எண்ணாகமம் Numbers Commentary in Tamil
வனாந்தரத்தில் இஸ்ரவேலரின் 40 ஆண்டு பயணம்

எண்ணாகமம் விளக்கவுரை தொகுப்பு ›   ஜெகன்.M

எண்ணாகமம் சிறப்பு என்ன?

எண்ணாகமம் என்பது வேதாகமத்தின் நான்காவது புத்தகம் மற்றும் மோசேயின் ஐந்து புத்தகங்களில் ஒன்றாகும். இது இஸ்ரவேல் ஜனங்களின் வனாந்தரப் பயணத்தை விவரிக்கிறது. "எண்ணாகமம்" என்ற பெயர் இந்த புத்தகத்தின் தொடக்கத்தில் உள்ள இஸ்ரவேலர்களின் கணக்கெடுப்பிலிருந்து வந்தது. இந்த புத்தகம் தேவனுடைய ஜனங்களின் விசுவாசமின்மை, தண்டனை, ஆனால் தேவனின் கிருபை மற்றும் வழிகாட்டுதல் பற்றி கூறுகிறது.

"மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலுடைய பிதாக்களின் வம்சத்தில் ஒவ்வொரு வம்சத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகிய பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள்." (எண்ணாகமம் 1:44)

"கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.; கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.;" (எண்ணாகமம் 6:24-25)

எண்ணாகமம் முக்கிய கருப்பொருள்கள்

  • கணக்கெடுப்பு - இஸ்ரவேலின் இரு முறை எண்ணிக்கை
  • தண்டனை - விசுவாசமின்மைக்கான விளைவுகள்
  • வழிநடத்துதல் - தேவன் தமது ஜனங்களை எப்படி வழிநடத்துகிறார்
  • பரிசுத்தம் - தேவனுக்கு முன் பரிசுத்தமாக வாழ்தல்
  • வாக்குறுதி - தேவன் தமது ஜனங்களுக்கு செய்த வாக்குறுதிகள்

எண்ணாகமம் முக்கியமான தகவல்

எண்ணாகமம் 36 அதிகாரங்களைக் கொண்டுள்ளது மற்றும் ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம் போன்றே மோசேயால் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. இது இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுபட்ட 2 ஆண்டுகளில் தொடங்கி, கானான் எல்லையை அடையும் வரை 40 ஆண்டுகளை உள்ளடக்கியது. இந்த புத்தகம் இஸ்ரவேலின் தலைமுறையினர் எப்படி வாக்குத்தத்த தேசத்திற்குள் நுழைய தவறிவிட்டனர் என்பதை விளக்குகிறது. எண்ணாகமம் வரலாற்று நிகழ்வுகள், சட்டங்கள், மக்கள் தொகை கணக்கெடுப்புகள் மற்றும் ஆவிக்குரிய பாடங்களின் கலவையாகும்.

எண்ணாகமம் - "வனாந்திர பயண ஆகமம்"

எண்ணாகமம் அறிமுகம்

இந்தப் புத்தகத்திற்குரிய எபிரேயப் பெயர் “b’midbar”. இதற்கு “வனாந்திரத்தில்” என்று அர்த்தமாகும். இரண்டுமுறை இஸ்ரவேல் புத்திரர்களின மக்கள்தொகை எண்ணப்பட்டதால் இது எண்ணாகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

முதல்முறை எண்ணப்பட்டதைக் குறித்து எண்ணாகமம் 1-2 அதிகாரங்களில் பார்க்கிறோம். யுத்தத்திற்குப் போகத்தக்கவர்களாக 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணப்பட்டார்கள். யாத்திராகமம் 12:37ன்படி எகிப்தைவிட்டுப் புறப்பட்டபோது 6 லட்சம் புருஷர் வந்தார்கள். முதல் கணக்கெடுப்பில் மொத்தம் 6 லட்சத்து 3550 பேர் எண்ணாகமம் 232 இவர்களே தங்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தின்படி இஸ்ரவேல் புத்திரால் எண்ணப்பட்டவார்கள்.

பாளயங்களிலே தங்கள் தங்கள் சேனைகளின்படியே எண்ணப்பட்டவார்கள் எல்லாரும் ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள்.

1

முதல் கணக்கெடுப்பு

இஸ்ரவேலின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் பாளய அமைப்பு

2

லேவியரின் கடமைகள்

லேவிய கோத்திரத்தின் பணிகள் மற்றும் பொறுப்புகள்

3

நசரேய விரதம்

மாசுபாடுகளிலிருந்து சுத்திகரிப்பு மற்றும் நசரேய விரதத்தின் விதிகள்

4

அதிபதிகளின் காணிக்கைகள்

பாளயத்தின் அதிபதிகளால் கொடுக்கப்பட்ட காணிக்கைகள்

5

லேவியரின் சுத்திகரிப்பு

லேவியரை பரிசுத்தப்படுத்தும் சடங்குகள்

6

இரண்டாம் பஸ்கா

சீனாய் வனாந்தரத்தில் கொண்டாடிய இரண்டாம் பஸ்கா

7

சீனாய் மலையிலிருந்து புறப்படுதல்

இஸ்ரவேலின் பயணம் தொடங்குதல் மற்றும் முறுமுறுப்புகள்

8

மிரியாம் & ஆரோனின் எதிர்ப்பு

மோசேயின் தலைமையை சவால் செய்தல் மற்றும் அதன் விளைவுகள்

9

12 வேவுகாரர்கள்

கானான் தேசத்திற்கு அனுப்பப்பட்ட வேவுகாரர்களின் அறிக்கை

10

கோராகின் கலகம்

கோராகு மற்றும் அவரது சகாக்களின் கலகம் மற்றும் தண்டனை

11

ஆரோனின் கோல்

ஆரோனின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் அடையாளம்

12

ஆசாரியர்களின் கடமைகள்

ஆசாரியர்கள் மற்றும் லேவியரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள்

எண்ணாகமம் முக்கிய விவரங்கள்

பொதுவான தகவல்கள்

ஆசிரியர்: மோசே

இடம்: மோவாபின் சமவெளி (எண்ணாகமம் 36:13)

காலம்: கி.மு. 1405 (எகிப்திலிருந்து வெளியேறிய 40வது ஆண்டு)

முக்கியமான எண்ணிக்கைகள்

முதல் எண்ணிக்கை: 603,550 வீரர்கள் (எண்ணாகமம் 1:46)

இரண்டாம் எண்ணிக்கை: 601,730 வீரர்கள் (எண்ணாகமம் 26:51)

லேவியர்: 22,000 (முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு), 23,000 (இரண்டாம் மக்கள் தொகை கணக்கெடுப்பு)

முக்கிய சம்பவங்கள்

  1. இஸ்ரவேலரின் இரண்டு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு (எண்ணாகமம் 1 & எண்ணாகமம் 26)
  2. கானானை ஆய்வு செய்த 12 வேவுகாரர்கள் (எண்ணாகமம் 13)
  3. கோராகின் கலகம் (எண்ணாகமம் 16)
  4. பிலேயாமின் ஆசீர்வாதங்கள் (எண்ணாகமம் 22 - எண்ணாகமம் 24)
  5. மோசேயின் பாவம் (எண்ணாகமம் 20)

எண்ணாகமம் எதைப் பற்றியது?

கொரிந்திய சபைக்கு எழுதிய கடிதத்தில், அப்போஸ்தலன் பவுல், எண்ணாகமம் புத்தகத்தில் உள்ள நிகழ்வுகள் "அவர்கள் செய்தது போல் நாம் தீமையை விரும்பாதபடி நமக்கு முன்மாதிரிகளாக நடந்தன" என்று கூறுகிறார்

"கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்." (எண்ணாகமம் 6:26)

எண்ணாகமத்தின் முக்கியத்துவம்

எண்ணாகமம் புத்தகம் இஸ்ரவேல் ஜனங்களின் பாலைவன பயணத்தை மட்டுமல்லாமல், கடவுளின் உண்மைத்தன்மை, மனிதனின் பலவீனம் மற்றும் ஆவிக்குரிய படிப்பினைகளையும் உள்ளடக்கியுள்ளது. இது தற்கால கிறிஸ்தவர்களுக்கு வழிகாட்டுதலாகவும், கற்பித்தலாகவும் உள்ளது.

எண்ணாகமத்தின் பின்னணி என்ன?

எண்ணாகமம் இஸ்ரவேலர் சீனாய் மலையிலிருந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் எல்லைகளுக்குச் சென்ற பயணத்தை, சுமார் 40 ஆண்டுகால வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுகிறது. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் விடுவிக்கப்பட்டு, பின்னர் சட்டத்தைப் பெற்ற பிறகு (யாத்திராகமம் மற்றும் லேவியராகமம்), எண்ணாகமம் புத்தகம் சீனாயை விட்டு வெளியேறுவதற்கான ஜனங்களின் இறுதித் தயாரிப்புகளுடன் தொடங்குகிறது.

எண்ணாகமம் ஆசிரியர் மற்றும் தேதி

நியாயப்பிரமாண புத்தகங்கள் என்று அழைக்கப்படும் வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களின் வரிசையில் எண்ணாகம புத்தகம் நான்காவதாக வருகிறது. இதன் ஆசிரியர் மோசே என்பதை வேதவாக்கியங்களில் காணலாம். (யோசுவா 8:31; 2 இராஜாக்கள் 14:6; நெகேமியா 8:1; மாற்கு 12:26; யோவான் 7:19). எண்ணாகமம் 33:2 மற்றும் எண்ணாகமம் 36:13 ஆகிய வசனங்களில் ”மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே …. எழுதினான்) என்று காண்கிறோம்.

எண்ணாகமம் வாக்குறுதி

எண்ணாகமம் புத்தகத்தின் முக்கிய வாக்குறுதி கானான் தேசத்தை இஸ்ரவேலருக்கு கொடுப்பதாக இருந்தது. தேவன் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அழைத்து வந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு கொண்டு செல்வதாக வாக்களித்தார்.

எண்ணாகமத்தின் பெயர் காரணம்

  1. புத்தகத்தின் பெயர்
    1. எபிரெய மொழியில் இது "வனாந்தரத்தில" என்ற தலைப்பைக் கொண்டிருக்கிறது.
    2. செப்துவஜிந்து மொழிபெயர்ப்பில் இது "எண்ணாகம புத்தகம்" என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இருமுறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது, எண்ணாகமம் 1 - எண்ணாகமம் 4 மற்றும் எண்ணாகமம் 26.
  2. அதிகாரபூர்வமாக வேதாகமத்தில் ஏற்றுக்கொள்ளப்படுதல்
    1. இது ஏற்றுக்கொள்ளப்பட்ட எபிரெய வேதாகமத்தின் முதல் பகுதியின் ஒரு பகுதியாகும். இந்தப் பகுதி "தோரா" அல்லது "போதனைகள்" அல்லது "நியாயப்பிரமாணம்" என்று அழைக்கப்படுகிறது.
    2. செப்துவஜிந்தில் இந்தப் பகுதி ஐந்தாகமம் (ஐந்து சுருள்கள்) என்று அழைக்கப்படுகிறது.
    3. சில வேளைகளில் இது "மோசேயின் ஐந்து புத்தகங்கள்" என்று அழைக்கப்படுகிறது.,
    4. ஆதியாகமம் முதல் உபாகமம் வரையில் சிருஷ்டிப்பு முதல் மோசேயின் வாழ்க்கை வரையில் மோசேயினால் தொடர்ந்து எழுதப்பட்டதாகும்.
  3. எவ்வகைப்பட்டது - இந்தப் புத்தகம் அநேகமாக யாத்திராகம புத்தகத்தைப் போன்றதாகும். இதில் வரலாற்றுச் செய்திகளும், பிரமாணங்களைக் குறித்த விவரங்களும் காணப்படுகின்றன. பிலேயாமின் புராதன கவிதை வடிவிலான வெளிப்பாடுகளும் (எண்ணாகமம் 23-24) காணப்படுகின்றன.

புவியியல் பின்னணியின் அடிப்படை:

  1. சீனாய் மலையில் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை நோக்கிச் செல்லும் பயணத்துக்கான ஆயத்தங்கள், எண்ணாகமம் 1:1 - எண்ணாகமம் 10:10.
  2. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை நோக்கிச் செல்லும் பயணம், எண்ணாகமம் 10:11 - எண்ணாகமம் 21:35
    1. காதேசை நோக்கி, எண்ணாகமம் 10:11 - எண்ணாகமம் 12:16
    2. காதேசில், எண்ணாகமம் 13:1 - எண்ணாகமம் 20:13
    3. காதேசிலிருந்து, எண்ணாகமம் 20:14 - எண்ணாகமம் 21:35
  3. மோவாபின் சமவெளியில் நடந்த நிகழ்வுகள், எண்ணாகமம் 22:1 - எண்ணாகமம் 36:13

எண்ணாகமத்தில் என்ன இருக்கு:

  • இஸ்ரவேலின் இரண்டு தலைமுறைகளின் கணக்கெடுப்பு (எண்ணாகமம் 1 மற்றும் எண்ணாகமம் 26)
  • லேவியரின் சிறப்புப் பணிகள் மற்றும் பொறுப்புகள்
  • இஸ்ரவேலின் வனாந்திரப் பயணத்தின் வரிசை மற்றும் அமைப்பு
  • கானான் தேசத்தை ஆராய அனுப்பப்பட்ட 12 வேவுகாரர்களின் அறிக்கை
  • இஸ்ரவேலின் அவிசுவாசம் மற்றும் 40 ஆண்டுகளின் தண்டனை
  • கோராகு மற்றும் அவரது குழுவின் கலகம் மற்றும் தண்டனை
  • ஆரோனின் கோல் துளிர்த்த அதிசயம்
  • மோசேயின் பாவம் மற்றும் அதன் விளைவுகள்
  • வெண்கலச் சர்ப்பம் - கிறிஸ்துவின் சிலுவைக்கு முன்னடையாளம்
  • பிலேயாம் மற்றும் அவரது கழுதை - தேவன் தீமையையும் நன்மையாக மாற்றலாம்
  • பிலேயாமின் ஆசீர்வாதங்கள் - இஸ்ரவேலின் எதிர்காலம் குறித்து
  • இஸ்ரவேலின் வீழ்ச்சி - பாகால் சிலைகளை வணங்கி, கர்த்தரை விட்டு விலகினார்கள்
  • இரண்டாம் கணக்கெடுப்பு - புதிய தலைமுறைக்கான தயாரிப்பு
  • கானான் எல்லைகளின் விளக்கம் மற்றும் பங்கீடு
  • லேவியருக்கான நகரங்கள் மற்றும் தஞ்ச நகரங்கள்

எண்ணாகமத்தின் முக்கிய நிகழ்வுகள்

முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு

இஸ்ரவேலரின் போர் வீரர்கள் (20 வயதுக்கு மேல்) எண்ணப்பட்டனர். மொத்தம் 6,03,550 பேர். லேவியர்கள் தனியாக எண்ணப்பட்டு 22,000 பேர்.

🔢
சீனாய் மலையிலிருந்து புறப்படுதல்

தேவன் மேகத்தூணில் வழிநடத்த, இஸ்ரவேலர் வாக்குத்தத்த தேசத்தை நோக்கிப் பயணம் தொடங்கினர். ஆனால் விரைவிலேயே முறுமுறுப்பு தொடங்கியது.

☁️
முறுமுறுப்பு மற்றும் தண்டனை

மக்கள் இறைச்சியை ஆசைப்பட்டு முறுமுறுத்தனர். தேவன் காடைகளை அனுப்பினாலும், பாவத்திற்காக அவர்களைத் தண்டித்தார்.

🦜
மிரியாம் மற்றும் ஆரோனின் எதிர்ப்பு

மோசேயின் அதிகாரத்தை மிரியாம் மற்றும் ஆரோன் சவால் விட்டனர். மிரியாம் குஷ்டரோகத்தால் தண்டிக்கப்பட்டு, மோசேயின் விண்ணப்பத்தால் மட்டுமே குணமானார்.

🗣️
வாக்குத்தத்த தேசத்தை ஆராய்தல்

12 வேவுகாரர்கள் அனுப்பப்பட்டனர். 10 பேர் துர்செய்தி கூறியதால் மக்கள் பயந்து கலகம் செய்தனர். காலேபும் யோசுவாவும் மட்டுமே விசுவாசத்தைக் காட்டினர்.

🏔️
கோராகின் கலகம்

கோராகு மற்றும் அவரது குழுவினர் மோசேயின் அதிகாரத்தை எதிர்த்தனர். தேவன் அவர்களைத் தண்டித்தார். ஆரோனின் கோல் துளிர்த்தது.

🌿
கற்பாறையை அடித்தல்

மோசே தேவனுடைய கட்டளைக்கு மாறாக கோபத்தில் கற்பாறையை அடித்தார். இதனால் அவரும் ஆரோனும் வாக்குத்தத்த தேசத்திற்குள் நுழைய முடியாது என்று தீர்ப்பு கிடைத்தது.

💦
வெண்கலச் சர்ப்பம்

மக்கள் மீண்டும் முறுமுறுத்ததால் தேவன் கொள்ளிவாய்ச் சர்ப்பங்களை அனுப்பினார். மோசே வெண்கலச் சர்ப்பத்தை உயர்த்தியபோது, அதைப் பார்த்தவர்கள் குணமடைந்தனர்.

🐍
பிலேயாம் மற்றும் பாலாக்

பாலாக் இஸ்ரவேலை சபிக்க பிலேயாமை அழைத்தான். ஆனால் தேவன் பிலேயாமின் வாயைப் பயன்படுத்தி இஸ்ரவேலை ஆசீர்வதிக்க வைத்தார்.

🏇
இரண்டாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு

40 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தலைமுறை எண்ணப்பட்டது. போர் வீரர்கள் 6,01,730 பேர். லேவியர்கள் 23,000 பேர்.

🔢
யோசுவாவின் தலைமை

மோசேயின் வாரிசாக யோசுவா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இஸ்ரவேலை வாக்குத்தத்த தேசத்திற்கு வழிநடத்துவார்.

🪔
மோவாபில் இறுதி நிகழ்வுகள்

மீதியானியர்கள்மீது பழிவாங்குதல், யோர்தானுக்குக் கிழக்கே கோத்திரங்களுக்கு நிலம் வழங்குதல், மற்றும் வாக்குத்தத்த தேசத்திற்குள் நுழைய இறுதி ஆயத்தங்கள்.

⚔️

எண்ணாகமத்தின் முக்கிய கருத்துக்கள்

1

வனாந்தரத்தில் 40 ஆண்டு பயணம்

எண்ணாகமம் இஸ்ரவேலரின் வனாந்தரப் பயணத்தை விவரிக்கிறது, அங்கு அவர்களின் விசுவாசமின்மை காரணமாக 40 ஆண்டுகள் அலைந்து திரிந்தனர்.

2

இரட்டை எண்ணிக்கை

இஸ்ரவேலர் இரண்டு முறை எண்ணப்பட்டனர் - சீனாய் மலையில் முதல் தலைமுறை, மோவாபில் இரண்டாம் தலைமுறை.

3

முறுமுறுப்பு மற்றும் தண்டனை

ஜனங்களின் தொடர்ச்சியான முறுமுறுப்புகள் தேவனுடைய கோபத்தைத் தூண்டி, முதல் தலைமுறை வாக்குத்தத்த தேசத்தைப் பார்க்காமல் இறந்தது.

4

தேவனுடைய வழிகாட்டுதல்

மேக ஸ்தம்பம் மற்றும் அக்கினி ஸ்தம்பம் மூலம் தேவன் தனது மக்களுக்கு வழிகாட்டினார், ஆனால் அவர்கள் அடிக்கடி கீழ்ப்படிய மறுத்தனர்.

5

பிலேயாமின் தீர்க்கதரிசனங்கள்

பிலேயாம் இஸ்ரவேலை சபிக்க முயன்றபோது, தேவன் அவரைப் பயன்படுத்தி இஸ்ரவேலுக்கு ஆசீர்வாதங்களை அளித்தார்.

6

வெண்கலச் சர்ப்பம்

ஜனங்கள் கொள்ளிவாய்ச் சர்ப்பத்தினால் கடி பட்டபோது, மோசே வெண்கலச் சர்ப்பத்தை உயர்த்தினார் - இயேசுவின் சிலுவையின் முன்னுரை.

7

புதிய தலைமுறை

முதல் தலைமுறை அழிந்த பிறகு, தேவன் இரண்டாம் தலைமுறையை வாக்குத்தத்த தேசத்திற்கு வழிநடத்தினார்.

8

ஆரோனின் கோல்

ஆரோனின் கோல் துளிர்த்தது, தேவன் தான் தேர்ந்தெடுத்த ஆசாரியரை உறுதிப்படுத்தினார்.

எண்ணாகமம் – என்ன ஆகமம்?

அதிகம் பேரால் வாசிக்கப்படாத ஒரு புத்தம் வேதாகமத்தில் இருக்கிறது என்றால் அது அநேகமாக இந்தப் புத்தகம்தான். வேதாகமத்தை வருடத்திற்கு இத்தனை முறை படித்தாகவேண்டும் என்கிற கட்டாயத்துள் தங்களை வைத்திருப்பவர்கள் இந்தப் புத்தகத்தைக் கடந்தது எப்படி என்பதை அவர்கள்தான் விளக்கவேண்டும். 🙂 

முதல் பத்து அதிகாரங்கள் சற்று விளக்கமாக சில முறைமைகளைக் கொண்டிருப்பது உண்மைதான். வெகு விளக்கமாக வரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, பாளையம் இறங்கவேண்டிய இடங்கள், மோசே மற்றும் ஆரோனின் வம்ச வரலாறு, ஆசரிப்புக்கூடாரத் திட்டங்கள், அவர்களது பணிகள், ஆசரிப்புகள், விரதங்கள், சட்டங்கள், பலி விவரங்கள், லேவியரின் உரிமைகள் மற்றும் பண்டிகை முறைகள் முதல் 10 அதிகாரங்களில் உள்ளன. 

எண்ணாகமத்தின் முக்கிய நபர்கள்

மோசே

இஸ்ரவேலரின் தலைவர். தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தேவனுடைய சட்டங்களை மக்களுக்குக் கொடுத்தவர்.

ஆரோன்

மோசேயின் சகோதரர். முதல் முக்கிய ஆசாரியர். கோராகின் கலகத்திற்குப் பிறகு அவரது தடியில் அரும்பு தோன்றியது.

மிரியாம்

மோசேயின் சகோதரி. இஸ்ரவேலரை வழிநடத்திய முக்கிய பெண் தலைவர். மோசேயைக் குறித்து பேசியதற்காக தற்காலிகமாக குஷ்டரோகத்தால் தண்டிக்கப்பட்டார்.

காலேபு

யூதா கோத்திரத்தின் தலைவர். வாக்குத்தத்த தேசத்தைப் பற்றி நல்ல அறிக்கை கொடுத்த 12 வேவுகாரர்களில் ஒருவர்.

யோசுவா

எப்பிராயீம் கோத்திரத்தின் தலைவர். காலேபுடன் சேர்ந்து நல்ல அறிக்கை கொடுத்தவர். மோசேயின் பின்னர் இஸ்ரவேலருக்கு தலைவரானார்.

பிலேயாம்

தீர்க்கதரிசி. பாலாக்கின் வேண்டுகோளுக்கு இணங்க இஸ்ரவேலை சபிக்க முயன்றார், ஆனால் தேவன் அவரைத் தடுத்து ஆசீர்வதிக்க வைத்தார்.

கோராகு

லேவியர் குடும்பத்தைச் சேர்ந்தவர். மோசே மற்றும் ஆரோனுக்கு எதிராக கலகம் செய்தார். தேவனால் தண்டிக்கப்பட்டு பூமியில் விழுங்கப்பட்டார்.

எலெயாசர்

ஆரோனின் மகன். தந்தை இறந்த பிறகு முக்கிய ஆசாரியரானார். பிலேயாமைக் கொன்றவர்.

பாலாக்கு

மோவாபின் ராஜா. இஸ்ரவேலை சபிக்க பிலேயாமை அழைத்தவர். இறுதியில் பிலேயாமின் ஆலோசனையால் இஸ்ரவேலரை பாவத்தில் விழச் செய்தார்.

சிப்போராள்

மோசேயின் மனைவி. மீதியானியரின் தலைவன் எத்திரோவின் மகள். தன் மகனை விருத்தசேதனம் செய்து மோசேயைக் காப்பாற்றினாள்.

எத்திரோ

மீதியானிய தலைவன். மோசேயின் மாமனார். இஸ்ரவேலுக்கு நீதித்துறை அமைப்பை உருவாக்க உதவியவர்.

ஓகு மற்றும் சீகோன்

அம்மோனிய மற்றும் மோவாபிய ராஜாக்கள். இஸ்ரவேலருக்கு எதிராக யுத்தம் செய்து தோற்கடிக்கப்பட்டனர்.

எண்ணாகமத்தில் தேவ இரக்கமும் அன்பும்:

  • இஸ்ரவேலரின் மக்கள்தொகையை இரண்டு முறை கணக்கெடுத்து, ஒவ்வொருவரையும் மதிப்பிட்டது (எண்ணாகமம் 1 மற்றும் எண்ணாகமம் 26).
  • லேவியர்களைத் தனியாகப் பிரித்து, அவர்களின் பணியை மதிப்பிட்டது (எண்ணாகமம் 3 - எண்ணாகமம் 4).
  • முறுமுறுப்புக்குப் பிறகும், தேவன் மன்னாவையும் மற்றும் தண்ணீரையும் கொடுத்தது (எண்ணாகமம் 11).
  • மிரியாம் குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்டபோதும், அவள் குணமாக்கப்பட்டது (எண்ணாகமம் 12).
  • 12 வேவுக்காரர்களில் 10 பேர் துர்செய்தி கூறியபோதும், காலேபுக்கும் யோசுவாவுக்கும் வாக்குத்தத்தம் கொடுத்தது (எண்ணாகமம் 13 - எண்ணாகமம் 14).
  • கோராகின் கலகத்திற்குப் பிறகும், ஆரோனின் தடியை துளிர்க்கச் செய்து தேர்ந்தெடுப்பை உறுதிப்படுத்தியது (எண்ணாகமம் 17).
  • செங்கடல் வழியாக வந்த இஸ்ரவேலருக்கு வனாந்தரத்தில் 40 ஆண்டுகளாக உணவும் தண்ணீரும் வழங்கியது.
  • வெண்கலப்பாம்பை உயர்த்தி, அதை நோக்கிப் பார்க்கும் எவனும் குணமாகும்படி செய்தது (எண்ணாகமம் 21).
  • பிலேயாமின் சபிப்பை ஆசீர்வாதமாக மாற்றியது (எண்ணாகமம் 22 - எண்ணாகமம் 24).
  • இரண்டாம் தலைமுறைக்கு வாக்குத்தத்த தேசத்தைச் சுதந்தரிக்க வழிவகுத்தது (எண்ணாகமம் 26 - எண்ணாகமம் 36).

எண்ணாகமம் சொல்லும் உலக செய்தி

மீட்பு வரலாற்றில் எண்ணாகமம்

எண்ணாகமம் புத்தகத்தின் நவீன தலைப்பு, திருச்சபை வேதாகமத்தின் இந்த முக்கியமான பகுதியை அடிக்கடி புறக்கணிக்க ஒரு காரணமாக இருக்கலாம். தலைப்பு, அதன் ஆரம்ப அத்தியாயங்களின் முதல் வாசிப்புடன் சேர்ந்து, புத்தகம் முதன்மையாக இஸ்ரேலின் மக்கள்தொகையின் விரிவான மக்கள் தொகை கணக்கெடுப்பு என்று இதை வாசிப்பவர்கள் நம்புவதற்கு தவறாக வழிநடத்தக்கூடும். இருப்பினும், புத்தகத்தின் அசல் எபிரேய தலைப்பு "வனாந்தரத்தில்", இது புத்தகத்தின் சாராம்சத்தை துல்லியமாக விவரிக்கிறது.

எண்ணாகமம் சுருக்கம்

இஸ்ரேல் ஒரு குறிப்பிடத்தக்க காலத்திற்கு முகாமிட்ட மூன்று மையங்களுடன் தொடர்புடைய நிகழ்வுகள் மற்றும் சட்டங்களை விவரிக்கும் மூன்று முக்கிய பொருள் தொகுதிகளை எண்ணாகமம் கொண்டுள்ளது. இந்த மையங்கள் சினாய் (எண் 1 - எண் 10), காதேஷ் (எண் 13 - எண்ணாகமம் 19), மற்றும் மோவாப் சமவெளி (எண் 22 - எண் 36). இஸ்ரேல் ஒரு முகாமிலிருந்து அடுத்த முகாமுக்கு பயணிக்கும்போது என்ன நடந்தது என்பதைப் பதிவு செய்யும் இரண்டு குறுகிய பயணக் குறிப்புகளால் அவை இணைக்கப்பட்டுள்ளன.

I. இஸ்ரவேல் தேசத்திற்குள் நுழையத் தயாராகிறது (எண் 1:1 - எண் 10:10)
II. சீனாயிலிருந்து காதேசுக்கு அணிவகுத்துச் செல்லுதல் (எண் 10:11 - எண் 12:16)
III. காதேசுக்கு அருகில் நாற்பது ஆண்டுகள் (எண் 13:1 - எண் 19:22)
IV. காதேசிலிருந்து மோவாப் சமவெளிக்கு அணிவகுத்துச் செல்லுதல் (எண் 20:1 - எண் 21:35)
V. மோவாப் சமவெளியில் இஸ்ரேல் (எண் 22:1 - எண் 36:13)

வேதாகமத்தின் வேறு புத்தகங்களில் காணப்படும் இப்புத்தகத்தின் நிகழ்வுகள்:

  • அனுப்பப்பட்ட பன்னிரண்டு வேவுகாரரில் இஸ்ரவேலரை தேசத்தை சுதந்தரித்துக் கொள்ள உற்சாகமூட்டியவர்கள் யோசுவாவும், காலேபும் மாத்திரமே (எண்ணாகமம் 13-14, யோசுவா 14:7)
  • மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, சர்ப்பத்தினால் தீண்டப்பட்டவர்கள் அதை நோக்கிப்பார்த்துப் பிழைப்பார்கள் என்ற நமபிக்கையில் அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான் (எண்ணாகமம் 21:6-9, யோசுவா 3:4)
  • மோசே கன்மலையை அடிக்க தண்ணீர் வந்தது (எண்ணாகமம் 20:11, சங் 106:32)
  • பிலேயாம் அவனது கழுதையால் கடிந்துகொள்ளப்படுதல் (எண்ணாகமம் 22:21, வெளிப்படுத்தல் 2:14)
  • பேதுரு கள்ளப்போதகர்களை பிலேயாமிற்கு ஒப்பிட்டு 2 பேதுரு 2:15-ல் அநீதத்தின் கூலியை விரும்பி என்று சொல்லுகிறார்.
  • யூதா 1:11ல் தனது ஆத்துமாவை கூலிக்காக விற்றுப்போடுகிறவர்களை பிலேயாமோடு ஒப்பிடுகிறார்.
  • இயேசு பெர்கமு சபைக்கு சொல்லும்போது பிலேயாமை சுட்டிக்காட்டி வெளிப்படுத்தல் 2:14ல் “விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு” என்று சொன்னார்.

எண்ணாகமத்தின் முக்கிய சொற்கள் மற்றும் சொற்றொடர்கள்

  1. ஆசரிப்புக் கூடாரம், எண்ணாகமம் 1:1
  2. மீட்புப்பணம், எண்ணாகமம் 3:46
  3. நசரேயன், எண்ணாகமம் 6:2
  4. பரதேசி, எண்ணாகமம் 9:14
  5. மேகம், எண்ணாகமம் 9:15
  6. "அவர்களுக்குள் இருந்த பல ஜாதியான அந்நிய ஜனங்கள்," எண்ணாகமம் 11:4
  7. "வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு," எண்ணாகமம் 14:6
  8. தொங்கல்கள், எண்ணாகமம் 15:38
  9. பாதாளம், எண்ணாகமம் 16:30
  10. சிவப்பான ஒரு கிடாரி, எண்ணாகமம் 19:2
  11. கொள்ளிவாய்ச் சர்ப்பம், எண்ணாகமம் 21:6
  12. அடைக்கலப் பட்டணம், எண்ணாகமம் 35:6
  13. பழிவாங்குபவன், எண்ணாகமம் 35:19,21

எண்ணாகமத்தின் தொகுப்பு

எண்ணாகமம் 1 முதல் எண்ணாகமம் 9: சீனாய் மலையில்

முக்கிய குறிப்புகள்

  • நம்முடைய பாவம் தேவகோபத்தை எழுப்புகிறது
  • நம்முடைய உறவு தேவகட்டுப்பாட்டை எழுப்புகிறது
  • நம்முடைய பாவஅறிக்கை தேவஇரக்கத்தை எழுப்புகிறது

எண்ணாகமம் 10 முதல் எண்ணாகமம் 19: சீனாய் மலையிலிருந்து காதேஸ் பாரான் வனாந்தரம் வரை

  • 🏷️ எக்காளங்கள் உண்டாக்கி பயணத்தைத் தொடர்ந்தார்கள்
  • 🏷️ இறைச்சி கேட்டு, இஸ்ரவேலர்களின் முறுமுறுப்பு
  • 🏷️ மோசேக்கு விரோதமாக ஆரோன் மற்றும் மிரியாமின் முறையிடுதல் (எண்ணாகமம் 121-2 கர்த்தர் அதைக் கேட்டார்)
  • 🏷️ 12 வேவுக்கார்கள் அனுப்பட்டது (அது தேவதிட்டமல்ல, மனித திட்டமாகும். உபாகமம் 122, 23)
  • 🏷️ துர்செய்தியின் விளைவு, மக்கள் புலம்பி எதிர்த்தார்கள்: (ஆனால் காலேபும் யோசுவாவும்)
  • 🏷️ கோராகு தாத்தானையும் ஓனையும் சேர்த்துக்கொண்டு மோசேக்கு விரோதமாக எழும்புதல்
  • 🏷️ ஆரோனின் துளிர்த்தகோல் (முறுமுறுப்புக்கு முடிவு, எண்ணாகமம் 17)
  • 🏷️ ஆசாரியரின் கடைமைகளும், சுத்தகரிப்பு முறைமைகளும்; (எண் 18-19)

எண்ணாகமம் 20 முதல் எண்ணாகமம் 36: காதேஸ் பாரான் வனாத்தலிருந்து மோவாப் வரை

  • ♦ கற்பாறையை அடித்தலும், ஆரோனின் மரணமும் (எண்ணாகமம் 20) (மோசேயின் கோபம் தேவனுடைய வாக்குத்தத்தைச் சுதந்தரிக்க முடியாதவனாகத் தள்ளப்படுதலுக்குக் காரணமாயிற்று. எண்ணாகமம் 20:12)
  • ♦ கானானியர்கள், வெண்கல சர்ப்பம், சீகோனும்-ஓகும் (எண்ணாகமம் 21) எண்ணாகமம் 21:5, 6
  • ♦ பாலாகும் பிலேயாமும் (அதி 22-24). 25ஆம் அதிகாரத்தில் இஸ்ரவேலர் பாவத்தில் விழுதலைக் குறித்துப் பார்க்கிறோம். ஆதற்குக் காரணம் பிலேயாம் கொடுத்த விக்கிரகம் மற்றும் வேசித்தனத்திற்கு ஏதுவான துர்ஆலோசனை. வெளிப்படுத்தல் 2:14, எண்ணாகமம் 31:16
  • ♦ இரண்டாவது எண்ணப்படுதல் (புதிய சந்ததி, எண்ணாகமம் 26)
  • ♦ யோசுவா தலைமைத்துவப் பொறுப்பில் அமர்த்தப்படுதல் (எண்ணாகமம் 27)
  • ♦ காணிக்கைகளும் பொருத்தனைகளும் (எண்ணாகமம் 28 - எண்ணாகமம் 30)
  • ♦ மீதியானியர்கள்மீது பழிவாங்குதல், யோர்தானுக்குக் கிழக்கே கோத்திரப் பகுதி (எண்ணாகமம் 31-36)

எண்ணாகமம் கேள்விகள்

  1. இஸ்ரவேலரின் வனாந்தரப் பயணத்தின் முக்கிய பாடம் என்ன?
  2. முதல் தலைமுறை இஸ்ரவேலர் ஏன் வாக்குத்தத்த தேசத்தில் நுழைய அனுமதிக்கப்படவில்லை?
  3. பிலேயாமின் கதை எதைக் காட்டுகிறது?
  4. வெண்கல சர்ப்பம் எதை முன்னறிவிக்கிறது?
  5. எண்ணாகமத்தின் முக்கிய கருப்பொருள் என்ன?

எண்ணாகமத்தில் இயேசு கிறிஸ்து

ஞானக்கன்மலையில் இயேசு


எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள், அந்தக் கன்மலை கிறிஸ்துவே (1 கொரிந்தியர் 10:4).

வெண்கலச் சர்ப்பத்தில் இயேசு


சர்ப்பமானது வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும் (யோவான் 3:14-15).

நட்சத்திரத்தில் இயேசு


"யாக்கோபிலிருந்து ஒரு நட்சத்திரம் உதிக்கும்" என்ற எண்ணாகமம் 24:17 இன் முன்னறிவிப்பு, இயேசுவைக் குறிக்கிறது. இயேசுவே உதிக்கும் விடிவெள்ளி நட்சத்திரம் (வெளிப்படுத்தல் 22:16).

பாலைவனத்தில் மன்னாவில் இயேசு


தேவன் இஸ்ரவேலருக்கு அளித்த மன்னா, வானத்திலிருந்து இறங்கிய மெய்யான அப்பமாகிய இயேசு கிறிஸ்துவின் முன்னடையாளம் (யோவான் 6:31-35).

எண்ணாகமம் மேலும் அறிய விரும்புகிறீர்களா?

   

எண்ணாகமம் - "வனாந்தரத்தில் இஸ்ரவேலரின் 40 ஆண்டு பயணம்; கசப்பு மற்றும் கலகம்"

இந்தப் புத்தகத்திற்குரிய எபிரேயப் பெயர் "b'midbar". இதற்கு "வனாந்திரத்தில்" என்று அர்த்தமாகும். இரண்டுமுறை இஸ்ரவேல் புத்திரர்களின மக்கள்தொகை எண்ணப்பட்டதால் இது எண்ணாகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. முதல்முறை எண்ணப்பட்டதைக் குறித்து எண்ணாகமம் 1-2 அதிகாரங்களில் பார்க்கிறோம். யுத்தத்திற்குப் போகத்தக்கவர்களாக 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணப்பட்டார்கள். யாத்திராகமம் 12:37ன்படி எகிப்தைவிட்டுப் புறப்பட்டபோது 6 லட்சம் புருஷர் வந்தார்கள். முதல் கணக்கெடுப்பில் மொத்தம் 6 லட்சத்து 3550 பேர் எண்ணாகமம் 2:32 இவர்களே தங்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தின்படி இஸ்ரவேல் புத்திரால் எண்ணப்பட்டவார்கள்.