சங்கீதம் - * கர்த்தரைப் புகழ்தல் *



* கர்த்தரைப் புகழ்தல் *


தமிழ் வேதாகமம்சங்கீதம்அதிகாரம் - 113




சங்கீதக்காரர் கர்த்தருடைய ஊழியக்காரர்களை அவருடைய நாமத்தைத் துதிக்க அழைக்கிறார்.



1. அல்லேலூயா, கர்த்தருடைய ஊழியக்காரரே, துதியுங்கள்; கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.

2. இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது.

3. சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.

4. கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.

5. உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்?

6. அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.

7. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.

8. அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.

9. மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா.



113
home



சங்கீதக்காரர் கர்த்தருடைய ஊழியக்காரர்களை அவருடைய நாமத்தைத் துதிக்க அழைக்கிறார். கர்த்தர் எல்லா தேசங்களுக்கும் மேலாக உயர்ந்தவராக இருந்தாலும், வானத்தையும் பூமியையும் பார்க்க குனிந்து பார்க்கிறார் என்று அவர் பேசுகிறார். அவர் ஏழைகளை உயர்த்துகிறார், மலடிகளுக்கு வீடு கொடுக்கிறார்.