Book of யோவேல் in Tamil Bible

  1. யோவேல் - "கர்த்தருடைய நாள் பற்றிய எச்சரிக்கை; ஆவியின் வெள்ளம்"

    1.அமைப்பு

    இது கி.மு.835 அல்லது கி.மு.312 எழுதப்பட்டடிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. மூப்பர்கள் ஆளுகைசெய்து கொண்டிருந்தார்கள் என்ற குறிப்பை யோவேலின் புத்தகத்திலே நாம் வாசிக்கிறோம். மேலும் யூதர்கள் கிரேக்கர்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்டுப் போயிருந்தார்கள் என்றும் இந்தப் புத்தகம் சொல்கிறது.

    யோவேல்-1: 2,14 முதியோரே, இதைக் கேளுங்கள், தேசத்தின் சகல குடிகளே, செவிகொடுங்கள், உங்கள் நாட்களிலாவது உங்கள் பிதாக்களின் நாட்களிலாவது இப்படிப்பட்டது சம்பவித்ததுண்டா? 14. பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள், மூப்பரையும் தேசத்தின் எல்லாக் குடிகளையும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

    யோவேல் 2: 16 ஜனத்தைக் கூட்டுங்கள், சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள், முதியோரைச் சேருங்கள், பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள், மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மறைவையும் விட்டுப் புறப்படுவார்களாக.

    யோவேல் 3: 6 யூதாவின் குமாரரையும் எருசலேமின் குமாரரையும் அவர்களுடைய எல்லைகளுக்குத் தூரமாக்கும்படிக்கு, கிரேக்கரிடத்தில் விற்றுப் போட்டீர்கள்.

    ஒருபுறம் இப்படியிருக்க, பாபிலோனால் சிறையாக்கிக் கொண்டுசெல்லப்படுதல் இனிமேல்தான் நடக்கவிருக்கிறது என்பதைக் குறிப்பது போன்ற வார்த்தைகளும் இதிலே வருகிறது.

    யோவேல் 1: 15 அந்த நாளினிமித்தம் ஐயோ! கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது, அது சங்காரம்போலச் சர்வ வல்லவரிடத்திலிருந்து வருகிறது.

    யோவேல் 2: 1-9 சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள், தேசத்தின் குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவார்கள், ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது. 2. அது இருளும் அந்தகாரமுமான நாள், அது மப்பும் மந்தாரமுமான நாள், விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல எராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும், அப்படிப்பட்டது முன் ஒருகாலத்திலும் உண்டானதுமில்லை, இனித் தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டாவதுமில்லை. 3. அவைகளுக்கு முன்னாக அக்கினி பட்சிக்கும், அவைகளுக்குப் பின்னாக ஜுவாலை எரிக்கும், அவைகளுக்கு முன்னாகத் தேசம் ஏதேன் தோட்டத்தைப்போலவும், அவைகளுக்குப் பின்னாகப் பாழான வனாந்தரத்தைப்போலவும் இருக்கும், அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை. 4. அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலை ஒத்தது, அவைகள் குதிரை வீரரைப்போல ஓடும். 5. அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சல்போலவும், செத்தைகளை எரிக்கிற அக்கினிஜுவாலையின் இரைச்சல்போலவும், யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட பலத்த ஜனத்தின் இரைச்சல்போலவும், பர்வதங்களுடைய சிகரங்களின்மேல் குதிக்கும். 6. அவைகளுக்கு முன்பாக ஜனங்கள் நடுங்குவார்கள், எல்லா முகங்களும் கருகிப்போகும். 7. அவைகள் பராக்கிரம சாலிகளைப் போல ஓடும், யுத்தவீரரைப்போல மதிலேறும். வாிசைகள் பிசகாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும். 8. ஒன்றைஒன்று நெருக்காது, ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும், அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம்படாமற்போகும். 9. அவைகள் பட்டணம் எங்கும் செல்லும், மதிலின்மேல் ஓடும், வீடுகளின்மேல் ஏறும், பலகணிவழியாய்த் திருடனைப்போல உள்ளே நுழையும்.

    இன்னும் தேவாலயம் இருந்துகொண்டிருந்தது என்றும் இந்தப் புத்தகத்தில குறிப்பிடப்பட்டடிருக்கிறது.

    யோவேல் 1: 9 போஜனபலியும் பானபலியும் கர்த்தருடைய ஆலயத்தை விட்டு அற்றுப்போயின, கர்த்தரின் ஊழியக்காரராகிய ஆசாரியர்கள் துக்கிக்கிறார்கள்.

    யோவேல் 1: 13-14,16 ஆசாரியர்களே, இரட்டுடுத்திப் புலம்புங்கள், பலிபீடத்தின் பணிவிடைக்காரரே, அலறுங்கள், என் தேவனுடைய தொண்டரே, நீங்கள் உள்ளே பிரவேசித்து இரட்டுடுத்தவர்களாய் இராத்தங்குங்கள். உங்கள் தேவனுடைய ஆலயத்தில் போஜனபலியும் பானபலியும் செலுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது. பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள், மூப்பரையும் தேசத்தின் எல்லாக் குடிகளையும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள். 16. நம்முடைய கண்களைவிட்டு ஆகாரமும், நம்முடைய தேவ ஆலயத்தைவிட்டுச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நீக்கப்படவில்லையோ?

    யோவேல் 2: 17 கர்த்தரின் பணிவிடைக்காரராகிய ஆசாரியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது: கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்தரத்தை ஒப்புக்கொடாதிரும், உங்கள் தேவன் எங்கே என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக.

    தீரு, சிதோன், பெலிஸ்தியா மற்றும் எகிப்து தேசங்கள் இஸ்ரவேலின் சத்துருக்களாக இருந்தார்கள் என்பதை யோவேல்-3: 4-9 வசனங்கள் அறிவிக்கின்றன. இது 2நாளாகமம்-21: 8 முதல் 16 வசனங்களுடன் ஒத்து வருகிறதாகவும் தோன்றுகிறது. இது 7 வயது சிறுவனாகிய யோவாஸ் யூதா வில் ராஜாவாக ஆட்சிசெய்த நாட்களாக இருந்திருக்கலாம்.

    யோவாஸ் மிகவும் சிறியவனாக இருந்ததால், மூப்பர்கள் முக்கிய பொறுப்பிலிருந்து வழிநடத்திச் சென்றார்கள். எனவே அதிகமாக மூப்பர்களைக்குறித்த குறிப்பு இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கருதுகிறோம். இது உண்மையாக இருக்குமெனில், கி.மு.870 முதல் 860ற்கு இடைப்பட்ட காலத்தில் இந்தப் புத்தகம் கணக்கிடப்படலாம்.

    2. எழுதிய நபர்: யோவேல்:

    யோவேல் யார் என்பதைக்குறித்த எந்தக்குறிப்பும் நமக்குக் கொடுக்கப் படவில்லை. யோவேல் என்ற பெயருக்கு யாவே தான் தேவன் என்று அர்த்தமாகும். தான் பெத்துவேலின் மகன் என்று யோவேல் தன்னை அறிமுகப்படுத்துகிறார்.

    யோவேல்-1: 2 பெத்துவேலின் குமாரனாகிய யோவேலுக்கு உண்டான கர்த்தருடைய வசனம். யோவேல், அடிக்கடி ஆசாரியத்துவத்தைக் குறித்துக் குறிப்பிடுவதால், இவர் யூதா தேசத்தில் ஒரு ஆசாரியனனாக இருந்திருக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள். நுன்கு படித்த ஒரு நபராகவும் யோவேல் காணப்படுகிறார். அவர் எழுதியிருக்கிற முறை அவருடைய கல்வியறிவை வெளிப்படுத்துகிறது.

    3. செய்தி:

    ஓசியாவின் புத்தத்தில், தேவனுக்கும் இஸ்ரவேலுக்குமிடையே கணவன் மனைவி என்ற பந்தத்தைக்குறித்து விவரிப்பதுபோல, யோவேலின் புத்தகம் வெட்டுக்கிளிகளைப்போல வந்துகொண்டிருக்கும் தேவனுடைய அழிவைக்குறித்து விவரிக்கிறது. எபிரேயத்தில், யோவேலின் புத்தம் 4 அதிகாரங்களாக உள்ளது. அவர்கள் அதிகாரம் 2: 28-32 தனி அதிகாரமாகக் காண்பித்திருக்கிறார்கள். அதேபோல அதிகாரம்-2: 17-18 வசனங்கள் 3ஆம் நபர் தன்மையிலிருந்து 2ஆம் நபர் தன்மைக்கு மாறுகிற வேற்றுமையில் இருக்கிறது.

    யோவேல் 2: 17-18 கர்த்தரின் பணிவிடைக்காரராகிய ஆசாரியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது: கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்தரத்தை ஒப்புக்கொடாதிரும், உங்கள் தேவன் எங்கே என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக. 18. அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங் கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார்.

    புதியஏற்பாட்டில் யோவேலின் புத்தகம் 28 முறை பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

    சில உதாரணங்கள்: (மத்தேயு, அப்போஸ்தல நடபடிகள், ரோமர், வெளிப்படுத்தின விசேஷம்...)

    மத்தேயு 24: 29 அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.

    யோவேல் 2: 31 கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

    அப்போஸ்தலர் 2: 16-21 தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப் பட்டபடியே இது நடந்தேறுகிறது. 17. கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்கதரிசனஞ் சொல்லுவார்கள், உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள், உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள், 18. என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்கதரிசனஞ் சொல்லுவார்கள். 19. அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழப்பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். 20. கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். 21. அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார். (யோவேல் 2: 28-32ல் இதைப் பார்க்கிறோம்.)

    ரோம-10: 13 கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.

    யோவேல் 2: 32 அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்.

  1. யோவேலில் காணப்படும் சில சிறந்த பகுதிகள்:

    †யோவேல்-2: 12-13 ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 13. நீங்கள் உங்கள் வஸ்திரங்களை அல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள், அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர், அவர் தீங்குக்கு மனஸ்தாபப் படுகிறவருமாய் இருக்கிறார். (தண்டனைத்தீர்ப்பை ஆசீர்வாதமாக மாற்றுவதற்கு மனந்திரும்புதலின் வல்லமை. இதுதான் இந்தப் புத்தகத்தின் அச்சாணியாக இருக்கிறது)

    †யோவேல்-2: 25-27 நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன். 26. நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள், என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. 27. நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறெருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள், என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. (இழந்ததை தேனவன் ஒருவரே திரும்பப் பெற்றுக்கொடுக்க வல்லவராக இருக்கிறார்)

    †யோவேல்-28-32 அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள், உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். 29. ஊழியக்காரர்மேலும் ஊழியக் காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன். 30. வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன். 31. கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். 32. அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான், கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர் களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும். (ஆவியானவர் ஊற்றப் படுதலைக்குறித்த வாக்குத்ததம்)

    †யோவேல்-3: 10 உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள், பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக. (தேசங்களுக்கு யுத்தத்தைக்குறித்த அறிவித்தல். ஏசாயா 2: 4 அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள், ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.)

    †யோவேல்-3: 13 பயிர் முதிர்ந்தது, அரிவாளை நீட்டி அறுங்கள், வந்து இறங்குங்கள், ஆலை நிரம்பியிருக்கிறது, ஆலையின் தொட்டிகள் வழிந்தோடுகிறது, அவர்களுடைய பாதகம்பெரியது. (இந்தக்காலத்தின் முடிவில் நடை பெறவிருக்கிற அறுவடை. வெளிப்படுத்தல் 15: 14-20).

    யோவேல் புத்தகம் எதைப் பற்றியது?

    நாம் யோவேல் புத்தகத்தைத் தூசி தட்டி உடைக்க வேண்டும். அது புறக்கணிக்கப்பட்டிருக்கலாம், ஏனென்றால் மக்கள் இதை நீண்ட காலத்திற்கு முன்பு வெட்டுக்கிளிகளால் இஸ்ரேலில் ஏற்பட்ட பஞ்சத்தைப் பற்றிய காலாவதியான தீர்க்கதரிசனமாகக் கருதுகிறார்கள்.

    ஆனால் நாம் அதை கவனமாகப் படித்தால், அதன் காலமற்ற தன்மைக்கு அதன் சொந்த சாட்சியத்தை நாம் கேட்போம். தீர்க்கதரிசனத்தின் தேதியை யாராலும் தீர்மானிக்க முடியாது, மேலும் அதன் ஆசிரியர் தேதியின் எந்த அறிகுறியும் இல்லை - ஒருவேளை வேண்டுமென்றே.

    புத்தகத்தின் மையத்தில், "' இப்போது கூட ,' என்று கர்த்தர் அறிவிக்கிறார் ..." ( யோவேல் 2:12 NIV, முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது) என்று புத்தகத்தின் செய்தி உயிருடன் இருப்பது போல் வாசிக்கிறோம்.

    மற்ற தீர்க்கதரிசன புத்தகங்களைப் போலல்லாமல், யோவேல் இஸ்ரவேலின் பாவங்களைப் பட்டியலிடவில்லை, அவற்றுக்காக தேசத்தைக் குற்றஞ்சாட்டவில்லை. அதற்கு பதிலாக, ஒரு பண்டைய எக்காளத்தின் நீண்ட ஊதுதலைப் போல, "கர்த்தருடைய நாள் வருகிறது " ( யோவேல் 1:15; 2:1, 11, 31; 3:14 ESV) என்ற பல்லவியை நாம் மீண்டும் மீண்டும் கேட்கிறோம்.

    கர்த்தருடைய நாள் நியாயத்தீர்ப்பைக் குறிக்கிறது - "சர்வவல்லவரிடமிருந்து வரும் அழிவு... இருளும் இருளும் நிறைந்த நாள்... அதை யார் தாங்க முடியும்... நட்சத்திரங்கள் தங்கள் பிரகாசத்தை மறைக்கும் ஒரு பெரிய மற்றும் பயங்கரமான நாள்" ( யோவேல் 1:15; 2:2, 11, 31; 3:15 ESV). பயமுறுத்துகிறது, இல்லையா? இந்த நாளை நடுக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாக யோவேல் விவரிக்கிறார் ( யோவேல் 1:15; 2:1, 10-11 ).

    யோவேலின் பேச்சைக் கேட்டவர்கள், வெட்டுக்கிளிகள் இஸ்ரவேலின் பயிர்களை நாசமாக்குவதைக் கண்டிருக்கலாம். கடுமையான பஞ்சம் அவர்களை கடவுளின் வெறுப்புக்கு விழித்தெழச் செய்து, அவரைத் தேடும்படி அழைத்தது. அது கர்த்தருடைய நியாயத்தீர்ப்பின் நாளாக இருந்தது. யோவேல் இந்த நிகழ்வைப் பயன்படுத்தி, இஸ்ரவேலை ஒரு மங்கலான பார்வை மூலம், வேறு வகையான வெட்டுக்கிளியைப் பற்றி எச்சரிக்கிறான் - நெருப்புடன் கூடிய ஒரு பயங்கரமான வகை வெட்டுக்கிளி, ஒருவேளை உயிரினமாக அல்ல, ஆனால் மனிதனாக இருக்கலாம். ஒரு வகையான படை நியாயத்தீர்ப்பில் புறப்படுகிறது ( யோவேல் 2:2-5 ).

    ஒருவேளை இந்த தெளிவற்ற படம் இஸ்ரேலை நாசமாக்கி, அவர்களை நாடுகடத்திய வெளிநாட்டு சக்திகளைக் குறிக்கலாம். இருப்பினும், யோவேலின் தீர்க்கதரிசனம் காலாவதியாகவில்லை என்பதை நமக்கு நினைவூட்டும் சில தடயங்களை பைபிளில் வேறு இடங்களில் காண்கிறோம். இது இன்று நமக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை.

    வெளிப்படுத்தல் 9- ல் , யோவேலின் இரண்டாம் அதிகாரத்திற்கு மிகவும் ஒத்த ஒரு தீர்க்கதரிசனத்தைக் காண்கிறோம். யோவேலின் தீர்க்கதரிசனம் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பின் நிழலாக, கர்த்தருடைய நாளாக இருக்கிறது.

    யோவேல் புத்தகத்தில், வெட்டுக்கிளிகள் உணவையும் நிலத்தையும் விழுங்குகின்றன. முழு பைபிள் கதையையும் கருத்தில் கொண்டு, இது ஒரு கருணை என்பதைக் காண்கிறோம். வெளிப்படுத்தலில் விவரிக்கப்பட்டுள்ள கர்த்தருடைய நாளில், வெட்டுக்கிளிகளின் ஒரு படை நியாயத்தீர்ப்பின் அடையாளமாக உணவு மற்றும் நிலத்திற்கு தீங்கு விளைவிக்காது. அதற்கு பதிலாக, இறுதி நியாயத்தீர்ப்பின் கடைசிச் செயலில் ஒரு காட்சியின் போது தங்கள் பாவத்திலிருந்து மனந்திரும்பி கடவுளிடம் திரும்ப மறுக்கும் மக்களுக்கு அவை தீங்கு விளைவிக்கும் ( வெளிப்படுத்தல் 9:3-11 ). மனந்திரும்புவதற்கான எச்சரிக்கையாகச் செயல்படுவதற்குப் பதிலாக, இந்த வெட்டுக்கிளிகள் மனந்திரும்பாதவர்களுக்கு ஒரு நியாயத்தீர்ப்பாக இருக்கும் . யோவேலின் காலத்தில் இருந்த மக்களைப் போலல்லாமல், கடைசி நாட்களில் உள்ள மக்கள் மனந்திரும்ப மறுப்பார்கள் என்று பைபிள் கூறுகிறது ( வெளிப்படுத்தல் 9:20-21 ).

    கடவுளின் கோபம் இன்னும் காத்திருக்கிறது - முடிவு இன்னும் வரவில்லை. வெட்டுக்கிளிகள் இன்னும் தங்கள் வழியில் உள்ளன - இது எப்படி இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. நாம் முன்பு கூறியது போல், யோவேலின் தீர்க்கதரிசனம் காலாவதியாகவில்லை. மனந்திரும்பாதவர்கள் மீது கடைசி நாட்களில் கடவுளின் கோபம் ஊற்றப்படும் என்பதை நாம் அறிவோம் ( 2 தெசலோனிக்கேயர் 1:6-9 ).

    நாம் அவரில் நம்பிக்கை வைத்தால், தேவனுடைய கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, நம்முடைய பாவங்களுக்காக நாம் அடைய வேண்டிய கோபத்தை இயேசு கிறிஸ்து சுமந்தார்.

    யோவேலின் செய்தி இன்னும் நம் தலைமுறையில் எதிரொலிக்கிறது: “இப்போதும் கூட , உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள்” ( யோவேல் 2:12 ESV, வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது) என்று கர்த்தர் அறிவிக்கிறார் . கர்த்தருடைய இறுதி நாள் வரை, நாம் நம் பாவங்களுக்காக மனந்திரும்பி, கர்த்தரிடம் திரும்பி, நம் வாழ்க்கையை அவரிடம் ஒப்படைக்கலாம். கர்த்தர் “கிருபையும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையும் உள்ளவர்; அவர் பேரழிவை மனந்திரும்புகிறார்” ( யோவேல் 2:13 ESV, வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது).

    யோவேலுக்கும் வெளிப்படுத்துதலுக்கும் இடையில் ஒரு நாள் இருந்தது, அப்போது சூரியன் இருண்டு போனது ( யோவேல் 2:30-32 ), கர்த்தர் தம்முடைய கோபத்திலிருந்து தப்பிக்க ஒரு வழியைத் திறந்தார். இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக நாம் பெற வேண்டிய கோபத்தை சுமந்தார், அதனால் நாம் அவரில் நம்பிக்கை வைத்தால், கடவுளின் கோபத்திலிருந்து தப்பிப்போம். தங்கள் பாவத்திலிருந்து திரும்பி மன்னிப்புக்காக இயேசுவை அழைப்பவர்களுக்கு, தேவன் தம்முடைய கோபத்தை அல்ல, தம்முடைய கிருபையை ஊற்றுவார் . யோவேலின் தீர்க்கதரிசனம் ஓரளவு நிறைவேறியது: “கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான் . ... கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு அடைக்கலமும், இஸ்ரவேல் ஜனங்களுக்கு அரணான கோட்டையுமானவர்” ( யோவேல் 2:32; 3:16 ESV).

    பாவத்திலிருந்து கடவுளிடம் திரும்பும் அனைவருக்கும், அவர் அவர்களுடைய குற்றங்களை மன்னிப்பார் ( யோவேல் 3:21 ), பின்னர் அவர்களுக்கு இரட்சிப்புடன் அவருடைய பிரசன்னத்தின் ஆசீர்வாதத்தைக் கொண்டுவருவதற்காக அவருடைய ஆவியை அவர்கள் மீது ஊற்றுவார் ( யோவேல் 2:28 ).

    எளிமையான சொற்களில், யோவேல் என்பது மனந்திரும்ப உங்களை அழைக்கும் ஒரு காலத்தால் அழியாத எக்காள சத்தம் - உங்கள் பாவங்களிலிருந்து விலகி கடவுளிடம் திரும்புங்கள். கடவுளின் கோபம் நாம் பயப்படத் தகுதியானது - அவருக்கு முன்பாக மண்டியிடத் தவறியவர்கள் மீதான அவரது தவிர்க்க முடியாத நீதி. ஆனால் "அவர் மனந்திரும்பவும் தண்டிக்காமல் இருக்கவும் ஆர்வமாக உள்ளார்" ( யோவேல் 2:13 NLT).

    இப்போதும் கூட நீங்கள் கர்த்தரிடத்தில் அடைக்கலம் காணலாம்! அவர் தம்மை நம்புகிற அனைவரையும் ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிக்கத் தயாராக இருக்கிறார் ( யோவேல் 2:14 ). கர்த்தருடைய நாளுக்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? அது உங்களுக்கு பேரழிவை ஏற்படுத்துமா, அல்லது அவருடைய நியாயத்தீர்ப்பின் காற்று கடந்து செல்லும்போது, நீங்கள் இயேசுவில் பாதுகாப்பாக மறைக்கப்பட்டதால், "எண்ணெய் மற்றும் திராட்சரசத்தை" அனுபவிப்பவர்களில் ஒருவராக இருப்பீர்களா ( யோவேல் 2:18-27, 32 )?

    யோவேலின் பின்னணி என்ன?

    ஆசிரியர் மற்றும் தேதி

    யூதாவைச் சேர்ந்த (ஒருவேளை ஜெருசலேம்) தீர்க்கதரிசியான யோவேலைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. பெரும்பாலான அறிஞர்கள் இந்தப் புத்தகத்தை பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட பிறகு (கிமு 586) தேதியிடுகின்றனர்.

    பின்னணி

    தேசிய பேரழிவின் போது யூதா மற்றும் எருசலேம் மக்களை புலம்பி கர்த்தரிடம் திரும்புமாறு யோவேல் அழைக்கிறார். வெட்டுக்கிளிகளின் தொல்லை திராட்சை ரசத்தையும் ( யோவேல் 1:5, 7, 12 ) தானியத்தையும் ( யோவேல் 1:10 ) அழித்துவிட்டது. இது கோவிலில் காணிக்கைகளை வழங்கும் மக்களின் திறனை அச்சுறுத்துகிறது ( யோவேல் 1:9, 13, 16 ).

    முக்கிய கருப்பொருள்கள்

    1. கர்த்தருடைய நாள்

    புத்தகத்தின் முக்கிய கருப்பொருள் "கர்த்தருடைய நாள் " . சூழ்நிலைகளைப் பொறுத்து, கர்த்தருடைய பிரசன்னம் நியாயத்தீர்ப்பு மற்றும்/அல்லது விடுதலை மற்றும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும் ஒரு காலத்தை இது விவரிக்கிறது. ஆகையால், "நாள்" தேசங்களுக்கு அழிவை ஏற்படுத்தினாலும், அதை கடவுளுடைய மக்களுக்கு இரட்சிப்பின் நேரமாகவும் காணலாம். நியாயத்தீர்ப்பின் குழப்பத்தில் கர்த்தர் ஒரு அடைக்கலமாக இருக்கிறார் ( யோவேல் 3:15–16 ).

    2. மனந்திரும்புதல்

    முழு சமூகமும் கர்த்தரிடம் கூக்குரலிட்டு ( யோவேல் 1:13-20 ) அவரைப் பார்த்தால் - வெறும் வெளிப்புற செயல்களால் மட்டுமல்ல, நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் ( யோவேல் 2:12-13 ) - தீர்ப்பு தடுக்கப்படலாம். இருப்பினும், கர்த்தர் சமூகத்தின் செயல்களால் கட்டுப்படவில்லை ( யோவேல் 2:14 ). வெட்டுக்கிளிகளால் அழிவை அனுப்புவது அல்லது தடுப்பது அவருடைய முடிவு ( யோவேல் 1:15 ), அதேபோல் இராணுவம் கட்டளையிடுவது அவருடையது ( யோவேல் 2:11 ).

    3. அவர்கள் நடுவில் கர்த்தர்

    கர்த்தர் நியாயத்தீர்ப்பிலிருந்து ஆசீர்வாதமாக மாறுவதற்கான காரணம், அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கும் தன்மையை வெளிப்படுத்துவதாகும் ( யோவேல் 2:13, 18–26; 3:18 ). தம்முடைய ஜனங்களின் நடுவில் வசிப்பதாக அவர் அளித்த வாக்குறுதி, யோவேலில் மட்டுமல்ல ( யோவேல் 2:27; 3:17, 21 ) பழைய ஏற்பாடு முழுவதிலும் ( எண்ணாகமம் 35:34 ; ஏசாயா 12:6 ; செப்பனியா 3:15, 17 ; சகரியா 2:10–11 ) முக்கியமானது. வெட்டுக்கிளிகள் அழித்ததை தேவன் மீட்டெடுக்கிறார் ( யோவேல் 2:27 ) மேலும் உலகம் நொறுங்கும்போது இஸ்ரவேலைப் பாதுகாக்கிறார் ( யோவேல் 3:16–17 ) இதனால் மக்கள் அவருடைய பிரசன்னத்தை அறிந்துகொள்வார்கள். இந்தக் கருப்பொருள் புத்தகத்தின் இறுதியில் ( யோவேல் 3:21 ) மீண்டும் கூறப்பட்டுள்ளது, இது யோவேலுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டுகிறது.

    4. இந்த மூன்று கருப்பொருள்களும் எதிர்காலத்தில் ஆவியின் ஊற்றுதலின் வாக்குறுதியில் ஒன்றிணைகின்றன ( யோவேல் 2:28–32 )

    இந்த ஊற்று ஊற்று கர்த்தருடைய நாளுடன் ( யோவேல் 2:31 ) அதன் நியாயத்தீர்ப்பு ( யோவேல் 2:30–31 ; யோவேல் 2:10; 3:15 ஐப் பார்க்கவும் ) மற்றும் அதன் இரட்சிப்பு ( யோவேல் 2:32 ) ஆகிய இரண்டிலும் தொடர்புடையது. ஆவியின் ஊற்று ஊற்று மனந்திரும்புதலுடனும் தொடர்புடையது: இரட்சிக்கப்பட்டவர்கள் "கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்கிறார்கள் " ( யோவேல் 2:32 ). ஆவியைக் கொடுப்பது தேவன் தம்முடைய ஜனங்களின் "நடுவில்" இருப்பதற்கான இறுதி சான்றாகும் ( ஏசாயா 63:11ஆகாய் 2:5 ஐப் பார்க்கவும் ).

    சுருக்கம்

    I. யூதாவுக்கு எதிரான நியாயத்தீர்ப்பும் கர்த்தருடைய நாளும் (1:1–2:17)
    A. வெட்டுக்கிளி படையெடுப்பு: கர்த்தருடைய நாளுக்கு முன்னோடி (1:1–20)
    B. இராணுவ படையெடுப்பு: கர்த்தருடைய நாளின் வருகை (2:1–17)

    II. கர்த்தருடைய இரக்கமும் தேசங்களுக்கு எதிரான நியாயத்தீர்ப்பும் (2:18–3:21)
    அ. இரக்கம்: கர்த்தர் தம்முடைய ஜனங்களை மீட்டெடுப்பதன் மூலம் பதிலளிக்கிறார் (2:18–32)
    ஆ. நியாயத்தீர்ப்பு: தேசங்களுக்கு எதிரான கர்த்தருடைய நியாயத்தீர்ப்பும் அவருடைய ஜனங்களோடு அவர் தங்கியிருப்பதும் (3:1–21)

    யோவேலின் உலகளாவிய செய்தி

    தீர்க்கதரிசிகளில் அடிக்கடி நிகழ்வது போல, யோவேலின் மையச் செய்தி, நியாயத்தீர்ப்பின் மத்தியிலுள்ள இரட்சிப்பு என்பதாகும். யோவேலில் நியாயத்தீர்ப்பு மற்றும் இரட்சிப்பு இரண்டும் உலகளவில் இயற்கையில் உள்ளன. யோவேல் முழுவதும், இஸ்ரவேல் மீதும் ( யோவேல் 1:15; 2:2, 11 ) உலக நாடுகள் மீதும் ( யோவேல் 3:2-3 ) நியாயத்தீர்ப்பு வரும் என்ற அர்த்தத்தில் நியாயத்தீர்ப்பு உலகளாவியது. தேவன் ஒரு நாள் "சகல மாம்சத்தின் மீதும்" ( யோவேல் 2:28 ) தம்முடைய ஆவியை ஊற்றுவார் என்ற அர்த்தத்தில் இரட்சிப்பு உலகளாவியது , இதனால் " கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்" ( யோவேல் 2:32 ).

    மீட்பு வரலாற்றில் யோவேல்

    ஏதேன் நினைவு

    ஏதேனில், தேவன் ஒரு செழிப்பான, துடிப்பான சொர்க்கத்தை உருவாக்கினார். உணவும் பானமும் ஏராளமாக இருந்தன. தாவரங்கள் செழித்து வளர்ந்தன. மனிதகுலமும் விலங்குகளும் மகிழ்ச்சியான ஒற்றுமையில் வாழ்ந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக, தேவன் தனது மக்களுடன் சரியான ஐக்கியத்தில் வாழ்ந்தார். இந்த செழிப்பான ஷாலோம் ஒவ்வொரு மட்டத்திலும் உடைக்கப்பட்ட வீழ்ச்சிக்குப் பிறகு, தேவன் தனது மக்களை மீட்டெடுக்கும் மகத்தான வரலாற்றுப் பணியைத் தொடங்கினார். உதாரணமாக, வாக்குறுதியளிக்கப்பட்ட தேசத்தை "பால் மற்றும் தேனால் ஓடுவது" என்று கர்த்தர் விவரிக்கும்போது ( யாத்திராகமம் 3:8, 17 ), இவை ஏதேன் மறுசீரமைப்பை விவரிப்பதாக யூதர்களால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் சொற்கள் ( யோவேல் 2:3; 3:18 ஐப் பார்க்கவும் ).

    படைப்பை அழித்தல்

    அதன்படி, தீர்க்கதரிசிகள் முழுவதும் தெய்வீக நியாயத்தீர்ப்பு ஏதேனில் செழித்து வளர்ந்ததை அழிப்பதாக மீண்டும் மீண்டும் விவரிக்கப்படுகிறது. யோவேலின் தீர்க்கதரிசனம் இந்த வகையான கற்பனைகளால் நிரம்பியுள்ளது. யோவேலின் 1 வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை படைப்பில் செய்யப்பட்டதை துல்லியமாக அழிப்பதாக விவரிக்கிறது: "வயல்கள் அழிக்கப்பட்டன, நிலம் துக்கப்படுகிறது, ஏனென்றால் தானியங்கள் அழிக்கப்பட்டன, திராட்சை வற்றின, எண்ணெய் வற்றியது" ( யோவே 1:10 ). கால்நடைகளும் ஆடுகளும் பட்டினி கிடக்கின்றன ( யோவே 1:18, 20 ). படைப்பில் உலகில் ஒளி உதித்தது போல, படைப்பின் இந்த அழிவில் பூமியை இருள் மூடுகிறது: "சூரியனும் சந்திரனும் இருண்டு போகின்றன, நட்சத்திரங்கள் தங்கள் பிரகாசத்தை இழக்கின்றன" ( யோவே 2:10யோவே 2:2; 3:15 ஐ ஒப்பிடுக ).

    கர்த்தருடைய நாள்

    நியாயத்தீர்ப்பின் இந்த அறிகுறிகள் அனைத்தும் யோவேல் "கர்த்தருடைய நாள் " ( யோவேல் 1:15; 2:1, 11, 31; 3:14 ) பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதில் சுருக்கப்பட்டுள்ளன. யோவேல் கர்த்தருடைய நாளை வெட்டுக்கிளிகளின் படையெடுப்புடன் அடையாளம் காட்டுகிறார், அவை தங்கள் பாதையில் உள்ள அனைத்தையும் முற்றிலுமாக அழிக்கின்றன. இது இஸ்ரேலின் பாவத்தின் காரணமாக வரும் நியாயத்தீர்ப்பு. ஆனாலும் இந்த பாவத்தின் மத்தியிலும், மனந்திரும்பி தம்மிடம் திரும்புபவர்களை தேவன் காப்பாற்றுவார் ( யோவேல் 2:12-14 ). தேவன் "வெட்டுக்கிளிகள் சாப்பிட்ட வருடங்களை உங்களுக்குத் திருப்பித் தருவார்" ( யோவேல் 2:25 ).

    ஏதேன் மீண்டும் பெறப்பட்டது

    தெய்வீக மறுசீரமைப்பின் இந்த வாக்குறுதி, எதிர்காலத்தில் ஏதோ ஒரு நேரத்தில் "எல்லா மாம்சத்தின் மீதும்" தேவன் தம்முடைய ஆவியை ஊற்றுவார் என்ற யோவேலின் தீர்க்கதரிசனத்தில் உச்சக்கட்டத்தை அடைகிறது ( யோவேல் 2:28–32 ). இந்தத் தீர்க்கதரிசனம் அப்போஸ்தலர் 2-ல் உள்ள பெந்தெகொஸ்தே நாளில் , தேவன் தம்முடைய ஆவியை பல்வேறு தேசங்களின் மீது ஊற்றியபோது நிறைவேறியது ( அப்போஸ்தலர் 2:16–21 ). இந்தத் தீர்க்கதரிசனம் இறுதி நிறைவுக்குக் கொண்டுவரப்படும், மேலும் பரிசுத்தவான்கள் பரலோகத்தில் கிறிஸ்துவை வணங்கும்போது அதன் இறுதி நோக்கத்தை அடைவார்கள், "சகல கோத்திரங்களிலும், மொழிகளிலும், மக்களிலும், தேசங்களிலும் இருந்து தேவனுக்கென்று மீட்கப்பட்ட மக்கள்" ( வெளிப்படுத்தல் 5:9 ). அங்கு, ஏதேன் ஒருமுறை மீண்டும் பெறப்படும் ( வெளிப்படுத்தல் 22:1–5 ), இந்த முறை ஊழல் ஏற்படுவதற்கான எந்த சாத்தியமும் இல்லாமல்.

    யோவேலில் உள்ள உலகளாவிய கருப்பொருள்கள்

    தேவபக்தியற்ற நாடுகள் மீதான நியாயத்தீர்ப்பு

    யோவேல் 1- ல் இஸ்ரவேலைத் துன்புறுத்தும் வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைப் பற்றி விவரித்து , பின்னர் யோவேல் 2- ல் இஸ்ரவேலருக்கு இறுதி மறுசீரமைப்பை உறுதியளித்த பிறகு , தீர்க்கதரிசனம் மூன்றாம் அதிகாரத்தில் அதன் கவனத்தை தேசங்களுக்குத் திருப்புகிறது. யோவேல் 3 முழுவதும் உள்ள கருப்பொருள் உலகின் தெய்வீகமற்ற தேசங்கள் மீது கடவுளின் நீதியான நியாயத்தீர்ப்பு ஆகும். "நான் எல்லா தேசங்களையும் கூட்டி யோசபாத்தின் பள்ளத்தாக்கிற்குக் கொண்டு வருவேன். அங்கே அவர்களுடன் நான் நியாயத்தீர்ப்பில் நுழைவேன்" ( யோவேல் 3:2 ). உலக நாடுகள் அப்போது செய்த அல்லது இன்று செய்த அநீதிகளிலிருந்து தப்பித்தாலும், குறிப்பாகத் தம்முடைய சொந்த மக்களுக்கு எதிரான அநீதியிலிருந்து தப்பித்தாலும், தேவன் அத்தகைய தீமையை நியாயத்தீர்ப்புக்குக் கொண்டுவருவதாக உறுதியளிக்கிறார்.

    நியாயத்தீர்ப்பின் நடுவில் கடவுளின் தொலைதூரக் கிருபை

    யாத்திராகமம் 34- ல் , தேவன் மோசேக்கு தன்னை "இரக்கமும், கிருபையும், கோபத்திற்கு நீடிய சாந்தமும், உறுதியான அன்பில் மிகுதியுமான தேவன்" ( யாத்திராகமம் 34:6 ) என்று வெளிப்படுத்தினார். கர்த்தரைப் பற்றிய இந்த அடிப்படை விளக்கம் பழைய ஏற்பாட்டின் மீதமுள்ள பகுதி முழுவதும் எடுக்கப்பட்டுள்ளது, இதில் யோவேல் 2:13- ல் உள்ளது: "உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்புங்கள் , அவர் கிருபையும், இரக்கமும், கோபத்திற்கு நீடிய சாந்தமும், உறுதியான அன்பில் மிகுதியுமானவர்." பின்னர் யோவேல் 2- ல் உள்ள மறுசீரமைப்பு வாக்குறுதி, தேவன் மாம்சமான அனைவரின் மீதும் தம்முடைய ஆவியை ஊற்றுவார் என்றும், " கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்" என்றும் தீர்க்கதரிசனத்தில் முடிவடைகிறது ( யோவேல் 2:32 ). பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அப்போஸ்தலன் பவுல் கிருபையின் நற்செய்தியின் உலகளாவிய நோக்கத்தை வலியுறுத்துவதற்காக ரோமர் 2:32-ஐ மேற்கோள் காட்டினார் ( ரோமர் 10:12-13 ).

    உண்மையான மனந்திரும்புதல்

    கடவுளுடைய மக்களின் வரலாற்றில் அடிக்கடி நடந்திருப்பது போல, யோவேலின் காலத்தில் இஸ்ரவேல் மக்கள் வெளிப்புறமாக வழிபாட்டிற்கு ஏற்ற செயல்களைச் செய்து வந்தனர், ஆனால் அவர்களின் இதயங்கள் கடவுளிடமிருந்து வெகு தொலைவில் இருந்தன. "இப்போதும் கூட, உங்கள் முழு இருதயத்தோடும், உபவாசத்தோடும், அழுகையோடும், துக்கத்தோடும் என்னிடம் திரும்பி வாருங்கள்; உங்கள் ஆடைகளை அல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்துக்கொள்ளுங்கள்" என்று கர்த்தர் அறிவிக்கிறார் ( யோவேல் 2:12-13 ). வெறும் சடங்குகளில் ஈடுபட முயற்சிக்கும் போக்கு வீழ்ந்த மனித இயல்புக்கு பொதுவானது, மேலும் உலகில் எங்கிருந்தாலும் திருச்சபை இதற்கு எதிராகப் பாதுகாக்க வேண்டும்.

    இன்றைய உலகளாவிய யோவேலின் செய்தி

    இன்றைய உலகளாவிய திருச்சபைக்கு யோவேலின் தீர்க்கதரிசனம் நிறைய சொல்ல வருகிறது. உண்மையில், யோவேலில் முழு வேதாகமத்தின் செய்தியையும் சுருக்கமாகக் காண்கிறோம்: நியாயத்தீர்ப்பின் மத்தியில் இரட்சிப்பு.

    நியாயத்தீர்ப்பு தவிர்க்க முடியாதது. உண்மையில், கடவுளின் நீதி மற்றும் பரிசுத்தத்தின் வெளிச்சத்தில், தேவன் தீர்ப்பளிக்காமல் இருப்பது தவறாகும் . கடவுளை முற்றிலுமாக நிராகரிப்பவர்கள் மீதும், உண்மையான மனந்திரும்புதலை எதிர்த்தவர்கள் மீதும், அவரை அறிந்திருப்பதாகக் கூறி , வெறுமனே முறையான, வெளிப்புற மற்றும் வெற்று வழியில் வணங்கத் தேர்ந்தெடுப்பவர்கள் மீதும் நியாயத்தீர்ப்பு வரும். வர்க்கம், இனம் அல்லது கலாச்சாரத்தைப் பொருட்படுத்தாமல், மனந்திரும்பாத ஒவ்வொரு பாவியையும் தெய்வீக நீதி முறியடிக்கும். அநீதி தோற்கடிக்கப்படும், கர்த்தர் தனது நீதியான ஆட்சியை நிறுவுவார்.

    ஆனாலும், கர்த்தரை உண்மையாகக் கூப்பிடுகிற அனைவருக்கும் இரட்சிப்பு காத்திருக்கிறது. மிகவும் மதவாதிகளாக இருந்தாலும் சரி, மிகவும் தேவபக்தியற்ற பின்னணியிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் சரி, தம்மை உண்மையாகக் கூப்பிடுகிறவர்களை அவர் தம்முடைய குடும்பத்தில் வரவேற்கிறார். உலகெங்கிலும் உள்ள கர்த்தரையும், பாவிகளின் இரட்சிப்புக்காக இயேசு கிறிஸ்துவில் அவர் செய்ததையும் நம்புகிற அனைவருக்கும், தேவன் முழுமையான மற்றும் இலவச பாவ மன்னிப்பை வழங்குவார். இதை விட, அவர் தம்முடைய சொந்த ஆவியை அவர்கள் மீது ஊற்றுவார். மேலும் ஒரு நாள் தேவன் இறுதியாக தம்முடைய மக்கள் அனைவரையும் மீட்டெடுக்கப்பட்ட புதிய படைப்புக்குள் , ஏதேனுக்குத் திரும்பக் கொண்டுவருவார்: “அந்நாளில் மலைகள் இனிய திராட்சரசத்தைப் பொழியும், குன்றுகள் பாலால் ஓடும், யூதாவின் எல்லா ஓடைகளும் தண்ணீரால் ஓடும்; கர்த்தருடைய ஆலயத்திலிருந்து ஒரு ஊற்று புறப்படும் ” ( யோவேல் 3:18 ).

    யோவேலின் தொகுப்பு:

    (மொத்தம் 3 அதிகாரங்கள் உள்ளன, 2 தொகுப்புகளாகப் பிரிக்கலாம்.)

    1. அதிகாரங்கள் 1 முதல் 2: 17 வரை:

    அ. இயற்கை அழிவு: (1: 1-20)

    1. வெட்டுக் கிளியால் வரும் அழிவு (1: 4)
    2. பஞ்சமும் வறட்சியும் (1: 17-20)
    3. அக்கின பட்சித்தல் (1: 19-20)

    ஆ. புலம்பி அழுவதற்குரிய அழைப்பு(1: 13-20)

    முதலாவது அதிகாரத்தில் வேளாண்மை ரீதியாக தேசத்திற்கு வரவிருந்த அழிவைக்குறித்தும், 2ஆவது அதிகாரத்தில் இராணுவ ரீதியாக தேசத்திற்கு வரவிருந்த அழிவைக்குறித்தும் தேவன் எச்சரித்தார். ஆபத்து, அல்லது அழிவைக்குறித்த எச்சரிப்பு நம்மை மனந்திரும்புவதற்கு அழைப்பதாக, எதிர்கொள்வதற்கு ஆயத்தப் படுத்துவதற்காக இருக்கிறது. அழிப்பது அல்ல தேவனுடைய நோக்கம், அழைப்பதும், ஆயத்துப் படுத்துவதுமே தேவனுடைய நோக்கமாக இருக்கிறது. அதிலே தேவனுடைய இருதயத்தை நாம் பார்க்கிறோம்.

    இ. பாபிலோனின் படையெடுப்பு(2: 1-9 பாபிலோன் யூதாவுக்கு விரோதமாக வருதல்-70 வருட சிறைபிடிப்பு)

    ஈ. மனந் திரும்புதலுக்கான அழைப்பு(2: 12-17)

    1. அதிகாரம் 2: 18 முதல் 3: 21 வரை: பராக்கிரமமுள்ள ஒரு தேவனாக:

    அ. தேவ படையெடுப்பு (2: 18-27)

    ஆ. ஆவியானவரின் ஊற்றப்படுதல் (2: 28-32)

    இ. தேனுடைய நியாயத்தீர்பபு (3: 1-17)

    ஈ. தேவ வாசம்பண்ணுதல் (3: 18-21)

    யோவேலின் புத்தகத்தில் கர்த்தருடைய நாளைக்குறித்து 3 விதங்களைப் பார்க்கிறோம்:
    1. யோவேல்-1: 15 அந்த நாளினிமித்தம் ஐயோ! கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது, அது சங்காரம்போலச் சர்வ வல்லவரிடத்திலிருந்து வருகிறது. (வேளாண்மையில் அழிவு வருதல்)
    2. யோவேல்-2: 1, 11 சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள், தேசத்தின் குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவார்கள், ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது. 11. கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார், அவருடைய பாளயம் மகாபெரியது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது, கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும், அதைச் சகிக்கிறவன் யார்? (இது பாபிலேனின் படையெடுப்பைக் குறித்து அறிவிக்கிறது)
    3. யோவேல்-3: 14 நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஜனங்கள் திரள்திரளாய் இருக்கிறார்கள், நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது. (இது இஸ்ரவேல் ஜனத்தின்மீது தேவனுடைய ஆசீர்வாதமும், அந்திக்கிறிஸ்துவின் ராஜ்யத்தின்மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பும் வெளிப்படும் நாளாகும். யோவேல் 2: 2,11 அது இருளும் அந்தகாரமுமான நாள், அது மப்பும் மந்தாரமுமான நாள். 11. கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும். (அந்திக்கிறிஸ்துவுக்கும் அவனுடைய ஆட்களுக்கும்).

    இஸ்ரவேல் தேசத்திற்கோ: (யோவேல்-3: 16-18 கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார், வானமும் பூமியும் அதிரும், ஆனாலும் கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார். 17. என் பரிசுத்த பர்வதமாகிய சீயோனிலே வாசமாயிருக்கிற நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள், அப்பொழுது எருசலேம் பரிசுத்தமாயிருக்கும், அந்நியா; இனி அதைக் கடந்துபோவதில்லை. 18. அக்காலத்தில் பர்வதங்கள் திராட்சரசத்தைப் பொழியும், மலைகள் பாலாய் ஓடும், யூதாவின் ஆறுகள் எல்லாம் பிரவாகித்து ஓடும், ஒரு ஊற்று கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டுச் சித்தீம் என்னும் பள்ளத்தாக்கை நீர்ப்பாய்ச்சலாக்கும்.

    கர்த்தருடைய நாளைக்குறித்த 3 கோணப் புரிந்துகொள்ளுதல்:
    1. யோவேலின் நாட்களிலே பகுதியளவு நிறைவேறியவைகள்.
    2. மகாஉபத்திரவத்தின் நாட்களில் நிறை வேரவிருப்பவைகள் (வெளிப்படுத்தின விசேஷத்தில் வருகிற தேவனுடைய 3 குழுவாக 21 நியாயத்தீர்ப்புகள். 7 முத்திரை உடைக்கப்படுதல், 7 எக்காளங்கள் ஊதப்படுதல், 7 கோபக்கலசங்கள் ஊற்றப்படுதல்)
    3. நிறைவான நிறைவேறுதல்: கர்த்தருடைய நாளை முடிவிற்குக் கொண்டுவருகிற வெள்ளைசிங்காசன நியாயத் தீர்ப்பின்போது.

    கர்த்தருடைய நாள் என்பதை கடைசி நாட்கள் அல்லது கடைசிநாள் என்றும் வேதம் அழைக்கிறது. பொதுவாக நாட்களில் கடைசிநாளைக் குறிக்கும் 3 பகுதிகளை நாம் பார்க்கலாம்.

    யோவான் 6: 39 எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.

    1. ஒரு வாரம் - 7 நாட்கள்: 7ஆவது நாள் கடைசி நாளாகும்.
    2. ஒரு மாதம்- 30 (31) நாட்கள்: 30ஆவது (31) நாள் கடைசி நாளாகும்.
    3. ஒரு ஆண்டு- 365 நாட்கள்: டிசம்பர் 31 கடைசி நாளாகும்.
    • நாம் வாழ்கிற இந்த உலகத்திற்கு படைக்கப்பட்ட முதல்நாளிலிருந்து (ஆதியாகமம் 1: 5 முதலாம் நாள் ஆயிற்று), நித்தியம் என்ற ஒன்று ஆரம்பிக்கப் படுவதற்குமுன் முந்தையநாள், அதாவது நேரமும், நாளும் முடிவுக்குவருகிற நாள் கடைசிநாளாகும்.
    • ஒரு நபருக்கு, பிறந்தநாளிலிருந்து அவர் மரிக்கிற நாள் கடைசிநாளாகும்.