சங்கீதம் - * கர்த்தரை நம்பி நிலைத்திருத்தல். *



* கர்த்தரை நம்பி நிலைத்திருத்தல். *




நேர்மையானவர்களின் அடைக்கலம்



1. நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என் ஆத்துமாவை நோக்கி: பட்சியைப்போல உன் மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள்.

2. இதோ, துன்மார்க்கர் வில்லை வளைத்து, செம்மையான இருதயத்தார்மேல் அந்தகாரத்தில் எய்யும்படி தங்கள் அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.

3. அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதே, நீதிமான் என்னசெய்வான்?

4. கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது.

5. கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.

6. துன்மார்க்கர்மேல் கண்ணிகளை வருஷிக்கப்பண்ணுவார்; அக்கினியும் கந்தகமும் கடுங்கோடைக் கொந்தளிப்பும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.

7. கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.



11
home



தாவீது கர்த்தரில் நம்பிக்கை வைப்பதையே தன் அடைக்கலமாக அறிவிக்கிறார். கர்த்தர் நீதிமான்களையும் துன்மார்க்கரையும் பரிசோதிக்கிறார் என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். துன்மார்க்கன் மீது கர்த்தர் நியாயத்தீர்ப்பைப் பொழிவார், ஆனால் நீதியுள்ளவராக இருப்பார், நீதியை நேசிப்பார் என்று அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார்.