சங்கீதம் - * கர்த்தரில் நம்பிக்கை *



* கர்த்தரில் நம்பிக்கை *


தமிழ் வேதாகமம்சங்கீதம்அதிகாரம் - 61




பாதுகாப்பிற்கான ஒரு ஜெபம்



1. தேவனே, என் கூப்பிடுதலைக் கேட்டு, என் விண்ணப்பத்தைக் கவனியும்.

2. என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.

3. நீர் எனக்கு அடைக்கலமும், சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர்.

4. நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன்; உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா.)

5. தேவனே, நீர் என் பொருத்தனைகளைக் கேட்டீர்; உமது நாமத்திற்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர்.

6. ராஜாவின் நாட்களோடே நாட்களைக் கூட்டுவீர்; அவர் வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.

7. அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும்.

8. இப்படியே தினமும் என் பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, உமது நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணுவேன்.



61
home



தாவீது, மயக்கமடைந்து, தன்னை விட உயரமான ஒரு பாறைக்கு அழைத்துச் செல்லும்படி கடவுளிடம் ஜெபம் செய்கிறார். தேவ கூடாரத்தில் என்றென்றும் நிலைத்திருப்பதையும், அவருடைய சிறகுகளின் தங்குமிடத்தில் நம்பிக்கை வைப்பதையும் பற்றி அவர் பேசுகிறார். அவர் புகழ் பாடுவதாகவும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகவும் சபதம் செய்கிறார்.