சங்கீதம் - * இஸ்ரவேலின் எதிரிகளுக்கு எதிரான தேவ தீர்ப்பு. *



* இஸ்ரவேலின் எதிரிகளுக்கு எதிரான தேவ தீர்ப்பு. *




சங்கீதக்காரன் இளமையிலிருந்து எதிர்கொள்ளும் துன்பங்களைப் பற்றி பேசுகிறார்.



1. என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கினார்கள்.

2. என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற்போனார்கள்.

3. உழுகிறவர்கள் என் முதுகின்மேல் உழுது, தங்கள் படைச்சால்களை நீளமாக்கினார்கள்.

4. கர்த்தரோ நீதியுள்ளவர்; துன்மார்க்கருடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.

5. சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கிப் பின்னிட்டுத் திரும்பக்கடவர்கள்.

6. வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்களாக; அது வளருமுன் உலர்ந்துபோம்.

7. அறுக்கிறவன் அதினால் தன் கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன் மடியையும் நிரப்புவதில்லை.

8. கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக; கர்த்தரின் நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர் சொல்வதுமில்லை.



129
home



சங்கீதக்காரன் இளமையிலிருந்து எதிர்கொள்ளும் துன்பங்களைப் பற்றி பேசுகிறார். கர்த்தர் நீதியுள்ளவர் என்றும் துன்மார்க்கரின் கயிறுகளை அறுப்பவர் என்றும் பேசுகிறார். சீயோனை வெறுக்கிறவர்களைக் கூரையின் மேல் இருக்கும் புல்லுக்கு ஒப்பிடுகிறார், அது வளருவதற்கு முன்பே வாடிவிடும்.