சங்கீதம் - * கர்த்தர் என் பாதுகாப்பு *



* கர்த்தர் என் பாதுகாப்பு *


தமிழ் வேதாகமம்சங்கீதம்அதிகாரம் - 121




கர்த்தரிடமிருந்து வரும் உதவி



1. எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.

2. வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.

3. உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.

4. இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.

5. கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.

6. பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.

7. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.

8. கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.



121
home



சங்கீதக்காரன் தன் கண்களை மலைகளை நோக்கி உயர்த்தி, கர்த்தரிடமிருந்து வரும் உதவியைப் பற்றி பேசுகிறான். கர்த்தர் தன்னை எல்லாத் தீங்குகளிலிருந்தும் காத்து, இப்போதும் என்றென்றும் தன் வாழ்க்கையைக் கண்காணிப்பதைப் பற்றி அவர் பேசுகிறார்.