சங்கீதம் - * விரைவான உதவி வேண்டுதல் *



* விரைவான உதவி வேண்டுதல் *


தமிழ் வேதாகமம்சங்கீதம்அதிகாரம் - 70




உதவிக்கான ஜெபம்



1. தேவனே, என்னை விடுவியும், கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.

2. என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி நாணுவார்களாக; எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி இலச்சையடைவார்களாக.

3. ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னிட்டுப்போவார்களாக.

4. உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.

5. நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.



70
home



தாவீது தன்னை விடுவிக்கும்படி கடவுளை அவசரமாக அழைக்கிறார். தம்முடைய உயிரைத் தேடுபவர்கள் வெட்கப்படவும், தம்முடைய காயத்தை விரும்புகிறவர்களைத் திரும்பப் பெறவும் அவர் கேட்கிறார். அவர் தேவ உதவி மற்றும் விடுதலையை நாடுகிறார்.