுவங்கள் மிகவும் பெல வீனமானவைகளாக இருந்துகொண்டிருந்தன. ஆகவே அண்டைநாடுகளின் தாக்குதலைக்குறித்த எந்தவிதமான பயமும் அவர்களுக்கு இல்லை. வசதிகளும், சுகபோகமும் இஸ்ரவேல் மக்களை ஒழுக்கக்கேட்டிற்கும், அநியாயங்களுக்கும் நடத்திச்சென்றது. இப்படிப்பட்ட காரியம் இன்றைக்கும் உலகத்தில் காணப்படுகிறது உண்மைதானே!

    ஆமோஸ் 6: 4-7 தந்தக் கட்டில்களில் படுத்துக்கொண்டு, தங்கள் மஞ்சங்களின்மேல் சவுக்கியமாய்ச் சயனித்து, மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகளையும், மாட்டுத்தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகளையும் தின்று, 5. தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப்போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி, 6. பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து, சிறந்த பரிமளதைலங்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள், ஆனாலும் யோசேப்புக்கு நோிட்ட ஆபத்துக்குக் கவலைப் படாமற்போகிறார்கள். 7. ஆகையால் அவர்கள் சிறையிருப்புக்குப் போகிறவர்களின் முன்னணியிலே போவார்கள், இப்படியே செல்வமாய்ச் சயனித்தவர்களின் விருந்து கொண்டாடல் நின்றுபோகும்.

    இந்தச் சூழலில், வரவிருந்த பேரழிவைக்குறித்து ஆமோஸ் முன்னறிவித்ததை மக்களால் கற்பனைசெய்துகூடப் பார்க்கமுடியவில்லை. ஆனால், ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைத்த காரியங்கள், 30 ஆண்டுகளில் நிறைவேறுதலுக்கு வந்தது.

    2. தீர்க்கதரிசி ஆமோஸ்:

    ஆமோஸ் ஒரு பிரபல்யமான நபரல்ல, மாறாக ஆடுமேய்ப்பவனாகவும், விவசாயியாகவும் வாழ்ந்துகொண்டிருந்தார். அப்படிப்பட்ட நபரைத் தீர்க்தரிசன ஊழியத்திற்கு அழைத்து தேவன் பயன்படுத்தினார்.

    ஆமோஸ் 1: 1 தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய குமாரனாகிய எரொபெயாமின் நாட்களிலும், பூமிஅதிர்ச்சி உண்டாக இரண்டு வருஷத்துக்கு முன்னே, இஸ்ரவேலைக்குறித்துத் தரிசனங்கண்டு சொன்ன வார்த்தைகள்.

    ஆமோஸ் 7: 14 ஆமோஸ் அமத்சியாவுக்குப் பிரதியுத்தரமாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல, நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப் பழங்களைப் பொறுக்குகிறவனுமாய் இருந்தேன்.

    தெக்கோவா என்பது பெத்லகேமிற்குத் தெற்கே 5 மைல், எருசலேமற்குத் தெற்கே 10 மைல் தொலைவில் உள்ள மலையிலிருக்கும் ஒரு கிராமமாகும். இதுகள் ஆடுகள் பெருகத்திற்குப் பேர்போன இடமாக இருந்தது. தேக்கோவா ஊர் மேய்ப்பர் என்றால் அவர்களை புண் படுத்துதலுக்கேதுவான அழைப்பாகும், காரணம் அந்த ஊரின் ஆட்டுத்தோல்கள் தரமற்றவைகளாக இருந்ததால், மற்ற ஊர்க்காரர்கள் இவர்களை அற்பமாகப் பார்த்தார்கள். இவ்வாறு அற்பமாகப் பார்க்கப்பட்ட ஒரு ஆடுமேய்க்கிறவனை, செழிப்பில் மிதந்துகொண்டிருந்த தேசத்திற்குச் சென்று, அதற்கு விரோதமாக நியாயத் தீர்ப்பைக்குறித்து தீர்க்கதரினசம் உரைப்பாயாக என்று தேவன் அனுப்புகிறார். ஆமோஸ் தன் ஊழியத்தை ஆரம்பித்து தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பித்தபோது, அங்கிருந்த செல்வந்தர்களும், சுகபோகமாக வாழ்ந்தவர்களும் அவரை எவ்வாறு பார்த்திருப்பார்கள் என்று யோசித்துப்பாருங்கள். அவர்களிடம் பக்திச்செயல்கள் இருந்தன. பெத்தேலுக்கும் கில்காலுக்கும் சென்று பலிசெலுத்தினார்கள். ஆனால் அவர்களிடம் நீதிச்செயல்கள் இல்லை.

    ஆமோஸ் 5: 11,23 நீங்கள் தாித்திரனை மிதித்து, அவன் கையிலே தானியத்தைச் சுமை சுமையாய் வாங்குகிறபடியினால், நீங்கள் பொளிந்த கற்களால் வீடுகளைக் கட்டினீர்கள், ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை, இன்பமான திராட்சத் தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை. 23. உன் பாட்டுகளின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று, உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன்.

    இன்றைக்கும் தேவன் அழைத்துப் பயன்படுத்தும் நபர்களும், தேவன் அவர்களை அனுப்புகிற மக்கள் கூட்டமும் இதேபோல இருப்பதை நாமும் பார்க்கிறோமல்லவா? ஆனாலும், ஆமோஸ் சொன்னபடியே பூமியதிர்ச்சி வந்ததைக்குறித்து நாம் துல்லியமாக அறியமுடிகிறது, ஆனால் அந்தப் பூமியதிர்ச்சி எந்த வருடத்தில் நடந்தது என்ற நமக்குத் துல்லியமாகத் தெரியவில்லை. ஆனாலும் 240 ஆண்டுகளுக்குப் பிறகும் அது அடையாளமாகச் சுட்டிக்காட்டப்படுதலை சகரியாவின் புத்தகத்தில் வாசிக்கிறோம்.

    சகரியா 14: 5 அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள், மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும், நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள், என் தேவனாகிய கர்த்தர் வருவார், தேவாிரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.

    ஆமோஸ் மூலமாச் சொல்லபட்ட தீர்க்கதரிசனத்தின்படி நடந்த பூமியதிர்ச்சியின்போது, ஒரு மலையே பாதியாகப் பிளவுபட்டு, கிழக்கே ஒன்றரை மைல் தொலைவிற்குப் பெயர்ந்துபோயிருந்ததாம். இதைக்குறித்து, இது ஆசாரியர்கள் உசியாவைக் கண்டித்த சமயத்தில் நடைபெற்றது என்று ஜொசேப்பஸ் என்ற யூதசரித்திர ஆய்வாளர் சொல்கிறார்.

    2நாள்-26: 16-21 அவன் (உசியா ராஜா) பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல்செய்து, தூபபீடத்தின்மேல் தூபங்காட்டக் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான். 17. ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடேகூடக் கர்த்தரின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பிறகே உட்பிரவேசித்து, 18. ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்துநின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல, தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும், பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியே போம், மீறுதல்செய்தீர், இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது என்றார்கள். 19. அப்பொழுது உசியா கோபங்கொண்டான், அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடே கோபமாய்ப் பேசுகிறபோது, ஆசாரியருக்கு முன்பாகக் கர்த்தருடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே குஷ்டரோகம் தோன்றிற்று. 20. பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் சகல ஆசாரியரும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே குஷ்டரோகம் பிடித்தவனென்று கண்டு, அவனைத் தீவிரமாய் அங்கேயிருந்து வெளிப் படப்பண்ணினார்கள், கர்த்தர் தன்னை அடித்ததினால் அவன் தானும் வெளியே போகத் தீவிரப்பட்டான். 21. ராஜாவாகிய உசியா தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, கர்த்தருடைய ஆலயத்துக்குப் புறம்பாக்கப் பட்டபடியினால், ஒரு தனித்த வீட்டிலே குஷ்டரோகியாய் வாசம்பண்ணினான், அவன் குமாரனாகிய யோதாம் ராஜாவின் அரமனை விசாரிப்புக் காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம்விசாரித்தான்.

    இதன் அடிப்படையில் பார்த்தால், பூமியதிர்ச்சி வந்ததற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாக, கி.மு.752ல் ஆமோஸின் புத்தகம் கணக்கிடப்படலாம்.

    3. செய்தி:

    8 தேசங்களைக்குறித்த மூன்று பாதகங்கள், நாலு பாதங்கள் என்ற நீண்ட செய்தியை ஆமோஸ் ஆரம்பித்தார்.

    ஆமோஸ் 1: 3 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தமஸ்குவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன், அவர்கள் கீலேயாத்தை இருப்புக் கருவிகளினால் போரடித்தார்களே. (1: 6, 9, 11, 2: 1, 4, 6)

    மூன்று, நான்கு என்ற இதேபோன்ற பதங்களை ஆமோஸ் திரும்பத்திரும்பப் பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம். அழுதத்ததைக் குறிப்பதற்காக இப்படிச்சொல்கிறார் என்று சிலர் கருதுகிறார்கள், நான்காவது பாவத்தை முக்கியப்படுத்துவதற்காக, அதைத் தனித்துக் குறிப்பிட்டிருக்கிறார் என்று சிலர் கருதுகிறார்கள். மூன்றையும் நான்கையும் கூட்டி 7 என்ற முழுமையைக் குறிப்பதற்காக இப்படிச் சொல்கிறார் என்றும் சிலர் கருதுகிறார்கள்.

    உதாரணத்திற்கு:

    யோபு 5: 19 ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை நீங்கலாக்குவார், ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.

    எதுவாக இருந்தாலும் சரி, வலியுறுத்திக் கூறுவதற்காக அவ்வாறு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். சிங்கம் (தேவன்) ஒவ்வொரு பகுதிக்கும் விரோதமாகச் கெர்ச்சிக்கிறது, முதலாவது சீரியாவின் தலைநகரமாகிய தமஸ்கு ஒன்றுமில்லாமல் போகிறது, இரண்டாவதாக பெலிஸ்தியர்களின் முக்கிய நகரமாகிய காசா முடிவிற்கு வருகிறது, அடுத்து தீரு அழிக்கப்படுகிறது, அதற்கடுத்து ஏதோம் பாழாக்கப்படுகிறது, தொடர்ந்து அம்மோன் அழிக்கப்படுதல், மோவாப் அழிக்கப்படுதல் நடைபெறுகிறது.

  1. அடுத்ததாக, யூதாவுக்கும் இறுதியில் இஸ்ரவேலுக்கும் விரோதமாக வருகிறது. சொல்லப்பட்ட இவைகள் 40 ஆண்டுகளுக்குள் நிறைவேறுதலுக்குள் வந்தன.

    8 தேசங்களின் பாவங்களும் தண்டனையும் நிறைவேறுதலும்:

    1. தமஸ்கு (சீரியா):

    பாவம்: கொடூரம் 1: 3 அவர்கள் கீலேயாத்தை இருப்புக் கருவிகளினால் போரடித்தார்களே.

    தண்டனை: 1: 5 அப்பொழுது சீரியாவின் ஜனங்கள் கீருக்கு (இன்றைய வடக்கு ஈராக்) சிறை பட்டுப்போவார்கள்.

    நிறைவேறியது: இது கி.மு.732ல் நிறைவேறியது.

    1. காசா:

    பாவம்: சதித்திட்டம் 1: 6 அவர்கள் சிறைப்பட்டவர்களை ஏதோமியரிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுதும் சிறையாக்கினார்களே.

    தண்டனை: 1: 8 சங்காரம்பண்ணி, பெலிஸ்தரில் மீதியானவார்கள் அழியும்படிக்கு என் கையை எக்ரோனுக்கு விரோதமாகத் திருப்புவேன்.

    நிறைவேறியது: கி.மு.734ல் அசீரியர்களாலும், கி.மு.168 முதல் 134ல் மக்கபேயர்களாலும் இது நிறைவேறியது.

    1. தீரு (இன்றைய தென் லெபனான்):

    பாவம்: உடன்படிக்கையை மறந்து சகோதரரைத் தீங்குக்குட்படுத்துதல் 1: 9 அவர்கள் சகோதரரின் உடன்படிக்கையை நினையாமல், சிறைப்பட்டவர்களை முழுதும் ஏதோமியர் கையில் ஒப்பித்தார்களே.

    தண்டனை: 1: 10 தீக்கொளுத்துவேன், அது அதின் அரமனைகளைப் பட்சிக்கும்.

    நிறைவேறியது: இது கி.மு.332ல் மகாஅலெக்ஸாண்டர் 7 மாதங்களுக்கு அதைச் சிறைப்பிடித்து, அதிலிருந்த 6000 நபர்களைக் கொன்று, 2000 பேரைச் சிலுவையில் அறைந்து, 30,000 பேரை அடிமைகளாக விற்றபோது நிறைவேறியது.

    1. ஏதோம் (தெற்கு யோர்தான் மற்றும் சவுதி அரேபியா):

    பாவம்: இரக்கமின்றிக் கொல்லுதல் 1: 11 அவன் தன் சகோதரனைப் பட்டயத்தோடே தொடர்ந்து, தன் மனதை இரக்கமற்றதாக்கி, தன் கோபத்தினாலே என்றைக்கும் அவனைப் பீறிப்போட்டு, தன் மூர்க்கத்தை நித்தியகாலமாக வைத்திருக்கிறானே.

    தண்டனை: 1: 12 தேமானிலே தீக்கொளுத்துவேன், அது போஸ்றாவின் அரமனைகளைப் பட்சிக்கும்.

    நிறைவேறியது: அசீரியா இதைக் கீழ்ப்படுத்தியபோது இது நிறைவேறியது. (போஸ்றா: இன்றைய சவுதி அரேபியாவின் தலைநகர்)

    1. அம்மோன் (இன்றைய வடக்கு யோர்தான்):

    பாவம்: பேராசை 1: 13 அவர்கள் தங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்கும் படிக்குக் கீலேஆதியாகமம் தேசத்தின் கர்ப்பஸ்திரிகளைக் கீறிப்போட்டார்களே.

    தண்டனை: 1: 15 அவர்களுடைய ராஜாவும், அவனுடைய அதிபதிகளும் சிறைப்பட்டுப் போவார்கள்.

    நிறைவேறியது: இது கி.மு.734ல் ஆசீரியா தன் கட்டுப்படடை எடுத்தபோது நிறைவேறியது.

    1. மோவாப் (இன்றைய மத்திய யோர்தான்):

    பாவம்: பழிவாங்குதல் 2: 1 அவன் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளை நீறாகச் சுட்டுப்போட்டானே.

    தண்டனை: 2: 2-3 மோவாப்தேசத்தில் தீக்கொளுத்துவேன், அது கீரியோத்தின் அரமனைகளைப் பட்சிக்கும், மோவாபியர் அமளியோடும் ஆர்ப்பரிப்போடும் எக்காள சத்தத்தோடும் சாவார்கள். 3. நியாயாதிபதியை அவர்கள் நடுவில் இராதபடிக்கு நான் சங்காரம்பண்ணி, அவனோடேகூட அவர்களுடைய பிரபுக்களையெல்லாம் கொன்றுபோடுவேன்.

    நிறைவேறியது: இதுவும் கி.மு.734ல் அசீரியாவால் நிறைவேறியது.

    1. யூதா:

    பாவம்: தேவனுடைய வேதத்தை மறந்தது 2: 4 அவர்கள் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்கள் பிதாக்கள் பின்பற்றின பொய்களினால் மோசம்போனார்களே.

    தண்டனை: 2: 5 யூதாவிலே நான் தீக்கொழுத்துவேன், அது எருசலேமின் அரமனைகளைப் பட்சிக்கும்.

    நிறைவேறியது: இது கி.மு. 586ல் பாபிலோன் தன் கட்டுப்பாட்டை எடுத்தபோது நிறைவேறியது. (தேவனுடைய வார்த்தையைப் பெற்று, அதை அறிந்தும் நாம் அதைக் கைக்கொள்ளத் தவறும்போது, அது நமக்கு நல்லதல்ல).

    (முதலாவதாக, பாவம்செய்த மற்ற தேசங்களைக்குறித்து தேவன் நியாயந்தீர்ப்பாரானால், இஸ்ரவேலே உங்களையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று ஆமோஸ் சொல்ல ஆரம்பிக்கிறார்.)

    1. இஸ்ரவேல்:

    பாவம்: தேவஜனங்களை மோசமாக நடத்துதல்: 2: 6-8,12 அவர்கள் நீதிமானைப் பணத்துக்கும், எளியவனை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் விற்றுப்போட்டார்களே. 7. அவர்கள் தரித்திரருடைய தலையின்மேல் மண்ணைவாரி இறைத்து, சிறுமையானவர்களின் வழியைப் புரட்டுகிறார்கள், என் பரிசுத்த நாமத்தைக் குலைச்சலாக்கும்படிக்கு மகனும் தகப்பனும் ஒரு பெண்ணிடத்தில் பிரவேசிக்கிறார்கள். 8. அவர்கள் சகல பீடங்களருகிலும் அடைமானமாய் வாங்கின வஸ்திரங்களின்மேல் படுத்துக்கொண்டு, தெண்டம் பிடிக்கப் பட்டவர்களுடைய மதுபானத்தைத் தங்கள் தேவர்களின் கோவிலிலே குடிக்கிறார்கள். 12. நீங்களோ நசரேயருக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள்.

    தண்டனை: 2: 14-16 அப்பொழுது வேகமானவன் ஓடியும் புகலிடமில்லை, பலவான் தன் பலத்தினால் பலப்படுவதுமில்லை, பராக்கிரமசாலி தன் பிராணனைத் தப்புவிப்பதுமில்லை. வில்லைப் பிடிக்கிறவன் நிற்பதுமில்லை, வேகமானவன் தன் கால்களால் தப்பிப்போவதுமில்லை, குதிரையின்மேல் ஏறுகிறவன் தன் பிராணனை இரட்சிப்பதுமில்லை. 16. பலசாலிகளுக்குள்ளே iதாியவான் அந்நாளிலே நிர்வாணியாய் ஓடிப்போவான் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

    நிறைவேறியது: இது கி.மு.722ல் அசீரியா தன் கட்டுப்பாட்டை எடுத்தபோது நிறைவேறியது.

    ஆமோஸின் புத்தகம் பாவங்களின் பட்டியலோடு ஆரம்பித்து, நம்பிக்கையோடு முடிகிறது. திரும்பத்திரும்ப மீறுதலுக்குள் செல்லுதல், நியாயத்தீர்ப்புக்கு நடத்திச்செல்லும் என்பதை இந்தப் புத்தகம் கற்றுக்கொடுக்கிறது.

    ஆமோஸ் புத்தகம் எதைப் பற்றியது?

    உங்களுக்கு எதில் அக்கறை? நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் ஏதேனும் உண்டா ?

    ஆமோஸ் புத்தகம் இந்தக் கேள்விகளைக் கேட்கிறது.

    ஆமோஸ் ஒரு வகையான மேய்ப்பனாக இருந்தான் - ஒரு கிராமப்புற மனிதன், நீண்ட காலத்திற்கு முன்பு இஸ்ரவேலின் வடக்கு ராஜ்ஜியத்துடன் பேச கடவுளால் அனுப்பப்பட்டான். இஸ்ரவேல் மக்கள் செழிப்பு, ஆறுதல் மற்றும் வெற்றியை அனுபவித்தனர். அவர்கள் வெளியில் மத ரீதியாக சுத்தம் செய்யப்பட்டனர் - பண்டிகைகளைக் கொண்டாடுதல், சில புனித நாட்களைக் கௌரவித்தல், ஞாயிற்றுக்கிழமையைத் தவறவிடாமல் இருத்தல் ( ஆமோஸ் 4:4-5 ).

    அவர்கள் தோற்றத்தில் இருந்தபோதிலும், அவர்களின் இதயங்கள் கடவுளிடமிருந்து வெகு தொலைவில் இருந்தன. பொருள் வசதிகள் அவர்களின் இதயங்களை விழுங்கின, மேலும் அவர்கள் கவலைப்பட வேண்டியதைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்திவிட்டார்கள் - நீதி ( ஆமோஸ் 6:1-7 ).

    அவர்கள் ஆண்டவருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்கவில்லை ( ஆமோஸ் 2:4 ). அவருடைய சட்டத்தையும் அதிகாரத்தையும் அவர்கள் நிராகரித்தார்கள் ( ஆமோஸ் 2:8 ). ஆகையால், அவருடைய இருதயத்தை - அவர் எதைப் பற்றி அக்கறை கொள்கிறார் என்பதை - அவர்கள் மறந்துவிட்டார்கள். அவர்கள் ஒதுக்கப்பட்டவர்களை மறந்துவிட்டார்கள், ஏழைகளையும் ஒடுக்கப்பட்டவர்களையும் மதிக்கவில்லை ( ஆமோஸ் 2:7; 4:1 ).

    தேவன் அவர்களுடைய இதயமற்ற மதத்திற்கு பதிலளிக்கும் விதமாக, தம் காதுகளை மூடிக்கொள்வார்: “உங்கள் பாடல்களின் சத்தத்தை என்னிடத்திலிருந்து எடுத்துவிடு; உங்கள் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன். ஆனால் நீதி தண்ணீரைப் போலவும், நீதி வற்றாத நதியைப் போலவும் புரண்டு வரட்டும்” ( ஆமோஸ் 5:23-24 ESV).

    வேதாகமத்தின் தேவன் அநீதியை பொறுத்துக்கொள்ள மாட்டார் என்பதை ஆமோஸ் நமக்குக் காட்டுகிறார். இஸ்ரவேல் மக்களுக்கு நாடுகடத்தப்படுவதைப் பற்றி தீர்க்கதரிசனம் சொல்ல அவர் ஆமோஸை அனுப்பினார் ( ஆமோஸ் 6:7; 7:10, 17 ). கிமு 722 இல், அவர் வாக்குறுதியளித்தபடி, அவர்களின் பாவத்திற்காக இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தை அழிக்க தேவன் அசீரியாவை அனுப்பினார். தேவன் அவர்களின் அடக்குமுறையை ஒடுக்குதலாலும், அவர்களின் அநீதியை காயத்தாலும் நியாயமாகத் திருப்பித் தருவார்.

    தேவன் தம் மக்களை அவர்களுடைய சொந்த ஆசைகளுக்கு ஒப்படைப்பதன் மூலம் தண்டிப்பார்: அவர்கள் அவருடைய சட்டத்தை விரும்பவில்லை, எனவே அவர் அதை அவர்களிடமிருந்து மறைப்பார் ( ஆமோஸ் 8:11 ). அவர்கள் "கடல் முதல் கடல் வரை அலைந்து திரிந்து, கர்த்தருடைய வார்த்தையைத் தேடி வடக்கிலிருந்து கிழக்கு வரை அலைந்து திரிவார்கள், ஆனால் அதைக் கண்டுபிடிக்க மாட்டார்கள்" ( ஆமோஸ் 8:12 NIV). இஸ்ரவேலின் 400 ஆண்டுகால வரலாற்றில் தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பவில்லை. தேவன் தம் மக்களை கற்பனை செய்ய முடியாத மிக மோசமான தண்டனையால் தண்டித்தார்: அவருடைய வார்த்தை இல்லாத வாழ்க்கை.

    இருப்பினும், கடவுளின் அனைத்து நியாயத்தீர்ப்புகளிலும், நாம் ஒரு இரக்க வைரத்தைக் காண்கிறோம் - அவர் இஸ்ரவேல் வம்சத்தைத் தம்முடைய கோபத்தால் அசைத்தாலும், அதை முற்றிலுமாக அழிக்க மாட்டார் ( ஆமோஸ் 9:8 ). தேவன் ஒரு நாள் வீழ்ந்த இஸ்ரவேலின் துண்டுகளை எடுத்து, அனைத்து தேசங்களையும் உள்ளடக்கியதாக அதை மீண்டும் கட்டியெழுப்புவார் ( ஆமோஸ் 9:12 ).

    நேர்மையற்ற வழிபாட்டிற்கு எதிராக ஆமோஸ் நம்மை எச்சரிக்கிறார், மேலும் தேவன் அக்கறை கொண்டவற்றிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கிறார். நாம் எப்படி நீதிமான்களாக இருக்க முடியும், இஸ்ரேல் எப்போதாவது உண்மையிலேயே நீதியைத் தேடுமா என்று யோசிக்க வைக்கிறது. பைபிளில் வேறு எங்கும் பார்த்தால் இந்தக் கேள்விகளுக்கான பதிலைக் காணலாம்:

    ஆனால் இப்போது நியாயப்பிரமாணத்திற்குப் புறம்பாக தேவநீதி வெளிப்பட்டிருக்கிறது; நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகளும் அதற்குச் சாட்சிகொடுக்கிறார்கள்; விசுவாசிக்கிற யாவருக்கும் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதினாலே உண்டாகும் தேவநீதியே அது. ( ரோமர் 3:21-22 ESV)

    நாம் நீதிமான்களாக இருக்க முடியாது என்பதால், தேவன் நமக்கு நீதியைக் கொடுக்க வேண்டும். தேவன் ஒரு புதிய மதத்திற்கான நிபந்தனைகளை விதிக்கவில்லை, அவர் நமக்கு ஒரு நபரை - அவருடைய சொந்த மகனை - நம்பவும், அறியவும், தேடவும் கொடுத்தார். அவர் தம்முடைய வார்த்தையின் பஞ்சத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, மாம்சமாகிய தேவனுடைய வார்த்தையான இயேசுவை நமக்குக் கொடுத்தார் ( யோவான் 1:1, 14 ).

    இந்த இரட்சிப்புக்கு நாம் அன்பினால் பதிலளிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் - தேவன் மீதும் மற்றவர்கள் மீதும் அன்பு, கடவுளையும் மற்றவர்களையும் உரிய முறையில் மதிக்க வேண்டும். நம் இதயங்கள் அவருக்குச் சொந்தமானதாகவும், அவருடைய இதயங்களைப் போல துடிக்க வேண்டும் என்றும் தேவன் விரும்புகிறார்.

    உங்களுடைய ஆன்மீகம், சரியானதைச் செய்ய முயற்சித்தல், சரியானது எது, தவறு எது என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுதல் என அனைத்திற்கும், தேவன் எதிர்பார்க்கும் நீதி உங்களிடம் உள்ளதா? தேவன் நம்மிடமிருந்து விசுவாசத்தை விரும்புகிறார் - இயேசு கிறிஸ்துவை நம்புங்கள் , அவர் நமது நீதி ( ரோமர் 3:21-24 ). நம்முடைய எல்லா அநீதிகளுக்கும் மன்னிப்புக்காக நாம் அவரை நம்பும்போது, அவர் நம்மை நீதிமான்களாக்கும் வேலையைத் தொடங்குகிறார், ஆனால் பின்னர் நம்மை நீதிமான்களாகவும், ஒதுக்கப்பட்டவர்களுக்கு உதவவும் உதவுகிறார்.

    ஆமோஸைத் திறந்து, கடவுளிடம் அவருடைய நீதியை உங்களுக்குத் தரும்படி கேளுங்கள் . பிறகு, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் புறக்கணித்திருக்கக்கூடிய, அவருடைய அன்பை அனுபவிக்க வேண்டிய நபர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று அவரிடம் கேளுங்கள்? இன்று நீங்கள் அவர்களை அன்பிலும் சேவையிலும் எவ்வாறு பின்தொடரலாம்?

    ஆமோஸின் பின்னணி என்ன?

    ஆசிரியர் மற்றும் தேதி

    ஆமோஸ் தொழிலால் ஒரு தீர்க்கதரிசி அல்ல (ஆமோஸ் 1:1; 7:14–15 ஐப் பார்க்கவும்) ஆனாலும், இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்திற்கு கர்த்தரிடமிருந்து ஒரு செய்தியைக் கொண்டு வரும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் கிமு 793–739 க்கு இடையில், அநேகமாக அந்தக் காலகட்டத்தின் இறுதிக்கு அருகில் தீர்க்கதரிசனம் உரைத்தார்.

    கருப்பொருள்

    ஆமோஸின் கருப்பொருள் கடவுளின் உலகளாவிய நீதி. இஸ்ரவேலர்கள் தங்கள் எதிரிகள் அனைவரும் நியாயந்தீர்க்கப்படும் ஒரு "கர்த்தருடைய நாளை " தெளிவாக எதிர்பார்த்தனர் (ஆமோஸ் 1:2–2:5). அவர்களும் நியாயந்தீர்க்கப்படுவார்கள் என்பதற்கு அவர்கள் தயாராக இல்லை (ஆமோஸ் 2:6–9:10). உண்மையில், அவர்கள் தங்கள் அண்டை வீட்டாரை விட அதிக பொறுப்புள்ளவர்களாக இருப்பார்கள்.

    நோக்கம், சந்தர்ப்பம் மற்றும் பின்னணி

    கிமு 780–745 க்குப் பிறகு, அசீரியப் பேரரசால் முந்தைய நூற்றாண்டில் கானானியக் கடற்கரையின் நாடுகள் மீது ஏற்படுத்திய அழுத்தத்தைத் தொடர முடியவில்லை. அதே நேரத்தில், யூதா மற்றும் இஸ்ரேல் இரண்டும் ஓரளவு நிலையான அரசாங்கங்களால் ஆசீர்வதிக்கப்பட்டன. இந்த இரண்டு காரணிகளின் விளைவாக, இரு நாடுகளும் (குறிப்பாக இஸ்ரேல்) செல்வம் மற்றும் செழிப்பு நிறைந்த காலத்தை அனுபவித்து வந்தன. ஆனால் இஸ்ரவேலர்கள் ஒரு புதிய "பொற்காலத்தின்" தொடக்கமாகக் கண்டது உண்மையில் அவர்களுக்கு முடிவாகும். கடவுளின் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைப் பற்றி அவர்களுக்குச் சொல்வது ஆமோஸின் துரதிர்ஷ்டவசமான பணியாகும். ஒரு சில ஆண்டுகளுக்குள் இஸ்ரேல் இனி ஒரு தேசமாக இருக்காது. கடவுளின் தகுதியற்ற கிருபையால் மட்டுமே அவர்கள் சிதறடிக்கப்பட்ட மக்களாகத் தொடர்ந்து இருப்பார்கள் ( ஆமோஸ் 9:11–15). " கர்த்தருடைய நாள் ", ஆசீர்வாதத்தின் நாளாக இருப்பதற்குப் பதிலாக, இருளின் நாளாக இருக்கப் போகிறது. கிமு 722 வாக்கில் அசீரியா அதன் பலத்தை மீண்டும் பெறும், இஸ்ரவேலர் கைப்பற்றப்பட்டு நாடுகடத்தப்படுவார்கள்.

    முக்கிய கருப்பொருள்கள்

    1. பிரபஞ்சத்தைப் படைத்தவர் இறைவன். எனவே, அவருடைய நெறிமுறை விதிமுறைகள் உலகளாவியவை, மேலும் அனைத்து மக்களும் அவற்றின் அடிப்படையில் தீர்ப்புக்கு உட்பட்டவர்கள்.

    2. மற்றவர்களை நடத்துவதில் நீதியும் நீதியும் இருப்பது இறைவனுடனான சரியான உறவின் முக்கிய சான்றுகளாகும்.

    3. சமூக நீதி இல்லாத நிலையில் மத அனுசரிப்புகள் ஆண்டவருக்கு அருவருப்பானவை.

    4. இஸ்ரவேலர்கள் கர்த்தருடன் செய்த உடன்படிக்கை, அவர்கள் அந்த உடன்படிக்கையை மீறியபோது அவர்களுக்கு சிறப்புப் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை. மாறாக, அவர்கள் உயர்ந்த தரத்திலான கீழ்ப்படிதலைக் கடைப்பிடிப்பார்கள் என்பதே இதன் பொருள்.

    5. எனவே, " கர்த்தருடைய நாள் " மனந்திரும்பாத இஸ்ரவேலருக்கு அற்புதமான விடுதலையின் காலமாக இருக்காது. மாறாக, அது பயங்கரமான அழிவின் காலமாக இருக்கும்.

    6. இஸ்ரவேலின் உண்மையுள்ள மீதியானோர் பாதுகாக்கப்படுவார்கள், ஒருநாள் மகிமையான மறுசீரமைப்பையும் ஆசீர்வாதத்தையும் காண்பார்கள்.

    சுருக்கம்

    I. மேல்குறிப்பு (1:1)
    II. நியாயத்தீர்ப்பின் முன்னறிவிப்புகள் (1:2–6:14)
    III. நியாயத்தீர்ப்பின் தரிசனங்கள் (7:1–9:15)

    ஆமோஸின் உலகளாவிய செய்தி

    ஆமோஸின் செய்தி, 2,700 ஆண்டுகளுக்கு முன்பு கடவுளின் மக்கள் மீது விழுந்ததைப் போலவே, இன்று உலகளாவிய திருச்சபையிலும் அதே வலிமையுடனும் அவசியத்துடனும் இறங்குகிறது. ஆமோஸின் முக்கிய கருத்து என்னவென்றால், தேவன் நீதியுள்ளவர், பாரபட்சமற்றவர், மேலும் மனித துன்பங்களுக்கு மத்தியில் அவர்களின் நிம்மதியான வாழ்க்கை மற்றும் அக்கறையின்மைக்காக தேசங்களை மட்டுமல்ல, அவருடைய சொந்த மக்களையும் நியாயந்தீர்ப்பார். இன்று உலகெங்கிலும் உள்ள வளமான நாடுகளுக்கு, குறிப்பாக அந்த நாடுகளில் உள்ள வளமான கிறிஸ்தவர்களுக்கு, ஆமோஸின் தீர்க்கதரிசனம் ஏழைகள் மற்றும் துன்பப்படுபவர்களுடன், குறிப்பாக கடவுளின் மக்களிடையே, தீவிரமாக ஈடுபடுவதற்கான தெளிவான அழைப்பாகும்.

    மீட்பு வரலாற்றில் ஆமோஸ்

    செழிப்பின் நோக்கம்

    தேவன் மனிதகுலத்தை செழிக்கவே படைத்தார். பாவம் உலகிற்குள் நுழைந்தபோது, பூமி சபிக்கப்பட்டது, இதனால் மனிதகுலத்தின் உழைப்பு மற்றும் கஷ்டங்கள் மூலம் மட்டுமே அவர்களின் வேலை பலனளிக்கும் (ஆதியாகமம் 3:17–19). இருப்பினும், அவரது மிகுந்த தயவில், அல்லது புதிய பூமியில் வரவிருக்கும் செழிப்பின் அறிகுறியாக, அல்லது அவரது மக்களை சோதிக்க, அல்லது பிற காரணங்களுக்காக, தேவன் பெரும்பாலும் மனிதர்கள் பொருள் செழிப்பில் செழிக்க அனுமதிக்கிறார். அத்தகைய செழிப்பு காலங்களில், கடவுளின் மக்கள் அவரது குணத்தை வெளிப்படுத்தவும், தேவைப்படுபவர்களுக்கு கருணை, இரக்கம் மற்றும் தாராள மனப்பான்மையை மகிழ்ச்சியுடன் வழங்கவும் அழைக்கப்படுகிறார்கள். தேவன் ஆபிரகாமை அழைத்தார், அவருடைய சந்ததியினர், இஸ்ரவேல் புத்திரர், உலக தேசங்களுக்கு ஒரு வெளிச்சமாக இருக்கும்படி, அத்தகைய கருணையையும் நீதியையும் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக (ஆதியாகமம் 12:1–3; ஆமோஸ் 3:2 ஒப்பிடுக).ஆதியாகமம் 3:17–19 ). ஆயினும்கூட, அவருடைய மிகுந்த தயவில், அல்லது புதிய பூமியில் வரவிருக்கும் செழிப்பின் குறிப்பாக, அல்லது அவரது மக்களை சோதிக்க, அல்லது வேறு காரணங்களுக்காக, தேவன் பெரும்பாலும் மனிதர்கள் பொருள் செழிப்பில் செழிக்க அனுமதிக்கிறார். அத்தகைய செழிப்பு காலங்களில், கடவுளின் மக்கள் அவருடைய குணத்தை வெளிப்படுத்தவும், தேவைப்படுபவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கருணை, இரக்கம் மற்றும் தாராள மனப்பான்மையை வழங்கவும் அழைக்கப்படுகிறார்கள். ஆபிரகாமின் சந்ததியினர், இஸ்ரவேல் புத்திரர், உலக தேசங்களுக்கு ஒரு வெளிச்சமாக இருக்கும்படி, அவர் அத்தகைய கருணையையும் நீதியையும் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தேவன் ஆபிரகாமை அழைத்தார் ( ஆதியாகமம் 12:1–3 ; ஆமோஸ் 3:2 ஒப்பிடுக ).

    இஸ்ரேலின் செழிப்பை தவறாகப் பயன்படுத்துதல்

    கி.மு. எட்டாம் நூற்றாண்டில், ஆமோஸின் தீர்க்கதரிசனத்தின் போது, இஸ்ரவேலிலும் யூதாவிலும் கடவுளின் மக்கள் பொருள் ரீதியாக செழித்து வளர்ந்தனர். இருப்பினும், இஸ்ரவேலின் வரலாறு முழுவதும் அடிக்கடி நடந்தது போல, அவர்கள் அழைக்கப்பட்டபடி ஒருவரையொருவர் நேசிக்கத் தவறிவிட்டனர் (ஆமோஸ் 3:10; 5:7, 12; 8:4). தேவன் இஸ்ரவேலை எகிப்திலிருந்து இரக்கத்தால் மீட்டார் (ஆமோஸ் 2:10; 3:1), இப்போது இஸ்ரவேலர்கள் அதற்கேற்ப ஒருவருக்கொருவர் இரக்கத்தால் நடந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும், கடவுளின் செழிப்பு என்ற பரிசில் சோம்பேறித்தனமாக ஈடுபட்டதால், அவர்கள் கடவுளை வணங்குவது வெறுமையாகிவிட்டது (ஆமோஸ் 5:21–23; ஆமோஸ் 4:4–5 ஒப்பிடுக) மேலும் ஒருவருக்கொருவர் இதயப்பூர்வமான அக்கறை வாடிப்போனது (ஆமோஸ் 2:6–7).ஆமோஸ் 3:10; 5:7, 12; 8:4 ). தேவன் எகிப்திலிருந்து இஸ்ரவேலை இரக்கத்தால் மீட்டுக் கொண்டார் ( ஆமோஸ் 2:10; 3:1 ), இஸ்ரவேலர் இப்போது ஒருவருக்கொருவர் இரக்கத்தால் நடந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும், சோம்பேறித்தனமாக கடவுளின் செழிப்பு என்ற பரிசில் ஈடுபட்டதால், அவர்கள் கடவுளை வணங்குவது வெறுமையாகிவிட்டது ( ஆமோஸ் 5:21–23 ; ஆமோஸ் 4:4–5 ஒப்பிடுக ) மேலும் ஒருவருக்கொருவர் உள்ளப்பூர்வமான அக்கறை வாடிப்போனது ( ஆமோஸ் 2:6–7 ).

    இஸ்ரவேலின் இரக்கமின்மைக்கான நியாயத்தீர்ப்பு

    இவை அனைத்தின் காரணமாகவும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நாடுகடத்துவார் (ஆமோஸ் 5:27; 7:17) மேலும் அவர்கள் மீது "கர்த்தருடைய நாளை " , அதாவது உச்சக்கட்ட நியாயத்தீர்ப்பின் நாளைக் கொண்டுவருவார். வேறு எந்த தீர்க்கதரிசியையும் விட, ஆமோஸ் இந்த வரவிருக்கும் நியாயத்தீர்ப்பு நாளை இருள் என்ற வார்த்தையில் விவரிக்கிறார். "கர்த்தருடைய நாள் உங்களுக்கு ஏன் வேண்டும் ? அது வெளிச்சமல்ல, இருள். . . . கர்த்தருடைய நாள் இருள் , வெளிச்சமல்ல, இருள், அதில் பிரகாசம் இல்லாத இருள் அல்லவா?" (ஆமோஸ் 5:18, 20; ஆமோஸ் 4:13; 5:8 ஐ ஒப்பிடுக). ஆமோஸின் முடிவில், இறுதி நியாயத்தீர்ப்பு நாளைப் பற்றி கர்த்தர் கூறுவதைக் கூட நாம் கேட்கிறோம், "நான் நண்பகலில் சூரியனை மறையச் செய்து, பகலில் பூமியை இருட்டடிப்பேன்" (ஆமோஸ் 8:9).ஆமோஸ் 5:27; 7:17 ) அவர்கள் மீது " ஆமோஸ் 5:18, 20 இன் நாளைக் கொண்டுவரும் ; ஆமோஸ் 4:13; 5:8 ஐ ஒப்பிடுக ). ஆமோஸின் முடிவில், இறுதி நியாயத்தீர்ப்பு நாளைப் பற்றி கர்த்தர் கூறுவதைக் கூட நாம் கேட்கிறோம், "நான் நண்பகலில் சூரியனை மறைத்து, பகலில் பூமியை இருளடையச் செய்வேன்" ( ஆமோஸ் 8:9 ).

    புதிய பூமியில் உச்சகட்ட செழிப்பு

    அடுத்த வசனத்தில், இந்தப் பிரபஞ்ச இருள், "ஒரே மகனுக்காகத் துக்கம் கொண்டாடுவது போன்ற" துக்கத்துடன் இணைக்கப்படும் என்று நமக்குச் சொல்லப்படுகிறது (ஆமோஸ் 8:10). ஆமோஸின் தீர்க்கதரிசனத்தில் இது ஒரு திகைப்பூட்டும் பகுதியாகும், ஏனெனில் ஆமோஸ் வாழ்ந்த ஏழு நூற்றாண்டுகளுக்குப் பிறகு இயேசு சிலுவையில் தொங்கும்போது என்ன நடந்தது என்பதை இது துல்லியமாக விவரிக்கிறது : பூமி நண்பகலில் மூன்று மணி நேரம் இருளடைந்தது, கடவுளின் ஒரே மகன், கடவுளின் ஒரே மகன் இறந்ததால் கடவுளின் நியாயத்தீர்ப்பைக் குறிக்கிறது (மாற்கு 15:33; யோவான் 3:16). பின்னர் ஆமோஸின் தீர்க்கதரிசனம் தாவீதுக்கு உண்மையாக இருப்பதன் மூலம் மறுசீரமைப்பு பற்றிய ஆழ்ந்த ஆறுதலான வாக்குறுதியுடன் முடிவடைகிறது (ஆமோஸ் 9:11-15). இந்த மறுசீரமைப்பின் மூலம் கடவுளின் மக்கள் தேசத்தில் மீண்டும் நிலைநிறுத்தப்படுவார்கள், மேலும் "மலைகள் இனிப்பான திராட்சரசத்தைப் பொழியும், எல்லா மலைகளும் அதனுடன் ஓடும்" (ஆமோஸ் 9:13).ஆமோஸ் 8:10 ). இது ஆமோஸின் தீர்க்கதரிசனத்தில் ஒரு திகைப்பூட்டும் பகுதியாகும், ஏனெனில் இது மாற்கு 15:33 ; யோவான் 3:16- ல் என்ன நடந்தது என்பதை துல்லியமாக விவரிக்கிறது . பின்னர் ஆமோஸின் தீர்க்கதரிசனம் தாவீதுக்கு உண்மையாக இருப்பதன் மூலம் மறுசீரமைப்பு பற்றிய ஆழமான ஆறுதலான வாக்குறுதியுடன் முடிகிறது ( ஆமோஸ் 9:11–15 ). இந்த மறுசீரமைப்பின் மூலம் கடவுளின் மக்கள் தேசத்தில் மீண்டும் நிலைநிறுத்தப்படுவார்கள், மேலும் "மலைகள் இனிய திராட்சரசத்தைப் பொழியும், எல்லா குன்றுகளும் அதனுடன் வழிந்தோடும்" ( ஆமோஸ் 9:13 ).

    சிலுவையில், இயேசு தம்மை நம்புகிற உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் கர்த்தருடைய தீர்க்கதரிசன நாளின் நியாயத்தீர்ப்பை அனுபவித்தார். "சகல கோத்திரங்களிலும், ஜனங்களிலும், பாஷைகளிலும் இருந்து" (வெளிப்படுத்தல் 7:9) இந்த விசுவாசிகள் ஒரு நாள் ஆமோஸ் 9 இல் விவரிக்கப்பட்டுள்ள ஏராளமான மிகுதியாக, மீட்டெடுக்கப்பட்ட சொர்க்கமாக, ஒரு புதிய பூமியில் - உண்மையான மற்றும் இறுதி ஏதேன் - நுழைவார்கள்.வெளிப்படுத்தல் 7:9 ) ஒரு நாள் ஆமோஸ் 9 இல் விவரிக்கப்பட்டுள்ள ஏராளமான மிகுதியில் , மீட்டெடுக்கப்பட்ட சொர்க்கமாக, ஒரு புதிய பூமியில் - உண்மையான மற்றும் இறுதி ஏதேன் தோட்டத்தில் நுழைவார் .

    அமோஸில் உள்ள உலகளாவிய கருப்பொருள்கள்

    கடவுளின் பாரபட்சமற்ற நீதி

    தம்முடைய ஜனங்கள் அவருடையவர்கள் என்பதற்காகவே கர்த்தர் அவர்களுடைய அநீதியைக் கண்டும் காணாமல் விடுவதில்லை. உண்மையில், தேவனுடைய உடன்படிக்கை உறவு, அவருடைய ஜனங்களின் வாழ்க்கையில் நீதியையும் நீதியையும் மிக முக்கியமானதாக ஆக்குகிறது, ஏனென்றால் அவர்கள் தேசங்களுக்கு கர்த்தரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் (ரோமர் 2:17–24 ஐப் பார்க்கவும்). இவ்வாறு, அவருடைய ஜனங்கள் "ஏழைகளை மிதித்து, தேசத்தின் ஏழைகளை முடிவுக்குக் கொண்டுவரும்போது" (ஆமோஸ் 8:4), அத்தகைய சுயநலம் தகுதியான தீர்ப்பிலிருந்து தேவன் நிச்சயமாக அவர்களை விலக்க மாட்டார். கடவுளின் குணாதிசயத்தில் பொதிந்துள்ள நீதிக்கான அர்ப்பணிப்பை ஆமோஸ் உலகளாவிய திருச்சபைக்கு நினைவூட்டுகிறார்.ரோமர் 2:17–24 ). இவ்வாறு, அவருடைய மக்கள் "ஏழைகளை மிதித்து, தேசத்தின் ஏழைகளை அழித்துவிடும்போது" ( ஆமோஸ் 8:4 ), அத்தகைய சுயநலத்திற்குத் தகுதியான தீர்ப்பிலிருந்து தேவன் நிச்சயமாக அவர்களை விலக்க மாட்டார். கடவுளின் குணாதிசயத்தில் பொதிந்துள்ள நீதிக்கான அர்ப்பணிப்பை ஆமோஸ் உலகளாவிய திருச்சபைக்கு நினைவூட்டுகிறார்.

    செல்வத்தின் ஆபத்துகள்

    "சீயோனில் நிம்மதியாக இருப்பவர்களுக்கு ஐயோ" என்று கர்த்தர் ஆமோஸ் 6 இல் கூறுகிறார். "தந்தக் கட்டில்களில் படுத்து, தங்கள் மஞ்சங்களில் படுத்துக் கொள்கிறார்கள்... கிண்ணங்களில் மது அருந்துகிறார்கள், சிறந்த எண்ணெய்களால் பூசுகிறார்கள்" (ஆமோஸ் 6:1, 4, 6). இருப்பினும், கடவுளின் மக்கள் ஆடம்பரமான நிம்மதியில் வாழ்வது மட்டுமல்லாமல், தங்கள் சுய திருப்தி பேராசையிலும் ஏழைகளின் தேவைகளை மிதித்து, வணிக பரிவர்த்தனைகளில் ஏமாற்றி, அதிக பணம் சம்பாதிக்க ஓய்வுநாளை அவமதிக்கிறார்கள் (ஆமோஸ் 8:4–6). செழிப்பு வரும்போது மனித இதயத்தின் போக்கு இதுதான். பொருள் செழிப்பு என்பது கர்த்தரிடமிருந்து வரும் ஆசீர்வாதம் (நீதிமொழிகள் 10:22) மற்றும் விடாமுயற்சியுடன் மற்றும் புத்திசாலித்தனமாக வேலை செய்பவர்களால் (நீதிமொழிகள் 21:5) பொருத்தமான முறையில் சம்பாதிக்கப்படுகிறது என்றாலும், செல்வக் குவிப்பு பல்வேறு சோதனைகள் மற்றும் பாவங்களுக்கு வழிவகுக்கும் (1 தீமோத்தேயு 6:9–10). பொருள் செல்வத்தை நன்றியுடன் பெற வேண்டும், ஆனால் நம் பாசத்தின் மையமாக கடவுளை ஒருபோதும் இடமாற்றம் செய்யக்கூடாது - மேலும் செல்வத்தை அதன் சரியான இடத்தில் வைத்திருப்பதற்கான முக்கிய நடைமுறை வழி, குறிப்பாக தேவன் கிறிஸ்துவில் நமக்குக் காட்டிய தாராள மனப்பான்மையைக் கருத்தில் கொண்டு, தேவைப்படுபவர்களிடம் தாராளமாக இருப்பதுதான் (2 கொரிந்தியர் 8:9; 2 கொரிந்தியர் 9:11ஐ ஒப்பிடுக).ஆமோஸ் 6. "தந்தக் கட்டில்களில் படுத்து, தங்கள் மஞ்சங்களில் படுத்துக் கொண்டு... கிண்ணங்களில் மது அருந்தி, சிறந்த எண்ணெய்களால் பூசிக்கொள்பவர்களுக்கு ஐயோ" ( ஆமோஸ் 6:1, 4, 6 ). இருப்பினும், கடவுளின் மக்கள் ஆடம்பரமான சொகுசில் வாழ்வது மட்டுமல்லாமல், தங்கள் சுய திருப்தி பேராசையிலும் ஏழைகளின் தேவைகளை மிதித்து, வணிக பரிவர்த்தனைகளில் ஏமாற்றி, அதிக பணம் சம்பாதிக்க ஓய்வுநாளை அவமதிக்கின்றனர் ( ஆமோஸ் 8:4–6 ). செழிப்பு வரும்போது மனித இதயத்தின் போக்கு இதுதான். பொருள் செழிப்பு என்பது கர்த்தரிடமிருந்து வரும் ஆசீர்வாதம் ( நீதிமொழிகள் 10:22 ) மற்றும் விடாமுயற்சியுடன் மற்றும் புத்திசாலித்தனமாக வேலை செய்பவர்களால் ( நீதிமொழிகள் 21:5 ) பொருத்தமான முறையில் சம்பாதிக்கப்படுகிறது, செல்வக் குவிப்பு பல்வேறு சோதனைகள் மற்றும் பாவங்களுக்கு வழிவகுக்கும் ( 1 தீமோத்தேயு 6:9–10 ). பொருள் செல்வத்தை நன்றியுடன் பெற வேண்டும், ஆனால் நம் பாசத்தின் மையமாக கடவுளை ஒருபோதும் இடமாற்றம் செய்யக்கூடாது - மேலும் செல்வத்தை அதன் சரியான இடத்தில் வைத்திருப்பதற்கான முக்கிய நடைமுறை வழி, குறிப்பாக தேவன் கிறிஸ்துவில் நமக்குக் காட்டிய தாராள மனப்பான்மையைக் கருத்தில் கொண்டு, தேவைப்படுபவர்களிடம் தாராளமாக இருப்பதுதான் ( 2 கொரிந்தியர் 8:9 ; 2 கொரிந்தியர் 9:11 ஒப்பிடுக ).

    இன்றைய உலகளாவிய ஆமோஸ் செய்தி

    இருபத்தியோராம் நூற்றாண்டில் உலகளாவிய திருச்சபைக்கு ஆமோஸின் தீர்க்கதரிசனம் ஒரு அவசர செய்தியைக் கொண்டுள்ளது. நேர்மையான கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி மூலம் தேவன் தனது மக்களுக்கு பொருள் ரீதியான ஆசீர்வாதத்தைக் கொண்டு வந்த இடத்தில், அத்தகைய ஆசீர்வாதத்தை நன்றியுடன் பெற்று அனுபவிக்க வேண்டும். இருப்பினும், வறுமை, சுத்தமான தண்ணீர் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போதுமான மருத்துவ பராமரிப்பு போன்ற மிகப்பெரிய உலகளாவிய தேவைகளைக் கருத்தில் கொண்டு, சில விசுவாசிகளுக்கு வழங்கப்படும் பொருள் ரீதியான ஆசீர்வாதம் உலகின் உதவி தேவைப்படும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். இதைவிடக் குறைவாக ஏதாவது செய்வது, ஆமோஸின் நாளில் ஏழைகளைப் புறக்கணித்த மக்களைப் போலவே சோகமாகப் பின்பற்றுவதாகும். இத்தகைய புறக்கணிப்பு கடவுளின் நியாயத்தீர்ப்புக்கு தகுதியானது, மேலும் அது பெறும்.

    திருச்சபை ஒருபோதும் கடவுளின் தயவை தவறாகப் பயன்படுத்தக்கூடாது. அவருடைய நீதி உலகளாவியது. அவர் தம்முடைய அன்பையும் இரக்கத்தையும் கூறிக்கொள்பவர்களுடன் பரிபூரண நீதியுடன் நடந்துகொள்வார், ஆனால் அந்த அன்பையும் இரக்கத்தையும் மற்றவர்களுக்கு உறுதியான வழிகளில் நீட்டிக்கத் தவறிவிடுவார். இரக்கம் காட்டப்பட்டவர்களாக, திருச்சபையாகிய நாம், சுவிசேஷத்தில் நமக்குக் காட்டப்பட்டுள்ள தீவிரமான, சுய-கொடை அன்புடன், அருகிலும் தொலைவிலும் நம் அண்டை வீட்டாரை நேசிப்போமாக. "பிரியமான பிள்ளைகளைப் போல, கடவுளைப் பின்பற்றுபவர்களாக இருங்கள். கிறிஸ்து நம்மை நேசித்து நமக்காகத் தம்மை ஒப்புக்கொடுத்தது போல, அன்பில் நடந்து கொள்ளுங்கள்" (எபேசியர் 5:1-2).எபேசியர் 5:1–2 ).

    ஆமோஸ் புத்தகத்தின் தொகுப்பு:

    (மொத்தம் 9 அதிகாரங்கள் உள்ளன. இதை 4 பகுதிகளாகப் பிரிக்கலாம்)

    1. அதிகாரங்கள் 1-2: தேசங்களின் அழிவு
    2. அதிகாரம் 3: 1-8: தீர்க்கதரிசன அழைப்பு

    III. அதிகாரங்கள் 3: 9 முதல் 9: 10 வரை: இஸ்ரவேலின் நியாயத்தீர்ப்பு

    அ. சமாரியா நியாயந்தீர்க்கப்படும் (3: 9 முதல் 4: 5)

    ஆ. தேவனுடைய கடந்தகால நியாயத்தீர்ப்புகள் (4: 6-13)

    இ. இஸ்ரவேலுக்கான புலம்பல் (5)

    ஈ. நிர்விசாரமாய் இருப்போருக்கு ஐயோ (6)

    உ. தரிசனங்கள் (7 முதல் 9: 10)

    1. வெட்டுக்கிளிகள் (7: 1-3) பஞ்சமா? இல்லை
    2. அக்கினி (7: 4-6) அக்கினியால் பட்சிக்கப்படுமா? இல்லை
    3. தூக்குநூல் (7: 7-9) மன்னிக் கமாட்டேன்
    4. பழுத்த பழங்களுள்ள கூடை (8) நியாந் தீர்ப்பதற்கான நேரம் வந்துவிட்டது.
    5. ஆண்டவரின் தரிசனம் (9: 1-10) நியாயந் தீர்க்குதலைக் கர்த்தரே மேற்ப் பார்வையிடுவார்.
    6. அதிகாரம் 9: 11-15: புதுப்பிக்கப்படுதல்
    சுருக்கமாக:

    † அதிகாரங்கள் 1 முதல் 2ல், 8 தீர்க்கதரிசனங்கள்

    † அதிகாரங்கள் 3 முதல் 6ல், 3 செய்திகள்

    1. இஸ்ரவேலின் நிகழ்காலம்: தேவன் தாம் நேசிப்பவர்களைச் சிட்சிக்கிறார் (3: 1-15)
    2. இஸ்ரவேலின் கடந்தகாலம்: உன் தேவனைச் சந்திக்க ஆயத்தப்படு (4: 1-13 பெண்கள் ஆண்களை இயக்குதல், மழை தடுக்கப்பட்டது 4: 1-3)
    3. இஸ்ரவேலின் வருங்காலம்: நீங்கள் பிழைத்திருக்கும்படி என்னைத் தேடுங்கள் (5 முதல் 6)

    🏷️   அதிகாரங்கள் 7 முதல் 8ல், 5 தரிசனங்கள்

    🏷️   அதிகாரங்கள் 9-ல், 5 வாக்குத்தத்தங்கள் உள்ளன.

    9: 11 ஏதோமில் மீதியானவர்களையும், என் நாமம் விளங்கிய சகல ஜாதிகளையும் வசமாக்கிக் கொள்ளுவேன்.

    9: 12 அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன்.

    9: 13 இதோ, உழுகிறவன் அறுக்கிறவனையும், திராட்சப்பழங்களை ஆலையாடுகிறவன் விதைக்கிறவனையும் தொடர்ந்துபிடித்து, பர்வதங்கள் திராட்சரசமாய் வடிகிறதும், மேடுகளெல்லாம் கரைகிறதுமான நாட்கள் வரும்.

    9: 14 என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன், அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள்.

    9: 15 அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன், நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப் படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்