சங்கீதம் - * கர்த்தருக்குப் பயபக்தியின் ஆசீர்வாதம் *



* கர்த்தருக்குப் பயபக்தியின் ஆசீர்வாதம் *


தமிழ் வேதாகமம்சங்கீதம்அதிகாரம் - 128




கர்த்தருக்குப் பயப்படுகிற யாவரும் பாக்கியவான்கள்



1. கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.

2. உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.

3. உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.

4. இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.

5. கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.

6. நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.



128
home



கர்த்தருக்குப் பயந்து அவருடைய வழிகளில் நடப்பவர்களின் ஆசீர்வாதத்தைப் பற்றி சங்கீதக்காரன் பேசுகிறார். ஒருவரின் உழைப்பின் பலனை அனுபவிப்பதாகவும், பலனுள்ள மனைவி மற்றும் குழந்தைகளைப் பெறவும், ஜெருசலேமின் செழிப்பைக் காண்பதாகவும் அவர் கூறுகிறார்.