Tamil Bible Facts தமிழ் வேதாகம உண்மைகள்

வேதாகம சம்பவங்கள் உண்மையில் நடந்தன என்று நீங்கள் நம்புகிறீர்களா?

வேத புத்தகமான தமிழ் வேதாகமத்தில் வாசிப்பவரின் மனதிற்கு நமப்பிக்கையூட்டும் நிறைய வாக்குறுதிகளும் நல் வழிப்படுத்தும் ஆலோசனைகளும் நிரம்பி இருக்கின்றன. அதையெல்லாம் தெரிந்துகொள்ள உங்களுக்கு ஒருவேளை ஆர்வமாக இருக்கலாம். ஆனால், அதை நம்புவதா வேண்டாமா என்று நீங்கள் யோசிக்கலாம். இவ்வளவு பழமையான புத்தகம் சொல்கிற வாக்குறுதிகளையும் ஆலோசனைகளையும் நீங்கள் நம்ப முடியுமா? பைபிள் சொல்வதுபோல் நாம் உண்மையிலேயே இன்றும் என்றும் சந்தோஷமாக வாழ முடியுமா? பல மில்லியன் பேர் இதை நம்புகிறார்கள். நீங்களும் ஏன் நம்பலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஆராய்ந்து பார்க்கலாம்!

அறிவியலும் ஆண்டவர் தந்த வேதமும் எப்படி ஒத்துப்போகின்றன என்று பார்க்கலாம். வேத புத்தகத்தில் இருக்கும் ஆச்சரியமான பல நம்பதகுந்த உண்மைகள் மற்றும் சில தீர்க்கதரிசனங்களைப் பற்றியும் பார்க்கலாம்.




பத்து கட்டளைகள்

வேதாகமத்தில் 10 கட்டளைகள் இங்கே? மோசேக்கு கடவுள் பத்து கட்டளைகளைக் கொடுத்ததைச் சுற்றியுள்ள சூழல், யூத மற்றும் கிறிஸ்தவ மத வரலாற்றில்..

Read More

இயேசுவின் பிறப்பு

ரோமானியப் பேரரசரின் உத்தரவுப்படி, மரியாளும் யோசேப்பும் பெத்லகேமுக்குப் பயணிக்க வேண்டியிருந்தது....

Read More

கடைசி இராப்போஜனம்

பஸ்காவின் முதல் நாளில் அல்லது புளிப்பில்லாத அப்பப் பண்டிகையில் கடைசி இரவு உணவு நடந்தது. பஸ்கா...

Read More

குருத்தோலை ஞாயிறு

ஈஸ்டருக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை, பரிசுத்த வாரத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், இயேசு கிறிஸ்து

Read More

இயேசு சிலுவையில் அறையப்படுதல்

இயேசு சிலுவையில் அறையப்பட வேண்டும் என்றும், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுப்பப்பட வேண்டும் என்றும்...

Read More

சிலுவையில் இயேசுவின் கடைசி வார்த்தைகள்

1. மத்தேயு 27:46, ஒன்பதாம் மணி நேரத்தில், இயேசு, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்..

Read More

இயேசுவின் வாழ்க்கை வரலாறு

இயேசுவின் கன்னிப் பிறப்பு அவரது பாவமற்ற தன்மையையும் அவரது தெய்வீக மற்றும் மனித இயல்புகளை காட்டுகின்றன.

Read More

இயேசுவின் ஜெபம்

ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கும்படி அப்போஸ்தலர்களுக்கு பதிலளிக்கும் விதமாக (லூக்கா 11:1) இயேசு அவர்களுக்குக் கொடுத்தார்,

Read More

திருச்சபை வரலாறு

பழைய ஏற்பாட்டில் திருச்சபை: மேலும் விரிவாக, புதிய ஏற்பாட்டில் திருச்சபை: மேலும் விரிவாக

Read More

அற்புதங்கள்

உலகத்தின் படைப்பு, பெரும் வெள்ளம் மற்றும் நோவாவின் பேழை, செங்கடல் பிரிந்தது, இயேசு தண்ணீரில் நடந்தது, லாசரின் உயிர்த்தெழுதல்

Read More

இயேசுவின் உயிர்த்தெழுதல்

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளமாகும். இயேசு மரித்தோரிலிருந்து..

Read More

மலை பிரசங்கம்

மலைப்பிரசங்கத்தின் போது இயேசு கிறிஸ்து வழங்கிய போதனைகளின் தொகுப்பாகும் . இந்த வசனங்கள்..

Read More

பெத்லகேம்

மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தி நூல்கள் இயேசு பிறந்த இடம் பெத்லகேம் என்று தெளிவாகக் கூறுகின்றன.

Read More



1. கடவுள் தந்த வேதம் சொல்வது உண்மையா கட்டுக்கதையா?

பைபிளில் “உண்மையான வார்த்தைகள் திருத்தமாக” எழுதப்பட்டிருக்கின்றன. இதை வேதாகமமே சொல்கிறது. (பிரசங்கி 12:10) அதில் சொல்லியிருக்கிற சம்பவங்களெல்லாம் உண்மையிலேயே நடந்தன. அதில் சொல்லியிருக்கிற ஆட்களெல்லாம் உண்மையிலேயே வாழ்ந்தார்கள். (லூக்கா 1:3; 3:1, 2-ஐ வாசியுங்கள்.) பைபிளில் சொல்லியிருக்கிற முக்கியமான தேதிகள், மக்கள், இடங்கள், சம்பவங்கள் எல்லாமே உண்மை என்று நிறைய சரித்திர வல்லுநர்களும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் உறுதி செய்திருக்கிறார்கள்.

2. வேத புத்தகம் நம் காலத்துக்கு ஒத்துவராது என்று ஏன் சொல்ல முடியாது?

மனிதர்கள் பிற்பாடு கண்டுபிடித்த உண்மைகளை பைபிள் அன்றைக்கே சொல்லிவிட்டது. அறிவியல் விஷயங்களை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். பைபிள் சொன்ன அறிவியல் விஷயங்களை அப்போது வாழ்ந்த நிறைய பேர் நம்பவில்லை. ஆனால், அவையெல்லாம் உண்மைதான் என்பதை இன்று அறிவியல் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இதிலிருந்து என்ன தெரிகிறது? வேதாகமத்தை நாம் “எப்போதுமே நம்பலாம், இன்றும் என்றும் நம்பலாம்” என்று தெரிகிறது.—சங்கீதம் 111:8.

3. எதிர்காலத்தைப் பற்றி வேதம் சொல்வதை நாம் ஏன் நம்பலாம்?

வேத புத்தகமான பைபிள் நிறைய தீர்க்கதரிசனங்களைa சொல்லியிருக்கிறது. அதாவது, எதிர்காலத்தில் “நடக்கப்போகும் விஷயங்களை” ரொம்ப வருஷத்துக்கு முன்பே சொல்லியிருக்கிறது. (ஏசாயா 46:10) நம் காலத்தில் என்னென்ன நடக்கும் என்றுகூட அது விவரமாகச் சொல்லியிருக்கிறது.

4. அறிவியலும் வேதமும் ஒத்துப்போகின்றன

முன்பெல்லாம் பூமியை ஏதோ ஒன்று தாங்கிப் பிடித்துக்கொண்டு இருப்பதாக நிறைய பேர் நம்பினார்கள்.

சுமார் 3,500 வருஷங்களுக்கு முன்பு யோபு புத்தகத்தில் என்ன சொல்லப்பட்டது என்று பாருங்கள். யோபு 26:7-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • பூமி “அந்தரத்தில் தொங்குகிறது” என்று பைபிள் அன்றைக்கே சொன்னதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

கிட்டத்தட்ட 200 வருஷங்களுக்கு முன்புதான் நீர் சுழற்சியை (water cycle) பற்றி நாம் முழுமையாகப் புரிந்துகொண்டோம். ஆனால், ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்பே இதைப் பற்றி பைபிள் என்ன சொல்லியிருக்கிறது என்று பாருங்கள். யோபு 36:27, 28-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • நீர் சுழற்சியைப் பற்றி பைபிள் இவ்வளவு எளிமையாகச் சொல்லியிருப்பதைப் படிக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

  • இந்த வசனங்களைப் படிக்கும்போது பைபிள்மேல் உங்களுக்கு இன்னும் அதிக நம்பிக்கை வருகிறதா?

5. முக்கியமான சம்பவங்களைப் பற்றி வேதம் முன்கூட்டியே சொல்லிவிட்டது

ஏசாயா 44:27–45:2-ஐப் படித்துவிட்டு,

பிறகு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • பாபிலோன் நகரத்தின் அழிவைப் பற்றி 200 வருஷங்களுக்கு முன்பே பைபிள் என்ன சொன்னது?

கி.மு. 539-ல் பெர்சிய நாட்டின் ராஜாவான கோரேசு தன் படையோடு வந்து பாபிலோன் நகரத்தைக் கைப்பற்றினார். இதைச் சரித்திரம் உறுதிப்படுத்துகிறது. அந்த நகரத்தைச் சுற்றி ஓடிய ஆற்றின் தண்ணீரை அவர்கள் வேறு பக்கமாகத் திருப்பிவிட்டார்கள். அந்த நகரத்தின் கதவுகள் திறந்தே கிடந்தன. அவர்கள் அந்தக் கதவுகள் வழியாகப் போய், போர் செய்யாமலேயே அந்த நகரத்தைக் கைப்பற்றினார்கள். அது நடந்து 2,500 வருஷங்களுக்குமேல் ஆகிவிட்டது. இன்னமும் பாபிலோன் இடிபாடுகளாகத்தான் கிடக்கிறது. அதைப் பற்றி பைபிள் என்ன சொன்னது என்று பாருங்கள்.

ஏசாயா 13:19, 20-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • பாபிலோனுக்கு ஏற்பட்ட கதி, பைபிள் சொல்வதெல்லாம் உண்மை என்பதை எப்படி நிரூபிக்கிறது?

6. இன்று நடப்பதை வேதம் அன்றே சொன்னது

இது “கடைசி நாட்கள்” என்று வேத புத்தகமான பைபிள் சொல்கிறது. (2 தீமோத்தேயு 3:1) நம் காலத்தைப் பற்றி பைபிள் அன்றே என்ன சொன்னது என்று பாருங்கள்.

மத்தேயு 24:6, 7-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • கடைசி நாட்களில் என்னென்ன நடக்கும் என்று பைபிள் சொல்லியிருக்கிறது?

2 தீமோத்தேயு 3:1-5-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  • கடைசி நாட்களில் எப்படிப்பட்ட ஆட்கள் இருப்பார்கள் என்று பைபிள் சொல்லியிருக்கிறது?

  • இப்படிப்பட்ட ஆட்களில் யாரையெல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்?

சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “பைபிள்ல இருக்குறதெல்லாம் வெறும் கதைதான், அதையெல்லாம் நம்ப முடியாது.”

  • பைபிளில் இருப்பதெல்லாம் உண்மை என்பதற்கு எது ரொம்ப பலமான ஆதாரம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

காயீன் மனைவி யார்?

வேதாகமத்தை வாசிக்கும் போது கேள்விகள் வராமல் இருந்தால்தான் தவறு. கேள்விகள் வருவது நல்லது. ஆனால் அந்த கேள்விகள், விடையை தேடி விசுவாசத்தில் வளர்வதற்கு ஏதுவாக இருக்க வேண்டும்.விசுவாச வாழ்வில் இருந்து தவறி விழுவதற்கு ஏதுவாகவும், முரண்பட்ட கருத்துக்களை கூறி, குழப்புவதற்கு காரணமாக இருந்து விடக்கூடாது.

ஆதியாகம புத்தகத்தை வாசிக்கும் போது, “காயீனின் மனைவி எங்கிருந்து வந்தாள்” என்ற கேள்வி வராமல் இருக்காது. ஏனென்றால் ஆதியாகமம் முதல் மூன்று அதிகாரத்தில் ஆதாம் ஏவாள் இருவர் மட்டுமே இருக்கின்றனர். 4ம் அதிகாரத்தில் 1,2 வசனங்களில் இவர்களுக்கு காயீன், ஆபேல் என்னும் இரண்டு பிள்ளைகள் பிறந்ததாக குறிப்பிடும் வேதம் 4ம் அதிகாரம் 17ம் வசனத்தில் காயீன் தன் மனைவியை அறிந்தான் என்று கூறுகிறது.அந்த சமயத்தில் ஆதாம், ஏவாள், காயீன் மட்டுமே இருப்பதை போல நாம் வேகமாக வாசித்துக்கொண்டு செல்லும் போது தெரிகிறது. எனவேதான் காயீனுக்கு மனைவி எங்கிருந்து வந்தாள் என்ற கேள்வி எழுவது இயற்கையே.

அதே வேளையில் வேதாகமத்தை வேகமாக வாசித்துக்கொண்டே செல்லாமல் நிதானமாக தியானித்தும் பார்க்க வேண்டும் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அப்படி நாம் நிதானமாக தியானிக்கும் போது 4ம் அதிகாரம் 14ம் வசனத்தில் “என்னைக் கண்டுபிடிக்கின்ற எவனும் என்னைக் கொன்று போடுவான்” என்று காயீன் கூறுவதிலிருந்து, அப்பொழுதே மற்ற மனிதர்களும் அவர்களோடு இருந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இதை அறிந்து கொண்டால் காயீன் மனைவி யார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

ஆதியாகம புத்தகத்தின் 4,மற்றும் 5ம் அதிகாரங்கள் மட்டும் 2 ஆயிரம் வருடங்கள் சரித்திரத்தை கொண்டதாக இருக்கிறது. இந்த அதிகாரங்களை அணுகும் போதும், வாசிக்கும் போதும், முறையாக, சரியாக, தெளிவாக வாசித்து அறிந்து கொள்ளுதல் நல்லது.

இரண்டாயிரம் வருட சரித்திரமாக இருந்தாலும் எது நமக்கு தேவையோ, எது நமக்கு அவசியமோ அதை மட்டும் இந்த இரண்டு அதிகாரங்களில் உள்ள வசனங்கள் தாங்கி நிற்கிறது.

மனுகுலத்தின் ஆரம்பத்திலேயே எவ்விதம் மனுக்குலம் பிரிந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை காண்பிக்கும் படியாக, தேவ திட்டங்களுக்கு விரோதமாக சென்று விட்ட காயீன் சந்ததி தேவனை அறியாது, தேவனுக்கு விரோதமான சந்ததியாக பிரிந்து வருகிறது. ஆபேலுக்கு பதிலாக தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட சேத்தின் சந்ததியும் தேவனுக்கு பயந்து, அவருடைய வழியில் எப்படி எவ்விதம் வந்து கொண்டிருக்கிறது என்பதை காண்பிக்கும் வம்ச வரலாறுகளே இந்த இரண்டு அதிகாரங்களிலும் எழுதப்பட்டுள்ளது.

ஆதியாகமம் 4:17-23 வரை உள்ள வசனங்களில் காயீனின் 8 தலைமுறையை குறித்து வேதாகமம் தெரிவிக்கிறது. 5ம் அதிகாரத்தில் 3ம் வசனம் முதல் 29 ம் வசனம் வரை உள்ள வேத பகுதியில் சேத்தின் 9 தலைமுறைகளை குறித்து விவரிக்கிறது.

வேதாகமம் வம்ச வரலாறுகளை தெரிவிக்கும் போது அதில் முதல் மகனின் பெயர் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஒவ்வொருவரும் குமாரர்களையும் குமாரத்திகளையும் பெற்றார்கள் என்று எழுதப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும். அவர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட வில்லை.

ஆதாமுக்கு பல ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் இருந்தும் வேதாகம சரித்திரத்திற்கு அவர்கள் பெயர்களும், அவர்களின் வாழ்க்கை வரலாறும் அவசியப்படாததினாலேயே அவர்களைப் பற்றிய கூடுதல் தகவல்கள் இல்லை.

சரி கேள்விக்கு வருவோம். “காயீன் தன் மனைவியை அறிந்தான்” (ஆதி 4:17) காயீனுக்கு மனைவி எங்கிருந்து வந்தாள் என்பதை வைத்து குழப்புகிறவர்களும் அநேகர்.

காயீன் ஆபேலைகொலை செய்யும் போது 130 வயது உடையவனாக காயீன் இருந்திருக்கலாம் என்று சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படியானால் ஆதாம் ஏவாளுக்கு காயீன் , ஆபேல் என்று இரண்டு பிள்ளைகள் மட்டும் அல்ல அநேக பெண்பிள்ளைகளும் பிறந்திருக்க வாய்ப்புக்கள் உள்ளன.

ஆபேல் கொலை செய்யப்பட்டபின் தேவனுடைய தெரிந்து கொள்ளுதலின்படியே “ஆபேலுக்கு பதில்” சேத்தின்பெயர் வேதாகமத்தில் குறிப்பிடப்படுகிறது. ஆதாமின் மற்ற எந்த பிள்ளைகளின் பெயரும் வேதாகமத்தில் குறிப்பிடப்பட வில்லை. எனவே சேத்துக்கு முன்பும், பின்பும் அநேக ஆண்பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் ஆதாமுக்கு இருந்திருக்க வாய்ப்புள்ளது.

மேலும் சேத் பிறக்கும் போது ஆதாமுக்கு நூற்று முப்பது வயது என்று ஆதியாகமம் 5ம் அதிகாரம் 3ம் வசனத்தில் பார்க்கிறோம். இந்த வயது கணக்கு முறை ஆதாம் படைக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிடப்படாமல் ஆதாம் ஏதேனை விட்டு வெளியேற்றப்பட்ட நாளிலிருந்து கணக்கிடப்படுகிறது. காரணம் ஏதேனில் ஆதாம் இருந்த வரையிலும் பாவம் செய்வதற்கு முன் வரை மரண சரீரத்தில் அவன் இருக்க வில்லை. வயது கணக்கிடும் முறை மரண சரீரத்திற்கு மட்டுமே. அந்த அடிப்படையில் ஆதாம் ஏதேனை விட்டு, வெளியேற்றப்பட்ட நாட்களிலிருந்து அவன் வயது கணக்கிடப்படுகிறது.

எனவே ஆதாமுக்கு 130 வருடங்களில் அநேக பிள்ளைகள் பிறந்திருக்க வேண்டும். இதன் அடிப்படையில் ஆதாமுக்கும், காயீனுக்கும் ஒருவருடஇடைவெளி மட்டுமே இருந்திருக்க வாய்ப்புண்டு.

ஆதாம் ஏதேனை விட்டு, துரத்தப்பட்ட நாளிலிருந்து, ஆபேல் கொலை செய்யப்பட்ட நாள்வரை 130 வருட சரித்திரம் உள்ளது. அந்நாட்களிலேயே ஆதாமுக்கு அநேக , ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் பிறந்திருப்பதாலேயே அப்பொழுதே ஒரு கூட்ட மக்கள் இருந்திருக்க வாய்ப்புண்டு, எனவேதான் காயீன் தேவனை நோக்கி “இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்” (ஆதி 4:14).

ஆகவே, அப்பொழுதே அவனுடைய சகோதர, சகோதரிகள் அநேகர் இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. எனவே தன் சகோதரிகளில் ஒருவரை காயீன் மணந்திருக்கலாம்.

அந்நாட்களில் ஆதாம், ஏவாள் அவர்களுடைய பிள்ளைகள் என அவர்கள் மட்டுமே இருந்தபடியினால் அவர்கள் தங்களுக்குள்ளாகவே மணமுடிக்க வேண்டியதாக இருந்தது.

ஆதி நாட்களில் சகோதர, சகோதரி திருமணம் செய்துகொள்ளும் முறை இருந்திருக்கிறது என்பதை வேத வசனங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.

ஆபிரகாம் தன் மனைவி சாராளை குறித்து அபிமேலேக்கிடம் சொல்லும் போது “அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்” (ஆதி 20:12) என்றான். ஆபிராகாமின் மனைவியும் கூட அவனது ஒன்று விட்ட சகோதரியாகவே இருந்தாள்.

சகோதரியை திருமணம் செய்ய கூடாது என்ற சட்ட முறை மக்கள் கூட்டம் திரளாக பெருகிய பின் தேவனால் லேவியராகமம் 18:11 ல் கொடுக்கப்படுகிறது.

எனவே காயீனின் மனைவி ஆதாமின் குமாரத்திகளில் ஒருத்தியான, காயீனின் சகோதரிகளில் ஒருத்திதான் என்பதை சரியாக அறிந்து கொள்ள முடிகிறது.

இப்படிப்பட்ட கேள்வி பதில்களோடு, நாம் இச்செய்தியை கொடுப்பதற்கு காரணம், இதைக் குறித்த குழப்பமான தகவல்களை கொடுத்து, வேதாகம விசுவாசத்திற்கு எதிரான செயல்களை செய்கிறவர்களின் வலையில் இருந்து விசுவாச மக்கள் விடுவிக்கப்படவும், பாதுகாக்கப்படவும்.

விசுவாச வாழ்வின் வளர்ச்சிக்கு இது கூடுதல் தகவலாக இருக்கும் என்பதினாலேயே இத்தலைப்பின் கீழ் நாம் வேதாகமத்தை தியானித்து இச்செய்தியை தருகிறோம்.

கடவுள் இருக்கிறாரா? 

பதில்

கடவுள் இருக்கிறாரா என்பது எந்தவொரு நபரும் கருத்தில் கொள்ளக்கூடிய மிக அடிப்படையான மற்றும் முக்கியமான கேள்விகளில் ஒன்றாகும். கடவுளைப் பற்றிய கருத்துக்கள் ஏராளமாக உள்ளன, ஆனால் கடவுள் இருக்கிறாரா? என்ற கேள்விக்கு பதிலளிப்பது சில வினாடிகளுக்கு மேல் கவனத்தை கோருகிறது மற்றும் பரந்த அளவிலான யோசனைகள் மற்றும் ஆதாரங்களை உள்ளடக்கியது. இறுதியில், மனித அனுபவம், அறிவியல், தர்க்கம் மற்றும் வரலாற்றில் நாம் பார்ப்பது நம்பிக்கையான பதிலுக்கு வழிவகுக்கிறது: ஆம், கடவுள் இருக்கிறார்.

ஆதாரம் எங்கே?

பெரும்பாலும், இந்த கேள்வி "கடவுள் இருக்கிறார் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா?" என்று கேட்கப்படுகிறது. பிரச்சனை என்னவென்றால், உண்மை முழுமையானது என்றாலும், தூய தர்க்கம் மற்றும் கணிதத்திற்கு வெளியே முழுமையான நிரூபணத்தின் பூஜ்ஜிய நிகழ்வுகள் உள்ளன. அந்த காரணத்திற்காக, நீதிமன்ற அறைகள் ஒரு தீர்ப்பை அடைய முழுமையான ஆதாரம் தேவையில்லை; மாறாக, அவர்கள் "நியாயமான சந்தேகத்தை" அகற்றவும், "மிகவும் சாத்தியமான" ஒன்றைக் கருத்தில் கொள்ளவும் முனைகின்றனர்.

யாராலும் நிராகரிக்க முடியாத கடவுளின் "ஆதாரத்தை" கோருவது நியாயமற்றது. நிஜ உலகில் ஆதாரங்களோ அல்லது மக்களோ அப்படி செயல்படுவதில்லை. உண்மைகளை "எதிர்கொள்வது" மற்றும் அவற்றை "ஏற்றுக்கொள்வது" ஆழமான வேறு. நம்ப மறுப்பதில் உறுதியாக இருப்பவர்களுக்கு காற்றோட்டமான, வலுவான வாதங்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருக்கும். உறுதியான சந்தேகவாதிகளுக்கு, இது "ஆதாரம்" அல்ல, அது கிட்டத்தட்ட வேறு யாரையும் நம்ப வைக்கும் என்றாலும் கூட. ஒரு நபரின் நோக்கம் எதிர்கொள்ளும் எந்த ஆதாரத்தையும் விட செல்வாக்கு செலுத்துகிறது.

அதாவது ஒரு குறிப்பிட்ட அளவு "விசுவாசம்" அவசியம் - கடவுளின் இருப்பைப் பற்றி மட்டுமல்ல. பரிபூரண அறிவு நம் சக்திக்கு அப்பாற்பட்டது. பாரபட்சமும் தப்பெண்ணமும் நம் கருத்துக்களை மறைக்கின்றன. நாம் "அறியக்கூடியவற்றிற்கும்" நாம் "நம்புவதற்கும்" இடையே எப்போதும் ஒரு இடைவெளி இருக்கும். இது சந்தேகவாதிகளுக்கும் விசுவாசிகளுக்கும் சமமாக பொருந்தும். ஒவ்வொரு முறையும் நாம் ஒரு நாற்காலியில் உட்காரும்போதும், உணவு உண்ணும்போதும், படிக்கட்டுகளில் ஏறும்போதும் சம்பந்தப்பட்ட எல்லா விவரங்களையும் நம்மால் தெரிந்துகொள்ள முடியாது. இப்படிப்பட்ட செயல்கள் எல்லாமே ஓரளவு விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றன. நமக்குத் தெரியாததையும்நமக்குத் தெரிந்ததையும் வைத்து நாம் செயல்படுகிறோம். கடவுளின் இருப்பில் நம்பிக்கை உட்பட வேதாகம விசுவாசத்தின் சாராம்சம் இதுதான். முழுமையான புரிதல் குறைவாக இருந்தாலும், அறியப்பட்டவற்றை நம்புகிறோம், நம்மை செயலுக்கு வழிநடத்துகிறோம் (எபிரெயர் 11:6).

ஒருவர் கடவுளை ஒப்புக்கொள்கிறாரோ இல்லையோ, முடிவு விசுவாசத்தை உள்ளடக்கியது. தேவனை விசுவாசிப்பதற்கு குருட்டு விசுவாசம் தேவையில்லை (யோவான் 20:29), ஆனால் தீங்கிழைக்கும் எதிர்ப்பை வெல்லவும் முடியாது (யோவான் 5:39-40). நம்பிக்கையை வலுப்படுத்துவது மனித அனுபவம், தர்க்கம் மற்றும் அனுபவ சான்றுகள், இவை அனைத்தும் கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலளிக்க உதவுகின்றன?

கடவுள் இருக்கிறாரா? — மனிதனின் அனுபவம்

கடவுளின் இருப்பைப் பற்றி விவாதிப்பது பொதுவாக தர்க்கரீதியான வாதங்களுடன் தொடங்குகிறது. அது அர்த்தமுள்ளதாக இருக்கிறது, ஆனால் மனிதர்கள் பொதுவாக எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது அல்ல. ஒரு கருத்தை உருவாக்குவதற்கு முன்பு ரோபோ போன்ற பகுத்தறிவு பாதையைப் பின்பற்ற யாரும் காத்திருக்கிறார்கள். மக்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தின் அடிப்படையில் வாழ்க்கையை விளக்குகிறார்கள். எனவே, கடவுளின் இருப்பைப் பார்ப்பது அனுபவங்களிலிருந்து தொடங்க வேண்டும். பின்னர், அந்த கருத்துக்களை மதிப்பிடுவதற்கு தர்க்கத்தைப் பயன்படுத்தலாம்.

அன்றாட மனித அனுபவங்களில் கடவுளின் சான்றுகள் உள்ளன (ரோமர் 1:19-20; ரோமர் 1:19-20; ரோமர் 1:19-20; ரோமர் 1:19-20). சங்கீதம் 19:1பிரசங்கி 3:11). இது நமது உள்ளார்ந்த ஒழுக்க உணர்வை உள்ளடக்கியது. இது நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தின் வெளிப்படையான வடிவமைப்புக்குப் பொருந்தும். உண்மை, வஞ்சகம், அன்பு, வெறுப்பு, நன்மை, தீமை போன்றவை உண்மையானவை, அர்த்தமுள்ளவை என்று நம்பும்படி மனித வாழ்க்கை கட்டாயப்படுத்துகிறது. வரலாறு நெடுகிலும் பெரும்பான்மையான மக்கள் பெளதீகத்தை விட மேலான ஒரு யதார்த்தத்தை நம்ப முனைந்துள்ளனர்.

எங்கள் அனுபவங்கள் உறுதியான சான்றுகள் அல்ல. அதற்கு பதிலாக, தேவன் பொது வெளிப்பாட்டை ஒரு அழைப்பாகப் பயன்படுத்துகிறார் (வெளிப்படுத்துதல் 3:20). பொதுவான அனுபவங்கள் நாம் கூடுதலான பதில்களைத் தேட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன (மத்தேயு 7:7-8). தேவனுடைய அழைப்பை புறக்கணிப்பவர்களுக்கு அல்லது அலட்சியம் செய்பவர்களுக்கு அறியாமையின் காரணம் இல்லை (ரோமர் 1:18; ரோமர் 1:18; ரோமர் 1:18). சங்கீதம் 14:1).

கடவுள் இருக்கிறாரா? — மனிதனின் தர்க்கம்

கடவுளின் இருப்புக்கான மிகவும் சக்திவாய்ந்த தர்க்கரீதியான பரிந்துரைகளில் மூன்று அண்டவியல், தொலைத்தொடர்பு மற்றும் தார்மீக வாதங்கள்.

அண்டவியல் வாதம் காரணம் மற்றும் விளைவு கொள்கையை கருதுகிறது. ஒவ்வொரு விளைவும் சில காரணங்களின் விளைவாகும், ஒவ்வொரு காரணமும் முந்தைய காரணத்தின் விளைவாகும். இருப்பினும், காரணங்களின் சங்கிலி கடந்த காலத்திற்குள் முடிவில்லாமல் செல்ல முடியாது, இல்லையெனில் சங்கிலி உண்மையில் ஒருபோதும் தொடங்காது. தர்க்கம் நித்தியமாக இருக்கும் ஒன்றைக் கோருகிறது, அதுவே வேறு எதனுடைய விளைவு அல்ல. நமது பிரபஞ்சம், தெளிவாக, நித்தியமானது அல்லது காரணமற்றது அல்ல. தர்க்கம் கடவுளை சுட்டிக்காட்டுகிறது: படைக்கப்படாத, மற்ற எல்லாவற்றின் நித்திய அளவு, நமது யதார்த்தத்தின் முதல் காரணம்.

தொலையியல் வாதம் பிரபஞ்சத்தின் கட்டமைப்பை ஆராய்கிறது. மிகப்பெரிய விண்மீன் மண்டல அமைப்புகள், நமது சூரிய மண்டலம், நமது டி.என்.ஏ, துணை அணு துகள்கள் - அனைத்தும் வேண்டுமென்றே ஏற்பாடு செய்யப்பட்டதைப் போன்ற தோற்றத்தை அளிக்கின்றன. இந்த பண்பு மிகவும் வலுவானது, கடினமான நாத்திகர்கள் கூட வடிவமைப்பின் தோற்றத்தை விளக்குவதில் சிரமப்படுகிறார்கள்.

அணுத் துணைத் துகள்கள் அல்லது விசைகள் பற்றி எதுவுமே அவை உள்ளபடியே ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்று சுட்டிக் காட்டவில்லை. என்றாலும், அவை அப்படியே இல்லையென்றால், சிக்கலான பொருளும் வாழ்க்கையும் சாத்தியமற்றதாக இருக்கும். டஜன் கணக்கான உலகளாவிய மாறிலிகள் மனதைக் கவரும் துல்லியத்துடன் ஒருங்கிணைந்து வாழ்க்கையை சாத்தியமாக்குகின்றன, உண்மையானவை என்பது ஒருபுறம் இருக்கட்டும். உயிரற்ற உயிரினங்களிலிருந்து உயிர் எழுவதை அறிவியல் ஒருபோதும் கவனித்ததில்லை அல்லது விளக்கவில்லை, இருப்பினும் சிக்கலான உயிரினங்களின் திடீர் தொடக்கத்தையும் இது காட்டுகிறது. ஒரு குகைச் சுவரில் நான் இருக்கிறேன் என்ற வார்த்தைகளைப் பார்த்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு புத்திசாலித்தனமான செயலை மேற்கொள்வார்கள். இதற்கிடையில், மனித டி.என்.ஏ சிறந்த மனித பொறியாளர்களின் திறனுக்கு அப்பாற்பட்ட ஒரு குறியீட்டு கட்டமைப்பைக் குறிக்கிறது. இந்த ஆதாரத்தின் கனம், தர்க்கரீதியாக, ஒரு அறிவார்ந்த வடிவமைப்பாளரின் யோசனையை ஆதரிக்கிறது - கடவுள்-ஒரு விளக்கமாக.

அறநெறி வாதம் நன்மை தீமை, அறம் போன்ற கருத்தாக்கங்களைச் சுட்டிக்காட்டுகிறது. இவை வெறுமனே "என்னவாக இருக்க வேண்டும்" என்பதற்கான விவாதங்களாக இல்லாமல், "என்னவாக இருக்க வேண்டும்" என்ற விவாதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. என்ன விலை கொடுத்தேனும் பிழைத்திருக்க தற்செயலாகப் பரிணமித்த ஒரு உயிரினத்திடமிருந்து ஒருவர் எதிர்பார்க்கிற இரக்கமற்ற, சுயநலமான பகுத்தறிவிலிருந்து அறநெறிக் கோட்பாடுகள் கடுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளன. மனிதர்கள் உடல் அல்லாத, தார்மீக அடிப்படையில் சிந்திக்கிறார்கள் என்ற கருத்து வியக்கத்தக்கது. அதையும் தாண்டி மனித ஒழுக்கங்களின் அடிப்படை உள்ளடக்கம் வரலாறு முழுவதும், பண்பாடுகளைக் கடந்து மாறாமல் இருக்கிறது.

மேலும், அறநெறிக் கருத்துக்களைப் பற்றி விவாதிப்பது தவிர்க்க முடியாமல் ஒரு குறுக்கு வழிக்கு இட்டுச் செல்கிறது. ஒன்று அறநெறிக் கருத்துக்கள் முற்றிலும் அகவயமானவை, எனவே அர்த்தமற்றவை, அல்லது அவை மாறாத தரத்தில் வேரூன்றியிருக்க வேண்டும். ஒழுக்கம் என்பது ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு மனித அனுபவம் ஆதரவளிக்கவில்லை. மக்கள் ஏன் தார்மீக அடிப்படையில் சிந்திக்கிறார்கள் மற்றும் தார்மீக இலட்சியங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதற்கான மிகவும் நியாயமான விளக்கம் ஒரு தார்மீக சட்டத்தை வழங்குபவரால் வழங்கப்பட்ட உண்மையான தார்மீக விதியாகும், அதாவது கடவுள்.

கடவுள் இருக்கிறாரா? – மனிதனின் அறிவியல்

தர்க்கரீதியான வாதம்மேலே உள்ள என்.டி.க்கள் அவதானிப்புகளால் ஈர்க்கப்பட்டவை. பிக் பேங் கோட்பாடு போன்ற கருத்துக்கள், குறைந்தபட்சம், உருவாக்கப்பட்ட, நித்தியமற்ற பிரபஞ்சத்தின் அறிவியல் செல்லுபடியை நிரூபிக்கின்றன. அதேபோல் டி.என்.ஏ அமைப்பிற்கும். அனுபவ தரவு ஒரு வேதாகம படைப்பாளரின் யோசனைக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது மற்றும் நித்திய பிரபஞ்சம் அல்லது அபியோஜெனீசிஸ் போன்ற மாற்று விளக்கங்களுக்கு முரணானது.

தொல்பொருள் ஆராய்ச்சியும் வேதாகமத்தை ஆதரிக்கிறது. வேதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள மக்கள், நிகழ்வுகள் மற்றும் இடங்கள் மதச்சார்பற்ற கண்டுபிடிப்புகளால் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்புகளில் பல பைபிளின் கணக்குகள் கற்பனையானவை என்று சந்தேகவாதிகள் சுட்டிக்காட்டிய பின்னர் வந்தன.

வரலாறும் இலக்கியமும் கூட தங்கள் பங்கிற்கு கடவுளின் இருப்பை ஆதரிக்கின்றன. வேதாகமத்தைப் பாதுகாத்தல் ஒரு எடுத்துக்காட்டு: அசல் நிகழ்வுகளுக்கு மிக நெருக்கமான ஒரு காலத்திற்கு வேதாகமத்தின் தற்போதைய உரையைக் கண்டுபிடிப்பதற்கான எங்கள் திறன் பைபிளின் நம்பகத்தன்மையை ஆதரிக்கிறது. கலாச்சாரம், ஒழுக்கம், மனித உரிமைகள் மற்றும் நவீன அறிவியலின் பிறப்பு ஆகியவற்றில் யூத-கிறிஸ்தவ செல்வாக்கு உண்மையுடன் இணைந்த அணுகுமுறையை வலுவாக சுட்டிக்காட்டுகிறது.

கடவுள் இருக்கிறாரா? - கடவுள் நம்முடன்

முந்தைய பகுப்புகள் ஒவ்வொன்றும் ஒரு முழுத் துறையாகவும், ஆயிரக்கணக்கான புத்தகங்களின் கருப்பொருளாகவும் உள்ளன. ஆயினும் கடவுளின் இருப்பு பெரும்பாலான மக்களுக்கு தனிப்பட்ட அனுபவத்தில் மிக ஆழமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதை மற்றவர்களுக்கு "நிரூபிக்க" முடியாது, ஆனால் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற உண்மையை அது மாற்றாது. உள் முன்னோக்கு புறநிலை உண்மையை விட அதிகமாக உள்ளது என்று சொல்ல முடியாது, ஆனால் சிக்கலான உண்மைகள் பெரும்பாலும் தனிப்பட்ட அனுபவங்களால் சக்திவாய்ந்த முறையில் ஆதரிக்கப்படுகின்றன. மாற்றப்பட்ட வாழ்க்கை, சீர்திருத்தப்பட்ட அணுகுமுறைகள் மற்றும் ஜெபத்திற்கான பதில்கள் அனைத்தும் கடவுள் இருக்கிறார் என்ற நமது தனிப்பட்ட கருத்தின் ஒரு பகுதியாகும்.

உண்மையின் தனிப்பட்ட உணர்வு என்பது கடவுள் இருப்பதை நாம் அறிவதற்கான ஒரு கட்டாய வழியாகும், மேலும் எல்லா மக்களும் அந்த உணர்வை அனுபவிக்க வேண்டும் என்பது கடவுளின் நோக்கம். தேவன் தனிப்பட்ட முறையில், ஒரு மனிதனாக பூமிக்கு வந்தார் (2 கொரிந்தியர் 4:6), எனவே நாம் அவருடன் தனிப்பட்ட உறவை வைத்திருக்க முடியும் (யோவான் 14:6). தேவனை உண்மையாகத் தேடுகிறவர்கள் அவரைக் கண்டடைவார்கள் (மத்தேயு 7:7-8), இதன் விளைவாக பரிசுத்த ஆவியானவரின் நிலைத்திருக்கும் பிரசன்னமே கிடைக்கும் (யோவான் 14:26-27).

எனவே, கடவுள் இருக்கிறாரா?

 என்ற கேள்விக்கு முழுமையான ஆதாரத்துடன் பதிலளிக்க முடியாது, ஆனால் அவர் இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்களின் எடையை நாம் சுட்டிக்காட்ட முடியும். கடவுளின் இருப்பை ஏற்றுக்கொள்வது இருட்டில் ஒரு குருட்டு நம்பிக்கை அல்ல. இது இருட்டில் இருந்து நன்கு ஒளிரும் அறைக்குள் ஒரு நம்பிக்கையான படியாகும், அங்கு பல விஷயங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன.

1. தொல்பொருள் ஆராய்சி வேதாகமத்திற்கு எப்படி ஆதாரமாக இருக்கிறது.

வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்று தொல் பொருள் ஆராய்சி நமக்கு நிரூபிக்க முடியாது எனினும் தொல் பொருள் ஆராய்சி வேதாகமத்தின் வரலாற்றுத் துல்லியத்தை உறுதிபடுத்த முடியும். வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசு அதிகாரிகள், இராஜாக்கள், பட்டணங்கள், மற்றும் பண்டிகைகள் ஆகியவைகளின் பெயர்களைத் தொல்லியலானது தொடர்ந்து கண்டுபிடித்து வருகிறது. சில நேரங்களில் வரலாற்று வல்லுநர்கள் கூடச் சிந்திக்காத மக்கள் மற்றும் இடங்களாக அவைகள் இருக்கலாம். உதாரணமாக, யோவான் சுவிசேஷம் பெதஸ்தா குளத்தண்டையில் இயேசு சுகமாக்கிய முடவனைக் குறித்துச் சொல்கிறது. வசனம் அங்கு இருந்து ஐந்து மண்டபங்களைக் குறிப்பிடுகிறது. இது பூமிக்கு 40 அடி அடியில் இந்த ஐந்து மண்டபங்களுடன் முழுமையாக இருப்பதை இதைத் தொல்லியல் வல்லுநர்கள் கண்டுபிடிக்கும் வரை வல்லுநர்கள் இப்படி ஒரு குளம் இருந்ததாக நினைக்கவில்லை.1

வேதாகமத்தில் அநேக வரலாற்று நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன அவைகள் எல்லாம் தொல்லியல் மூலம் கண்டுபிடிக்கப்பட வில்லை. ஆனால் வேதாகமத்திற்கு எந்த விதத்திலும் தொல்லியல் தகவல்கள் முறண்பாடாக இருந்ததில்லை.2

புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தல நடபடிகளில் லூக்கா குறிப்பிட்ட பல பழமையான இடங்கள் தொல்பொருள் ஆராய்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. “லூக்கா குறிப்பிட்ட முப்பத்தி மூன்று தேசங்கள், ஐம்பத்தி நாளு பட்டணங்கள் மற்றும் ஒன்பது தீவுகள் ஆகிய எல்லா இடங்களும் எந்தப் பிழையும் இல்லாமல் குறிப்பிடப்பட்டுள்ளன.”4

தொல்பொருள் ஆராய்சியாளர்கள் வேதாகமத்தை பற்றிய பல தவறான ஆதாரங் கோட்பாடுகளை மறுத்துள்ளனர். உதாரணத்திற்கு மோசே பஞ்சாகமத்தை (வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்கள்) எழுதியிருக்க முடியாது ஏனென்றால் அவர் இருந்த காலத்தில் எழுத்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தொல்பொருள் ஆராய்சியாளர்கள் கருப்பு கல்வெட்டுகளைக் கண்டுபிடித்துள்ளனர். “இதனில் ஹமுராபி விரிவான பிரமாணங்கள் ஆப்பு வடிவ எழுத்துக்களில் இருந்தன. இவைகள் மோசேயினுடைய காலத்திற்கு முந்தினதா? இல்லை இவைகள் மோசேயினுடைய காலத்திற்குப் பிந்தினதே அதுமட்டுமல்ல இவைகள் ஆபிரகாமின் காலத்திற்கு முந்தினவைகள் (கி.மு 2,000). அது குறைந்தது மோசேயை விட மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தியது.”5

வேதாகமத்தின் வரலாற்றுத் துல்லியங்களைத் தொல்பொருள் ஆரய்ச்சிகள் தொடர்ந்து உறுதிசெய்கின்றன.

2. காலப்போக்கில் வேத வசனங்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா அல்லது அது முதலில் எழுதப்பட்டவண்ணமே நம்மிடம் இருக்கிறதா?

வேதாகமம் பல காலங்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது எனவே இந்த மொழிபெயர்ப்பு நிலைகளில் இது சிதைவடைந்திருக்கிறது என்று பலர் நினைக்கின்றனர். மொழிபெயர்ப்பானது மற்ற மொழிகளிலிருந்து செய்யப்பட்டிருக்குமே ஆனால் இது சிதைவடைந்திருக்க வாய்பிருக்கிறது. ஆனால் மொழிபெயர்ப்பானது பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான மூல பிரதியின் படி மூல பாஷையான கிரேக்கம், எபிரேயம் மற்றும் அரமிக்கிலிருந்து நேரடியாகச் செய்யப்படுகிறது.

பழைய ஏற்பாட்டின் நம்பகதன்மை 1947 –ல் தொல் பொருள் ஆராய்சியில் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் மூலம் மற்றும் இஸ்ரவேலின் இன்றைய மேற்கு கரையின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளன. “சவக்கடல் சுருள்கள்” 1000 வருடத்திற்கும் பழைமையான நம்மிடம் இருக்கும் மூலபுத்தகங்களை விடப் பழமையான பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. நம்மிடம் இருக்கக் கூடிய 1000 வருடங்கள் பழமையான மூலபுத்தகங்களோடு ஒப்பிடும் போது இவைகள் 99.5 சதவீதம் ஒத்துப்போவதாக இருக்கிறது. 5 சதவீதம் மட்டும் வேறுபாடு காணப்படுகிறது அவைகளும் வார்த்தை பிழைகள் மற்றும் வாக்கியத்தின் அமைப்பு. இவைகள் எந்த விதத்திலும் வாக்கியத்தினுடைய அர்த்தத்தை மாற்றுவது இல்லை.

புதிய ஏற்பாடானது அதிக நம்பகத்தன்மையுள்ள பழமையான அவணம் ஆகும். நம்மிடம் ஆயிரக்கணக்கான புதிய ஏற்பாட்டுப் பிரதிகள் உள்ளன அவை அனைத்தும் அசல் பிரதியோடு ஒத்த சேதிகளிலே எழுதப்பட்டுள்ளன. பிலாட்டோ அல்லது அரிஸ்டாட்டில் அல்லது கோமர் இலியட் ஆகியவர்களின் எழுத்துக்கள் அவர்களால் எழுதப்பட்டவைகள் என்கிற நம்பகத்தன்மையை விட ஆசிரியர்களால் எழுதப்பட்ட படியே புதிய ஏற்பாடு யாரால் எழுதப்பட்டதோ அதே நிலைத்திருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

3. இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷப்புத்தகங்கள் நம்பத்தகுந்தவைகளா?

புதிய ஏற்பாட்டின் நான்கு ஆசிரியர்கள் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைத் தங்களுடைய கோணத்தில் எழுதியுள்ளனர். இவைகளே நான்கு சுவிசேஷப் புத்தகம் என்று அழைக்கப்படும் புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு புத்தகங்கள். இவர்களது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பை நாம் எப்படிச் சரியானது என்று நம்ப முடியும்.

வாழ்க்கை குறிப்பு சரியானதா என்று தீர்மானிக்கும் போது வரலாற்று வல்லுநர்கள் கேட்கும் முதல் கேள்வி: வேறு எந்த ஆவணமாவது இதே தகவல்களை இந்த நபரை குறித்துத் தருகின்றதா? நீங்கள் ஜனாதிபதி ஜான் கேன்னடி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சேகரிக்கிறீர்கள் என்று யூகித்துக்கொள்வோம். அவருடைய குடும்பம், பதவிக்காலம், அவர் கியூபா ஏவுகனை நெருக்கடியை அவர் கையாண்ட விதம் அகிய அனைத்து தகவல்களும் இவரைக் குறித்த மற்ற எல்லா வாழ்க்கை குறிப்புகளுக்கும் ஒத்ததாகவே காணப்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். ஆனால் ஒரு வாழ்க்கை குறிப்பு மட்டும் அவர் பத்து ஆண்டுகள் தென் ஆப்பிரிக்காவில் பாதிரியராகப் பணியாற்றினார் என்ற தகவல் கொடுத்து மற்ற அனைத்து வாழ்க்கை குறிப்புகளும் அவர் அமெரிக்காவில் வாழ்ந்தார் என்பதைக் குறிக்கும் போது என்ன செய்வீர்கள்? விவேகமான வராலற்றாசிரியர் மற்றவைகளோடு ஒத்துபோகும் தகவல்களையே ஏற்றுக்கொள்வார்கள்.

இயேசு கிறிஸ்துவை குறித்துப் பார்க்கும் போது, அவருடைய வாழ்க்கை வரலாற்றைக் குறித்த பலவிதமான அறிக்கையில் அவரைக் குறித்து ஒரே விதமான உண்மைகளைப் பார்கிறோமா? ஆம். இயேசுவை குறித்த பல வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் அவரைக் குறித்த உண்மையான தகவல்களைத் தருவில் ஒத்திருப்பதை இங்கு உதாரணமாகப் பார்க்கலாம்.

வேதாகமக் குறிப்புகள்மத்தேயுமாற்குலூக்காயோவான்
கன்னியின் வயிற்றில் இயேசு பிறந்தார்1:18-25-1:27-34-
அவர் பெத்தலகேமில் பிறந்தார்2:1-2:4-
அவர் நாசரேத்தில் வாழ்ந்தார்2:231:9-242:51,4:161:45-46
இயேசு யோவான் ஸ்நானகனிடத்தில் ஞானஸ்தானம் பெற்றார்3:1-151:4-93:1-22-
அவர் சுகப்படுத்தும் அற்புதங்களைச் செய்தார்4:24, மற்றும் பல1:34, மற்றும் பல4:40 மற்றும் பல9:7
அவர் தண்ணீரின் மேல் நடந்தார்14:256:48-6:19
அவர் ஜந்தாயிரம் பேரை ஜந்து அப்பம் மற்றும்
இரண்டு மீன்களைக் கொண்டு போசித்தார்
14:76:38. 79:136:9
இயேசு சதாரண மனிதர்களுக்குப் போதித்தார்5:14:25, 7:289:1118:20
சமுதாயத்தினால் புரக்கணிக்கப்பட்டவர்களோடு நேரங்களைச் செலவிட்டார்9:10, 21:312:15-165:29, 7:298:3
அவர் மதத் தலைவர்களோடு விவாதித்தார்15:77:612:568:1-58
மதத் தலைவர்கள் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டனர்12:143:619:4711:45-57
அவர்கள் இயேசுவை ரோமர்களிடம் ஒப்படைத்தனர்27:1-215:1023:118:28
இயேசு சவுக்கால் அடிக்கப்பட்டார்27:2615:15-19:1
அவர் சிலுவையில் அரையப்பட்டார்27:26-5015:22-3723:33-4619:16-30
அவர் கல்லரையில் அடக்கம்பண்ணப்பட்டார்27:57-6115:43-4723:50-5519:38-42
இயேசு உயிரோடு எழுந்து தன்னுடைய
சிஷர்களுக்குத் தரிசனமானார்
28:1-2016:1-2024:1-5320:1-31

இரண்டு சுவிசேஷப் புத்தகங்கள் இயேசுவை நன்கு தனிப்பட்ட முறையில் அறிந்த மற்றும் அவரோடு மூன்று ஆண்டுகள் வாழ்ந்த அப்போஸ்தலர் மத்தேயு மற்றும் யோவானால் எழுதப்பட்டவைகள். மற்ற இரண்டு புத்தகங்களும் அப்போஸ்தலரோடு நெருங்கியிருந்த மாற்கு மற்றும் லூக்காவினால் எழுதப்பட்டவைகள். அவர்கள் எழுதிய உண்மைகளோடு இந்த எழுத்தாளர்களுக்கு நேரடி தொடர்பு இருந்தது. ஆதி சபை இந்த நான்கு சுவிசேஷப் புத்தகங்களையும் ஏற்றுக்கொண்டது ஏனெனில் இவைகள் இயேசுகிறிஸ்து வாழ்க்கையைக் குறித்த ஏற்கனவே இருந்த பொதுவான தகவல்களே.

மேலும், சுவிசேஷ புத்தகமானது அவர் அவர்களுடைய கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட அனுதின நிகழ்வுகளின் செய்திகளை வாசிப்பது போலவே இருக்கிறது. விளக்கங்கள் ஒவ்வொருவருக்கும் தனிதன்மையானது ஆனால் நிகழ்வுகள் ஒன்ரோடு ஒன்று ஒத்திருக்கிறது. வரலாற்று வல்லூநர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்சியாளர்கள் உறுதிசெய்த இடங்களின் பெயர்கள் மற்றும் கலாச்சாரங்களைக் குறித்த தகவல்களைச் சுவிசேஷப் புத்தகங்கள் தருகின்றன.

4. வேதாகமம் இயேசுவை குறித்துச் சொன்னதை வரலாற்று வல்லுநர்கள் உறுதிபடுத்துகின்றனரா?

இயேசு அநேக அற்புதங்களைச் செய்தார், அவர் ரோமர்களால் சிலுவையில் அறையப்பட்டார் மற்றும் மூன்றாம் நாள் மரணத்திலிருந்து உயிரோடு எழுந்தார் என்று வேதாகமத்தில் வாசிக்கிறோம். இயேசுவினுடைய வாழ்க்கை மற்றும் அவருடைய சீஷர்களைக் குறித்த வேதாகம குறிப்புகளை எண்ணுக்கடங்காத பண்டைய வரலாற்று வல்லுநர்கள் உறுதிபடுத்துகின்றனர்:

கோர்நலியஸ் டக்டியஸ் (கி.பி 55-120), பண்டைய உலகின் மிகத் துல்லியமான வரலாற்று வல்லுநர்களுள் ஒருவரான முதல் நூற்றாண்டு ரோம வரலாற்று வல்லுநர் ஆவார்.6 டக்டியஸிடம் இருந்து வந்த வல்லுநர்கள் நம்மிடம் சொல்வது, ரோம ராயன் நீயூரோ கிறிஸ்டஸ் கிறிஸ்து என்ற பெயரிலிருந்து வந்த கிறிஸ்தவர்களை உபத்திரவப்படுத்தினான், அவர்கள் டிபேரியசின் ஆட்சி நாட்களில் ரோம பேரரசின் அதிகாரியாகிய போந்து பிலாத்துவின் கையில் மிகுந்த தண்டணைக்கு உட்படுத்தப்பட்டனர்...7

ஃபிலேவியஸ் ஜேசிபஸ், ஒரு யூதா வரலாற்று வல்லுநர் (கி.பி. 38-100), அவருடைய யூத தொன்மை நடைமுறைகளைக் குறிப்பிடும் போது இயேசுவை குறித்து எழுதியிருக்கிறார். “ஜேசிபஸ் இயேசுவை குறித்துக் குறிப்பிடும் போது அவர் ஆச்சரியமூட்டும் அற்புதங்கள் பல செய்தார், அநேகருக்கு போதித்தார், யூதா மற்றும் கிரேக்கர்களில் தனக்கு அநேக சீஷர்களைப் பெற்றிருந்தார், மேசியாவாக விசுவாசிக்கப்பட்டார், யூதா தலைவர்களால் குற்றம் சாட்டப்பட்டுப் பிலாத்துவினால் சிலுவையில் அறைய ஒப்புக்கொடுக்கப்பட்டார் மற்றும் உயிர்தொழுந்தவராகக் கருதப்பட்டார் என்று எழுதியிருக்கிறார்.”8

சுடோனியஸ், பிலினி தி ஏங்கர், மற்றும் தால்லஸ் ஆகியவர்களும் கிறிஸ்தவ ஆராதனை மற்றும் புதிய ஏற்பாட்டோடு ஒத்திருக்கிற உபத்திரவத்தையும் குறித்து எழுதியுள்ளனர்.

மேலும் யூதர்களின் வேதமான தல்முத் -ம் “இயேசுவுக்கு எதிராக ஒருபுறச்சாய்வானது அல்ல, இது இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகலில் கருத்து ஒன்றுபடுகிறது. இயேசு மணவாழ்க்கை மூலம் பிறந்தவர், சீஷர்களைச் சேர்த்துக்கொண்டார், அவரைக் குறித்துத் தேவ தூஷசனம் சொன்னார், அற்புதங்களைச் செய்தார், ஆனால் இந்த அற்புதங்கள் அசுத்த ஆவிகளினால் செய்தார் தேவன் மூலமாய் அல்ல என்று தல்முத்திலிருந்து நாம் அறிந்துக்கொள்கிறோம்.”9

இந்த அற்புதமான தகவல்களின் மூலம் அநேக பண்டைய வரலாற்று வல்லுநர்கள் அரசியல் மற்றும் இராணுவ தலைவர்களையே கருத்தில் கொண்டுள்ளனர் என்றும் ரோம இராஜூயத்திற்கு அப்பாற்பட்டு இருக்கும் புரிந்துகொள்ள முடியாத ஆசாரியர்களை அவர்கள் கவணத்தில்கொள்ளவில்லை என்றும் புரிந்துகொள்ள முடிகிறது. புதிய ஏற்பாட்டில் காணப்படும் அநேக நிகழ்வுகளை இந்தப் பண்டைய வரலாற்று வல்லுநர்கள் (யூதா, கிரேக்க மற்றும் ரோம) கிறிஸ்தவர்களாக இல்லாத போதிலும் உறுதிசெய்கின்றனர்.

5. வேதாகமத்தில் ஏதேனும் முரண்பாடு இருக்கிறதா?

வேதாகமம் முழுவதும் முரண்பாடானது என்று சிலர் சொல்வது உண்மையா? காணப்படும் முரண்பாடுகள் வேதாகமத்தின் அளவு மற்றும் வரையரையின் படி பார்க்கும் போது மிகக் குறைவானதே ஆகும். காணப்படும் முரண்பாடுகள் பிரச்சனையை அல்ல ஆர்வத்தையே எற்படுத்துகிறது. அவைகள் எந்த முக்கியமான நிகழ்வுகளையும் அல்லது விசுவாசத்தையும் தொடர்புடையவைகள் அல்ல.

இங்கு முரண்பாடுகள் என அழைக்கப்படுபவைகளின் சில உதாரணங்களைப் பார்க்கலாம். பிலாத்து இயேசு அறையப்படும் சிலுவையில் சிறு பலகை பெறிக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டான். மூன்று சுவிசேஷங்களும் அந்தப் பலகையில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று குறிப்பிடுகின்றன:
மத்தேயு: “இவர் யூதர்களின் இராஜாவாகிய இயேசு”
மாற்கு: “யூதர்களின் இராஜா”
யோவான்: “யூதர்களின் இராஜாவாகிய நசரேயனாகிய இயேசு”

வார்த்தைகளின் வித்தியாசம் ஒரு வேளை முரண்பாடாகக் காணப்படலாம். இங்குக் குறிப்பிடதக்கது என்னவென்றால், மூன்று ஆசிரியர்களும் ஒரே நிகழ்வை குறிக்கும் போது இதைக் குறிப்பிட்டிருக்கின்றனர். அது இயேசு சிலுவையில் அறையப்பட்டதே ஆகும். இதனில் அவர்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் இசைந்திருக்கின்றனர். மேலும் அவர்கள் அந்தச் சிறு பலகை சிலுவையின் மேல் பொறிக்கப்பட்டது மற்றும் அதனில் எழுதப்பட்ட வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதும் இம்முன்று சுவிசேஷத்திலும் காணப்படுகிறது.

எழுதப்பட்ட சரியான வார்த்தை என்ன? சுவிசேஷத்தின் மூல பாஷையான கிரேக்கத்தில் நாம் இன்று பயன்படுத்துவது போல் நேரடி குறியீட்டை அவர்கள் பயன்படுத்துவது இல்லை. சுவிசேஷ புத்தகத்தை எழுதியவர்கள் மறைமுகக் குறியீட்டை பயன்படுத்தியுள்ளனர் எனவே அவைகளே சிறிய வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கும்.

காணப்படும் முரண்பாட்டிற்கு மற்றொரு உதாரணத்தை இங்குக் காணலாம். இயேசு உயிர்தெழுவதற்கு முன் கல்லரையிலிருந்தது இரண்டு இரவுகளா அல்லது மூன்று இரவுகளா? இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு சொன்னார், “யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்” (மத்தேயு 12:40). மாற்கு இயேசு சொன்ன மற்றொரு வாக்கியத்தைக் குறிப்பிடுகிறார், “இதோ, எருசலேமுக்குப் போகிறோம், அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார். அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறதேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள். அவர்கள் அவரைப் பரியாசம் பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர் மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்;, ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.”(மாற்கு 10:33-34)

இயேசு வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்டார் மற்றும் அவர் ஞாயிற்றுகிழமை உயிர்தெழுந்தார் எனக் காணப்படுகிறது. எனவே இது எப்படி மூன்று இரவு மற்றும் மூன்று பகலாகக் கல்லரையில் இருந்திருப்பார்? இரவு அல்லது பகலின் எந்த ஒரு பகுதியும் ஒரு முழு நாளாகவும் இரவாகவும் கருதப்படுவது இயேசுவின் நாட்களில் இருந்த யூதர்களின் உருவக சொல்லாகும். எனவே இயேசுவின் கலாச்சாரத்தின் படி வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுகிழமை மூன்று நாள் மற்றும் மூன்று பகலாகக் கருதப்படுகிறது. இன்றைய தினத்திலும் இது போலவே நாம் பேசுகிறோம்-- நான் நாள் ழுமுவதும் பொருட்களை வாங்குவதில் செலவுசெய்தேன் என்று சொல்லும் போது அவர் 24 மணி நேரமும் அவ்வாறாகச் செலவிடவில்லை என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.

இது புதிய ஏற்பாட்டில் காணப்படும் தனிதன்மையான முரண்பாடுகள் ஆகும். அநேக முரண்பாடுகள் வசனத்தைக் குறிப்பாய் பார்க்கும் போது அல்லது வரலாற்றுப் பின்னனியத்தைப் படிக்கும் போது தீர்க்கப்படுகிறது.

6. இவைகள் தான் புதிய ஏற்பாட்டுப் புத்தகங்கள் என்று எப்படித் தீர்மானிக்கப்பட்டது? ஏன் இதனோடு தள்ளுபடி ஆகமம் (அப்போகிரிப்பா), யூதாவின் சுவிசேஷம் அல்லது தோமாவின் சுவிசேஷம் சேர்க்கப்படவில்லை?

இன்று புதிய ஏற்பாட்டிளுள்ள புத்தகங்களின் பட்டியலை நாம் விசுவாசிக்க முக்கியக் காரணங்கள் இருக்கிறது. புதிய ஏற்பாட்டுப் புத்தகங்கள் எழுதப்பட்ட உடன் அவைகள் சபைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்தப் புத்தகங்களை எழுதியவர்கள் இயேசுவின் சிநேகிதர்கள் அல்லது சீஷர்கள், இயேசுவினால் ஆதி சபையில் தலைமைத்துவத்தில் நிர்ணயிக்கப்பட்ட சீஷர்களின் சீஷர்கள். மத்தேயு மற்றும் யோவான் இயேசுவின் நெருங்கிய சீஷர்கள். மாற்கு மற்றும் லூக்கா அப்போஸ்தலர்களின் சீஷர்கள் அவர்கள் இயேசுவின் வாழ்கையைக் குறித்து அப்போஸ்தலர்கள் மூலம் அறிந்துக்கொண்டவர்கள்.

மற்ற புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் இயேசுவோடு நெருங்கிய தொடர்புடையவர்கள்: யாக்கோபு மற்றும் யூதா இயேசுவின் சகோதரர்கள். இவர்கள் முதலில் இயேசுவை விசுவாசிக்கவில்லை. பேதுரு அவருடைய 12 சீஷர்களுள் ஒருவர். பவுல் முதலில் கிறிஸ்தவத்தை வண்மையாக எதிர்ப்பவராகவும் மதக்குருக்களின் வம்சவழியில் வந்தவராகவும் இருந்தார். ஆனால் பின்பு இயேசு மரித்து உயிர்த்தார் என்பதை விசுவாசித்து அவருடைய ஆர்வமிக்கச் சீஷராக மாறினார்.

புதிய ஏற்பாட்டின் புத்தகங்கள்; ஆயிரக்கணக்கானவர்களின் சாட்சிகளையே வெளிப்படுத்துகிறது. எத்தனையோ புத்தகங்கள் நூறாண்டுகளக்கு பின்பு எழுதப்பட்டிருப்பினும் அவைகள் உண்மையானவைகள் அல்ல என்பதைச் சபை கண்டுக்கொள்வதில் எந்தக் கடினமும் இல்லை. உதாரணமாக. யூதாவின் சுவிசேஷம் யூதாவின் மரணத்திற்குப் பின்பு ஞானக் கோட்பாட்டாளர்களால் (ஞாஸ்டிக்) கி.பி. 130-170 ஆண்டுகளில் எழுதப்பட்டது. தோமாவின் சுவிசேஷம் கி.பி. 140ம் ஆண்டில் அப்போஸ்தலர்களின் பெயரில் எழுதப்பட்டது. இவைகள் மற்றும் அநேக ஞானக் கோட்பாட்டுச் சுவிசேஷங்கள் இயேசுவின்; மற்றும் பழைய ஏற்பாட்டின் உபதேசத்திற்கும் முரண்பட்டதாகவும் மற்றும் வரலாற்று மற்றும் இடங்களைக் குறித்த குறிப்புகளில் தவறுகளும் காணப்படுகின்றன.10

கி.பி 367 -ல் அதானாசியஸ் புதிய ஏற்பாட்டுப் புத்தகங்கள் 27 என்று குறிப்பிட்டார் (இன்று நம்மிடம் இருக்கும் அதே புத்தகங்கள் பட்டியல்). அதற்குப் பின்பு ஜெரோம் மற்றும் அகஸ்டின் இதே புத்தகங்களின் பட்டியலை வெளியிட்டனர். இந்தப் பட்டியல் அநேக கிறிஸ்தவர்களுக்குத் தேவை இல்லை என்ற போதிலும். கிறிஸ்துவின் மரணத்திற்குப் பின் இவைகளைப் பெருவாரியான சபைகள் இந்தப் புத்தகங்களில் பட்டியலை அங்கிகரித்துப் பயன்படுத்தி வந்தனர். சபையானது கிரேக்க மொழி பேசும் மக்களைக் கடந்து வளர்ந்த போது வசனங்களை மொழிபெயர்க்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டது மற்றும் பிரிவுகள் ஏற்பட்டன அவர்கள் அவர்களுடைய பரிசுத்த புத்தகங்களைப் பின்பற்றினர், இவைகள் நிறந்தரமான புத்தகப் பட்டியலை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உருவாக்கியது.

7. ஏன் புதிய ஏற்பாட்டு சுவிசேஷ புத்தகங்களை எழுத 30 லிருந்து 60 ஆண்டுகள் ஆனது?

இயேசுவின் மரணம் மற்றும் உயிர்தெழுதலுக்குப் பின் சுவிசேஷ புத்தகங்கள் எழுதப்படுவதற்கான காரணம் அவைகளுக்கான அவசியம் இல்லாததே முக்கியக் காரணம் ஆகும். முதலில் சுவிசேஷம் வாய் மொழியாக எருசலேம் பகுதிகளில் பிரஸ்தாபப்படுத்தப்பட்டது. எனவே இயேசுவின் வாழ்க்கையை எழுத்து வடிவில் அமைக்க அவசியம் இல்லை. ஏனென்றால் எருசலேமில் இருந்தவர்கள் இயேசுவின் சாட்சிகள் மற்றும் அவருடைய ஊழியத்தை நன்கு அறித்தவர்களாக இருந்தனர்.11

சுவிசேஷம் எருசலேமிற்க்கு அப்பாற்பட்ட பகுதிகளில் பிரசங்கிக்கப்பட்ட போது அங்குக் கண்கண்ட சாட்சிகள் இல்லை, எனவே இயேசுவின் வாழ்க்கை மற்றும் ஊழியத்தைக் குறித்த மற்றவர்களுக்குப் போதிக்கச் சுவிசேஷ புத்தகங்கள் எழுதப்பட வேண்டியதன் அவசியம் ஏற்பட்டது. அநேக இறை வல்லுநர்கள் சுவிசேஷ புத்தகங்கள் இயேசுவின் மரணத்திற்குப் பின் 30 இருந்து 60 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்டதாகக் குறிப்பிடுகின்றனர்.

லூக்கா தன்னுடைய சுவிசேஷத்தின் ஆரம்பத்தில் அதை எழுதுவதற்கான நோக்கத்தைக் குறிப்பிடுகிறார்: “மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை, ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால், ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று, அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாயத் தோன்றிற்று.

8. இயேசு உண்மையில் என்ன செய்தார் மற்றும் சொன்னார் என்று சுவிசேஷ புத்தகத்தில் சொல்லப்பட்டவைகள் முக்கியமானவைகளா?

ஆம். விசுவாசத்திற்கு ஏதேனும் மதிப்பு இருக்குமேயானால் அது உண்மை மற்றும் நிஜத்தின் அடிப்படியிலானது. ஏன் என்று இங்குப் பார்க்கலாம். நீங்கள் லண்டனுக்கு விமானத்தில் செல்ல தீர்மானிக்கும் போது, விமானம் பறக்கும் மற்றும் இயந்திரங்கள் நம்பத்தகுந்தது, விமானி பயிற்சி பெற்றவர் மற்றும் எந்தத் தீவிரவாதிகளும் விமானத்தில் இல்லை என்கிற விசுவாசம் உங்களுக்கு வேண்டும். எனினும் உங்கள் விசுவாசம் உங்களை லண்டனுக்குக் கொண்டு செல்வதில்லை. நீங்கள் விமானத்தில் ஏறுவதற்கு உங்களுடைய விசுவாசம் உதவியாக இருக்கும். ஆனால் விமானம் மற்றும் விமானியின் நாணயமே உங்களை லண்டனில் கொண்டு போய்ச் சேர்த்தது. நீங்கள் உங்களுடைய நேர்மறையான விமான அனுபவத்தைச் சார்ந்து கொள்ளலாம். ஆனால் உங்களின் நேர்மறையான அனுபவம் விமானத்தை லண்டனில் சேர்க்க போதுமானது அல்ல. விசுவாசத்தின் குறிக்கோளே இங்கு முக்கியம் ஆகும் - இது நம்பத்தகுந்ததாக இருக்கிறதா?

புதிய ஏற்பாடில் இயேசுவை குறித்த தகவல்கள் சரியானதா மற்றும் நம்பத்தகுந்ததா? ஆம். நாம் புதிய ஏற்பாட்டை நம்பலாம் ஏனென்றால் அநேக நம்பத்தகுந்த ஆதாரங்கள் அவைகளுக்கு இருக்கின்றன. இந்தக் கட்டுரை கீழ்கண்ட குறிப்புகளின் தகவல்களைத் தருகிறது: வரலாற்று வல்லுநர்களின் கருத்து ஒற்றுமை, தொல்பொருள் ஆராய்சியாளர்களின் கருத்து ஒற்றுமை, நான்கு சுவிசேஷத்தில் காணப்படும் வாழ்க்கை குறிப்புகளின் ஒற்றுமை, பாதுகாக்கப்பட்ட ஆவணத்தின் நகல் குறிப்பிடதக்கது, மொழிப்பெயர்ப்பு முழுமையாக நேர்த்தியாய் இருத்தல். இவை அனைத்தும் நாம் இன்று வாசிப்பது மூல முதலான ஆசிரியர்களால் தங்களின் வாழ்க்கiயில் உண்மை அனுபவம் மற்றும் மூல இடத்தில் இருந்து எழுதப்பட்டது என்பதை விசுவாசிக்கச் சரியான அடிப்படையாக இருக்கின்றது.

ஆசிரியர்களுல் ஒருவரான யோவான் சுருக்கமாகச் சொல்லுவது, “இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார். இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும் படியாகவம். இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.

--->> பார்க்க அப்போஸ்தலர் 2:22, அப்போஸ்தலர் 3:13, அப்போஸ்தலர் 4:13, அப்போஸ்தலர் 5:30, அப்போஸ்தலர் 5:42, அப்போஸ்தலர் 6:14, மேலும் பல (12) லூக்கா 1:1-3 (13) யோவான் 20:30,31

இந்த தகவல்கள் கீழ்க்காணும் தொகுப்புகளிலிருந்து அனுமதியுடன் எடுக்கப்பட்டவையாகும், 

(1) ஸ்ட்ரோபெல், லீ. கிறிஸ்துவிற்கான வழக்கு (சோண்டர்வன் பப்ளிஷிங் ஹவுஸ், 1998), ப. 132. (2) புகழ்பெற்ற யூத தொல்பொருள் ஆராய்ச்சியாளர் நெல்சன் குளூக் எழுதினார்: "எந்தவொரு தொல்பொருள் கண்டுபிடிப்பும் பைபிள் குறிப்பை ஒருபோதும் சர்ச்சைக்குரியதாக மாற்றவில்லை என்று திட்டவட்டமாகக் கூறலாம்." மெக்டோவல், ஜோஷ் மேற்கோள் காட்டினார். (3) ஸ்ட்ரோபெல், ப. 143-144. (4) கீஸ்லர், நார்மன் எல். பேக்கர் என்சைக்ளோபீடியா ஆஃப் கிறிஸ்டியன் அப்போலஜெடிக்ஸ் (கிராண்ட் ராபிட்ஸ்: பேக்கர், 1998). (5) மெக்டோவல், ஜோஷ். எவிடன்ஸ் தட் டிமாண்ட்ஸ் எ வெர்டிக்ட் (1972), ப. 19. (6) மெக்டோவல், ஜோஷ். தி நியூ எவிடன்ஸ் தட் டிமாண்ட்ஸ் எ வெர்டிக்ட் (தாமஸ் நெல்சன் பப்ளிஷர்ஸ், 1999), ப. 55. (7) டாசிடஸ், ஏ. 15.44. (8) வில்கின்ஸ், மைக்கேல் ஜே. & மோர்லேண்ட், ஜே.பி. ஜீசஸ் அண்டர் ஃபயர் (சோண்டர்வன் பப்ளிஷிங் ஹவுஸ், 1995), ப. 40. (9) ஐபிட். (10) புரூஸ், எஃப்.எஃப். தி புக்ஸ் அண்ட் தி பார்ச்மென்ட்: (ஃப்ளெமிங் எச். ரெவெல் கோ., 1950), ப. 113. (11)