சங்கீதம் - * சீயோன் மகிமை *



* சீயோன் மகிமை *


தமிழ் வேதாகமம்சங்கீதம்அதிகாரம் - 87




சீயோனின் மகிமைகள்



1. அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது.

2. கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்.

3. தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும். (சேலா.)

4. என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ, பெலிஸ்தியரிலும், தீரியரிலும், எத்தியோப்பியரிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்;

5. சீயோனைக்குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர்தாமே அதை ஸ்திரப்படுத்துவார்.

6. கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார். (சேலா.)

7. எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று பாடுவாரும் ஆடுவாரும் ஏகமாய்ச் சொல்லுவார்கள்.



87
home



இந்த அதிகாரம் தேவ நகரமான சீயோனின் மகிமைகளைப் பற்றி பேசுகிறது. அதைப் பற்றி எவ்வளவு மகிமையான விஷயங்கள் பேசப்படுகின்றன என்பதையும், அது தேவனால் நிறுவப்பட்ட நகரம் என்பதையும் பற்றி பேசுகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அவளில் பிறந்ததாகக் கூறப்படுகிறது.