சங்கீதம் - * கர்த்தர் ஆசீர்வாதம் அவசியம் *



* கர்த்தர் ஆசீர்வாதம் அவசியம் *


தமிழ் வேதாகமம்சங்கீதம்அதிகாரம் - 127




கர்த்தர் இல்லாத ஒரு வீட்டைக் கட்டுவது மற்றும் ஒரு நகரத்தை வைத்திருப்பது போன்ற வீண் முயற்சிகளைப் பற்றி சாலமன் பேசுகிறார்.



1. கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா; கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.

2. நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.

3. இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.

4. வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.

5. அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள்.



127
home



கர்த்தர் இல்லாத ஒரு வீட்டைக் கட்டுவது மற்றும் ஒரு நகரத்தை வைத்திருப்பது போன்ற வீண் முயற்சிகளைப் பற்றி சாலமன் பேசுகிறார். அவர் குழந்தைகளை இறைவனிடமிருந்து பெற்ற மரபு என்று பேசுகிறார், மேலும் அவர்களை ஒரு யுத்தம்வீரனின் கையில் உள்ள அம்புகளுக்கு ஒப்பிடுகிறார்.