சங்கீதம் - * தேவ வீட்டார் குணங்கள் *



* தேவ வீட்டார் குணங்கள் *


தமிழ் வேதாகமம்சங்கீதம்அதிகாரம் - 15




1. கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்?

2. உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.

3. அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.

4. ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்; கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.

5. தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.



15
home



தேவ பரிசுத்த கூடாரத்திலும் பரிசுத்த மலையிலும் யார் வசிக்க முடியும் என்று தாவீது கேட்கிறார். தேவ பிரசன்னத்தில் நிலைத்திருக்கக்கூடியவர்களின் நேர்மையான குணத்தையும் நீதியான செயல்களையும் விவரிப்பதன் மூலம் அவர் பதிலளிக்கிறார்.